• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 30, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் கைது.!

Mathavi by Mathavi
June 30, 2026
in இலங்கை செய்திகள்.
0
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் கைது.!
Share on FacebookShare on Twitter

தேசிய லொத்தர் சபையின் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளை மீறி, தன்னிச்சையாக மூவருக்கு நியமனங்களை வழங்கி அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், அச்சபையின் முன்னாள் தலைவர் ஷியாமலா பெரேரா இலஞ்ச, ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

பத்தரமுல்ல, பெலவத்த பகுதியைச் சேர்ந்த ஷியாமலா பெரேரா, இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

ஷியாமலா பெரேரா தேசிய லொத்தர் சபையின் தலைவராகக் கடமையாற்றிய காலப்பகுதியில், சபையின் ஊழியர் கட்டமைப்பில் அவ்வாறான பதவிகள் இல்லாத பின்னணியிலும், எவ்வித உத்தியோகபூர்வ வெற்றிடங்களுமின்றி மூன்று அதிகாரிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் சட்டவிரோதமாக நியமனங்களை வழங்கியுள்ளார். இரு ஒருங்கிணைப்பு அதிகாரிகள் மற்றும் ஒரு முகாமைத்துவ உதவி அதிகாரி ஆகியோருக்கே இவ்வாறு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் லொத்தர் சபையில் பணியாற்றவில்லை என்பதுடன், அவர்கள் அன்றைய தினங்களில் நிதி அமைச்சராகப் பதவி வகித்த ரவி கருணாநாயக்கவின் தனிப்பட்ட பணிக்குழாமில் சேவைக்காக அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் தேசிய லொத்தர் சபைக்கு இந்த அதிகாரிகளிடமிருந்து எவ்வித சேவைகளும் பெற்றுக்கொள்ளப்படாத நிலை நீடித்துள்ளது. எனினும், அவர்களுக்கான மாதாந்தச் சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் அனைத்தையும் லொத்தர் சபையின் அரச நிதியிலிருந்தே செலுத்துவதற்குத் தலைவர் ஷியாமலா பெரேரா நடவடிக்கை எடுத்துள்ளார் என்று விசாரணைகளில் மிகத் துல்லியமாகத் தெரியவந்துள்ளது.

அரச நிதியைத் திட்டமிட்டு முறைகேடாகப் பயன்படுத்தி ஊழல் புரிந்தமைக்காகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts

கொடூரமான படுகொ*லைகளைச் செய்துவிட்டு பிள்ளையான் நல்லவர் போல நடிப்பது வேடிக்கையானது!

கொடூரமான படுகொ*லைகளைச் செய்துவிட்டு பிள்ளையான் நல்லவர் போல நடிப்பது வேடிக்கையானது!

by selvan
June 30, 2026
0

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) என்பவர் கொடூரமான கொ*லைகளையும், பல்வேறு குற்றச் செயல்களையும் புரிந்தவர். அவருக்கான தக்க தண்டனையை நீதிமன்றம் நிச்சயம் வழங்கும் என்றும்...

மூத்த பத்திரிகையாளர் ஏ.என்.எஸ். திருச்செல்வத்தின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள்!

மூத்த பத்திரிகையாளர் ஏ.என்.எஸ். திருச்செல்வத்தின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள்!

by selvan
June 30, 2026
0

"மூத்த பத்திரிகையாளர் ஏ.என்.எஸ். திருச்செல்வத்தின் மறைவு பத்திரிகைத்துறைக்கு மாத்திரமல்ல சமூகத்துக்கும் ஏற்பட்ட இழப்பு" என 'தினக்குரல்' பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் வீரகத்தி தனபாலசிங்கம் தெரிவித்தார். காலமான...

தேர்தல்களில் போட்டியிட முடியாத ஆபத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி.!

தேர்தல்களில் போட்டியிட முடியாத ஆபத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி.!

by Mathavi
June 30, 2026
0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது எதிர்கொண்டுள்ள கடுமையான சட்ட மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு, அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து சுமூகமான சமரசத்துக்கு வருவதே ஒரே தீர்வு என்று நாடாளுமன்ற...

அறநெறி பாடசாலை ஆரம்பித்து வைப்பு.!

அறநெறி பாடசாலை ஆரம்பித்து வைப்பு.!

by Mathavi
June 30, 2026
0

வட்டவளை மீனாட்சி தோட்டத்தில் நேற்று 29.06.2026 ஆம் திகதி புதிதாக அறநெறி பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. சிறுவர்களின் எதிர்காலத்தை கல்வியால் உயர்த்துவோம் எனும் தொனிப்பொருளில் மீனாட்சி தோட்ட இளைஞர்...

அரச ஊழியர்களை மிக மோசமாக அவமதித்து வரும் அரசு.!

அரச ஊழியர்களை மிக மோசமாக அவமதித்து வரும் அரசு.!

by Mathavi
June 30, 2026
0

வரலாற்றில் என்றுமில்லாத வகையில் தற்போதைய அரசு அரச ஊழியர்களை மிக மோசமாக அவமதித்து வருகின்றது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச...

ஹட்டன் கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளராக சேவையாற்றி ஓய்வுபெறும் ஆசிர்வாதம் ஜோர்ஜ் வில்சன்.!

ஹட்டன் கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளராக சேவையாற்றி ஓய்வுபெறும் ஆசிர்வாதம் ஜோர்ஜ் வில்சன்.!

by Mathavi
June 30, 2026
0

ஹட்டன் கல்வி வலயத்தின் உதவிக் கல்விப்பணிப்பாளராக சேவையாற்றிய வணக்கத்திற்குரிய ஆசிர்வாதம் ஜோர்ஜ் வில்சன் அவர்கள் இன்றுடன் தனது 36 வருடகால கல்விப்பணியிலிந்து ஓய்வுபெறுகின்றார். ஆசிர்வாதம் ஜோர்ஜ் வில்சன்...

அதிவேக மோட்டார் சைக்கிள்கள், போலி இலக்கத் தகடுகளுடன் ஒருவர் கைது.!

அதிவேக மோட்டார் சைக்கிள்கள், போலி இலக்கத் தகடுகளுடன் ஒருவர் கைது.!

by Mathavi
June 30, 2026
0

அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹோகந்தர பகுதியில், நேற்று திங்கட்கிழமை (29) அதிவேக மோட்டார் சைக்கிள்கள், போலி இலக்கத் தகடுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் ஹோகந்தர பகுதியை...

புலிகள் பாவித்த ஸ்னைப்பர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பாம்.!

புலிகள் பாவித்த ஸ்னைப்பர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பாம்.!

by Mathavi
June 30, 2026
0

தமிழீழ விடுதலைப்புலிகள் பாவித்தத்தாக சந்தேகிக்கப்படும் ஸ்னைப்பர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை நேற்று திங்கட்கிழமை(29) மாலை சாகாமம் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...

வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்கள்; இருவர் உயிரிழப்பு.!

விபத்தில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு.!

by Mathavi
June 30, 2026
0

மாத்தளையிலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று, லொறியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 29 வயதுடைய இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்று அதிகாலை...

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை.!

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை.!

by Mathavi
June 30, 2026
0

கடுவளை, சுதர்ஷன மாவத்தையில் குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோக நிலையம் என்ற பெயரில் சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்து வந்த ஆலை ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்து, ஆறு சந்தேகநபர்களை...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி