• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 30, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

ஹட்டன் கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளராக சேவையாற்றி ஓய்வுபெறும் ஆசிர்வாதம் ஜோர்ஜ் வில்சன்.!

Mathavi by Mathavi
June 30, 2026
in இலங்கை செய்திகள்.
0
ஹட்டன் கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளராக சேவையாற்றி ஓய்வுபெறும் ஆசிர்வாதம் ஜோர்ஜ் வில்சன்.!
Share on FacebookShare on Twitter

ஹட்டன் கல்வி வலயத்தின் உதவிக் கல்விப்பணிப்பாளராக சேவையாற்றிய வணக்கத்திற்குரிய ஆசிர்வாதம் ஜோர்ஜ் வில்சன் அவர்கள் இன்றுடன் தனது 36 வருடகால கல்விப்பணியிலிந்து ஓய்வுபெறுகின்றார்.

ஆசிர்வாதம் ஜோர்ஜ் வில்சன் அவர்கள் ஆசிர்வாதம், மேரி ஆகியோரின் நான்காவது புதல்வராவர். இவர் தனது ஆரம்ப கல்வியை தரம் 1 முதல் 5 வரை கொத்மலை தேர்தல் தொகுதிக்குட்பட்ட ஹப்புகஜ்தலாவ, அல்கொல்ல தமிழ் வித்தியாலயத்திலும் அதன் பின் அல்மின் ஹாஜ் தேசிய கல்லூரியிலும் உயர் கல்வியை நாவலபிட்டி கதிரேசன் மத்திய கல்லூரிமற்றும் ஹைலன்ஸ் மத்திய கல்லூரியிலும் கற்றார்.

இவரின் முதல் நியமனமாக 1990.2.7 கணித பாட ஆசிரியராக வட்டவளை தமிழ் மகா வித்தியாலயத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். குறித்த பாடசாலையில் சேவையாற்றிய போது ஆசிரிய பற்றாக்குறை இருந்த போதும் அர்ப்பணிப்புடன் சேவையை வழங்கி இப்பகுதி மாணவர்கள் சிறந்த பெறுபேற்றினை பெற்றுக்கொள்ள காரணமாக இருந்தவர். அதுமட்டுமல்லாமல் இணைபாடவிதான செயற்பாடுகளில் புகழ்பெறுவதற்கும் காரணமாக இருந்தவர்.

தொடர்ந்து வட்டவளை மவுண்ஜீன் பாடசாலைக்கு அதிபராக 1995.3.8 நியமிக்கப்பட்டார். குறித்த பிரதேசத்தில் கல்வி ரீதியில் வளர்ச்சி பெறுவதற்கு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தார்.

குறித்த பாடசாலைக்கு இவரை நியமிக்கும் பொழுது ஒரு சிறிய தோட்ட உத்தியோகத்தரின் விடுதியில் இயங்கியது மட்டுமல்லாது அக்காலத்தில் 50 மாணவர்களை கொண்ட பாடசாலைகளை மூட அரசாங்கம் திட்டமிட்டிருந்த போதும் இவரின் இடைவிடாத முயற்சியினால் இப்பாடசாலை இன்று தரம் 11 வரை படிப்படியாக உயர்த்தப்பட்டு போதுமான கட்டிட வசதிகளையும், ஆசிரிய வளங்களையும் பெற்றுக்கொடுத்து இப்பிரதேச கல்வி வளர்ச்சிக்கு தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவராவார்.

குறித்த பாடசாலை அமைந்த தோட்டம் பின்தங்கிய பிரதேசமாகவிருந்த போதும் இப்பகுதியில் 15 க்கும் அதிகமான ஆசிரியர்கள் உருவாகுவதற்கான அடிதளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

தொடர்ந்து 1.1.2021 முதல் ஹட்டன் கல்வி வலயத்தில் உதவிக் கல்விப்பணிப்பாளராக இணைந்துகொண்டார். அங்கு ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பிரதேச மாணவர்களுடைய கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்தார்.

அவற்றில் பாடசாலை செல்லாத மாணவர்களுக்காக யுனிசேப் நிறுவனத்தின் நிதியிட்டலுடன் அம்மாணவர்களுக்கான 11 கற்றல் மையங்களை உருவாக்கி அவர்களை மீண்டும் பாடசாலைகளுக்கு அனுமதித்த பெருமை இவரையே சாரும்.

அதுமாத்திரமல்லாது வலய மட்டத்திலான கல்வி அபிவிருத்தி குழுவின் மூலமாக ஏற்படுத்தப்பட்ட எல்லா செயல்திட்டங்களிலும் அர்பணிப்புடன் சேவையாற்றியவர்.

தனது ஓய்வு காலம் வரை அதிபர் ஆசிரியர் மற்றும் பணிக்குழுவினர் ஆகியோரோடு மிக சிறப்பான வகையில் சேவையாற்றியதோடு கல்வி சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சேவையை சிக்கலின்றி முன்னெடுத்து செல்ல காரணமாகவும் செயற்பட்டவராவார்.

இதன் காரணமாக இவருடைய சேவை காலம் முடிவடையும் காலத்தில் இவரை அழைத்து அனேகமான பாடசாலைகள் சேவை நலன் பாரட்டு விழாக்களை நடாத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

இவருடைய ஒய்வு காலம் சிறப்பாக அமைய ஹட்டன் கல்வி வலய ஆசிரியர், அதிபர் மற்றும் பணிக்குழுவினர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றனர்.

Related Posts

அறநெறி பாடசாலை ஆரம்பித்து வைப்பு.!

அறநெறி பாடசாலை ஆரம்பித்து வைப்பு.!

by Mathavi
June 30, 2026
0

வட்டவளை மீனாட்சி தோட்டத்தில் நேற்று 29.06.2026 ஆம் திகதி புதிதாக அறநெறி பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. சிறுவர்களின் எதிர்காலத்தை கல்வியால் உயர்த்துவோம் எனும் தொனிப்பொருளில் மீனாட்சி தோட்ட இளைஞர்...

அரச ஊழியர்களை மிக மோசமாக அவமதித்து வரும் அரசு.!

அரச ஊழியர்களை மிக மோசமாக அவமதித்து வரும் அரசு.!

by Mathavi
June 30, 2026
0

வரலாற்றில் என்றுமில்லாத வகையில் தற்போதைய அரசு அரச ஊழியர்களை மிக மோசமாக அவமதித்து வருகின்றது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச...

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் கைது.!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் கைது.!

by Mathavi
June 30, 2026
0

தேசிய லொத்தர் சபையின் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளை மீறி, தன்னிச்சையாக மூவருக்கு நியமனங்களை வழங்கி அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், அச்சபையின் முன்னாள் தலைவர் ஷியாமலா பெரேரா...

அதிவேக மோட்டார் சைக்கிள்கள், போலி இலக்கத் தகடுகளுடன் ஒருவர் கைது.!

அதிவேக மோட்டார் சைக்கிள்கள், போலி இலக்கத் தகடுகளுடன் ஒருவர் கைது.!

by Mathavi
June 30, 2026
0

அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹோகந்தர பகுதியில், நேற்று திங்கட்கிழமை (29) அதிவேக மோட்டார் சைக்கிள்கள், போலி இலக்கத் தகடுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் ஹோகந்தர பகுதியை...

புலிகள் பாவித்த ஸ்னைப்பர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பாம்.!

புலிகள் பாவித்த ஸ்னைப்பர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பாம்.!

by Mathavi
June 30, 2026
0

தமிழீழ விடுதலைப்புலிகள் பாவித்தத்தாக சந்தேகிக்கப்படும் ஸ்னைப்பர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை நேற்று திங்கட்கிழமை(29) மாலை சாகாமம் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...

வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்கள்; இருவர் உயிரிழப்பு.!

விபத்தில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு.!

by Mathavi
June 30, 2026
0

மாத்தளையிலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று, லொறியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 29 வயதுடைய இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்று அதிகாலை...

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை.!

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை.!

by Mathavi
June 30, 2026
0

கடுவளை, சுதர்ஷன மாவத்தையில் குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோக நிலையம் என்ற பெயரில் சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்து வந்த ஆலை ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்து, ஆறு சந்தேகநபர்களை...

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இரண்டு சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு.!

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இரண்டு சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு.!

by Mathavi
June 30, 2026
0

பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள ரிதீமாலியத்த - குருவிதென்ன, தொட்டிலேயாய பகுதியில் அமைந்துள்ள லொக்கல்லா ஓயா நீர்த்தேக்கத்தில் படகு சவாரி செய்துகொண்டிருந்த இருவர் நீரில்...

வாகனம் மோதி சிறுத்தைக் குட்டி உயிரிழப்பு.!

வாகனம் மோதி சிறுத்தைக் குட்டி உயிரிழப்பு.!

by Mathavi
June 30, 2026
0

நேற்று (29) காலை 7.00 மணியளவில் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் செனன் (Shannon) பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், தாயைப் பிரிந்திருந்த சிறுத்தை குட்டி...

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்.!

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்.!

by Mathavi
June 30, 2026
0

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி