• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, July 6, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மட்டக்களப்பில் போராட்டம்!

selvan by selvan
July 4, 2026
in இலங்கை செய்திகள்.
0
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மட்டக்களப்பில் போராட்டம்!
Share on FacebookShare on Twitter

இலங்கையில் போர் முடிவடைந்த காலகட்டத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களது பிள்ளைகளுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்தக் கோரியும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் மட்டக்களப்பில் இன்று (04.07.2026) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள் மற்றும் உறவினர்கள் பலர் கலந்துகொண்டு தங்களது ஆதங்கங்களையும் கோரிக்கைகளையும் பதாகைகள் மூலம் வெளிப்படுத்தினர்.

மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவி அ.அமலநாயகி தலைமையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சர்வதேச விசாரணைக்கான கோரிக்கை: “சிங்கள அரசு மற்றும் இராணுவத்திற்கு ஆதரவான, எம்மை ஏமாற்றும் உள்ளக நீதிப்பொறிமுறை எமக்கு வேண்டாம்… சர்வதேச விசாரணையை கோருகின்றோம்…” என முதன்மைப் பதாகையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அத்துடன், இந்த விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.

“போர் முடிவில் இராணுவத்திடம் சரணடைந்த எங்கள் குழந்தைகளுக்கு என்ன ஆனது?”, மற்றும் இராணுவத்தை நம்பி சரணடைந்த பிள்ளைகள் எவ்வாறு காணாமல் போனார்கள் போன்ற கேள்விகள் எழுப்பப்பட்ட பதாகைகளை உறவினர்கள் கண்ணீருடன் ஏந்தியிருந்தனர்.

அரசாங்கத்தின் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் ஒரு கண் துடைப்பு நாடகம் என்றும், தங்களுக்கு சர்வதேச நீதி விசாரணையே தேவை என்றும் போராட்டக்காரர்கள் உறுதியாகத் தெரிவித்தனர்.

நீண்ட காலமாகத் தொடரும் தங்களது நீதிக்கான போராட்டத்திற்கு முறையான தீர்வு கிடைக்க வேண்டும் என்றும், சர்வதேச சமூகம் இதில் தலையிட்டு தங்களுக்கு தகுந்த நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.

சிங்கள அரசு மற்றும் இராணுவத்திற்கு ஆதரவான, தங்களை ஏமாற்றுகின்ற எந்தவொரு உள்ளக நீதிப்பொறிமுறையும் தங்களுக்குத் தேவையில்லை எனப் போராட்டக்காரர்கள் இதன் போது தெரிவித்தனர்.

சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையினை முன்வைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களுக்கு நம்பகமான நீதி கிடைக்க வேண்டுமாயின், தமது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் காணாமலாக்கப்பட்டமை குறித்து ஒரு சர்வதேச விசாரணை மட்டுமே நடத்தப்பட வேண்டும் என இதன் போது வலியுறுத்தியுள்ளனர்.

போராட்டத்தின் போது, காணாமலாக்கப்பட்ட தங்களது பிள்ளைகளின் புகைப்படங்கள் மற்றும் அடையாள அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு தாய்மார்கள் மற்றும் உறவினர்கள் கண்ணீருடன் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன், சர்வதேச விசாரனை வேண்டும், எங்கே எங்கே உறவுகள் எங்கே போன்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Posts

இலங்கையைப் பாதுகாப்பது தொடர்பில் நிபுணர்களுடன் சஜித் அவசர ஆலோசனை.!

இலங்கையைப் பாதுகாப்பது தொடர்பில் நிபுணர்களுடன் சஜித் அவசர ஆலோசனை.!

by Mathavi
July 5, 2026
0

உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலாக உருவெடுத்து வரும் 'எல் நினோ' மற்றும் 'லா நினா' காலநிலை நிலைமைகளால் இலங்கைக்கு ஏற்படும் மோசமான தாக்கங்களைக் குறைத்துக் கொள்வது குறித்து எதிர்க்கட்சித்...

பலாலியில் 3ஆவது வாரமாகவும் போராட்டம் முன்னெடுப்பு.!

பலாலியில் 3ஆவது வாரமாகவும் போராட்டம் முன்னெடுப்பு.!

by Mathavi
July 5, 2026
0

பலாலி உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ள தங்களது பூர்வீகத் தனியார் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் மூன்றாவது வாரமாகவும் இன்று ஞாயிற்றுக்கிழமை வீதியில் இறங்கிப் பாரிய...

நீர்கொழும்பு சிறைக்குள் பயங்கர மோதல்; இரு கைதிகள் உயிரிழப்பு.!

நீர்கொழும்பு சிறைக்குள் பயங்கர மோதல்; இரு கைதிகள் உயிரிழப்பு.!

by Mathavi
July 5, 2026
0

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் இருதரப்பினரிடையே இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் ஏற்பட்ட பயங்கர வன்முறை மோதலில் இரு கைதிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இன்று மதியம் சிறைச்சாலை...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி; பெண் ஒருவர் கைது.!

போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது.!

by Mathavi
July 5, 2026
0

எப்பாவல மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பிரதேசங்களில் நீண்டகாலமாக சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த "தோணி" என்ற மாற்றுப்பெயரைக் கொண்ட பெண் ஒருவர்...

நீதித்துறைக்குள் அரசின் நேரடி அரசியல் தலையீடு.!

நீதித்துறைக்குள் அரசின் நேரடி அரசியல் தலையீடு.!

by Mathavi
July 5, 2026
0

உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதன் மூலம், தற்போதைய திசைகாட்டி அரசு நீதித்துறைக்குள் நேரடி அரசியல் தலையீடுகளை மேற்கொள்ள முயற்சிக்கின்றது என்று ஊழல்...

கேப்பாப்பிலவில் போராட்டம்; இராணுவ முகாம் வாயிலை முற்றுகையிட்ட மக்கள்.!

கேப்பாப்பிலவில் போராட்டம்; இராணுவ முகாம் வாயிலை முற்றுகையிட்ட மக்கள்.!

by Mathavi
July 5, 2026
0

இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்று 12 ஆவது நாளை...

அனைத்து உரிமைகளையும் பாதுகாக்கும் புதிய பயணத்தில் ஒன்றிணையுங்கள்.!

அனைத்து உரிமைகளையும் பாதுகாக்கும் புதிய பயணத்தில் ஒன்றிணையுங்கள்.!

by Mathavi
July 5, 2026
0

கட்சி, இனம், மத பாகுபாடுகளின்றி சகல மக்களினதும் உரிமைகளைப் பாதுகாக்கும் முற்போக்கான புதிய பயணத்தில் தங்களோடு இணைந்து கொள்ளுமாறு சிவில் சமூக அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும்...

தேர்தல் வைத்தால் பலத்த அடி விழும்; அரசுக்கு நாமல் எச்சரிக்கை.!

தேர்தல் வைத்தால் பலத்த அடி விழும்; அரசுக்கு நாமல் எச்சரிக்கை.!

by Mathavi
July 5, 2026
0

நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்து இராணுவ வீரர்கள் பெற்ற வெற்றிகளையும் அவர்களின் கௌரவத்தையும் தற்போதைய 'திசைகாட்டி' அரசு திட்டமிட்டுச் சிறுமைப்படுத்தி வருகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

தந்தையுடன் பாண் வாங்கச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்.!

தந்தையுடன் பாண் வாங்கச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்.!

by Mathavi
July 5, 2026
0

மாத்தறை மாவட்டம், பஸ்கொடை பிரதேசத்தில் உள்ள வீதியால் தந்தையுடன் நடந்து சென்ற 9 வயதுச் சிறுவன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இந்தக்...

யாழில் வாள்வெட்டுத் தாக்குதல்; மூவர் படுகாயம்.!

யாழில் வாள்வெட்டுத் தாக்குதல்; மூவர் படுகாயம்.!

by Mathavi
July 5, 2026
0

யாழ்ப்பாணம், நாவாந்துறை பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு மிக அருகில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று நடத்திய துணிகர வாள்வெட்டுத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி