• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 30, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

அரச ஊழியர்களை மிக மோசமாக அவமதித்து வரும் அரசு.!

Mathavi by Mathavi
June 30, 2026
in இலங்கை செய்திகள்.
0
அரச ஊழியர்களை மிக மோசமாக அவமதித்து வரும் அரசு.!
Share on FacebookShare on Twitter

வரலாற்றில் என்றுமில்லாத வகையில் தற்போதைய அரசு அரச ஊழியர்களை மிக மோசமாக அவமதித்து வருகின்றது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச குற்றம் சாட்டினார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விசனத்தை வெளியிட்டார்.

அவர் அங்கு மேலும் சாடியதாவது,
“கடந்த காலத்தில் அரச ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சொந்தமாக வாகனங்களைப் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளுடன் கூடிய உன்னதமான எதிர்காலம் ஒன்று உருவாக்கிக் கொடுக்கப்பட்டது. ஆனால், தற்போதைய ஆட்சியில் அவர்களுக்கு வெறும் 20 கிலோ அரிசியைக் கடனாக வழங்கும் அவல நிலையே நாட்டில் காணப்படுகிறது.

இந்த நாட்டின் அரச ஊழியர்களே பெருந்திரளாகத் திரண்டு சென்று தபால் மூலம் வாக்களித்து இந்த ஆட்சியை உருவாக்கப் பாரிய பங்களிப்பை வழங்கினார்கள். ஆனால், இன்று அதே அரச ஊழியர்களை ‘திருடர்கள்’ என்று அமைச்சர் லால் காந்த பகிரங்கமாக விமர்சித்து வருகின்றார். அரச ஊழியர்களை இவ்வளவு தூரம் அவமதிக்கும் மற்றும் பழிவாங்கும் ஒரு நிர்வாகம் இதற்கு முன்னர் இலங்கையில் இருந்ததில்லை. இது வரலாற்றிலேயே மிக மோசமானதொரு ஆட்சியாகும்.

தற்போதைய அரசிடம் நாட்டின் வளர்ச்சிக்கான எந்தவொரு முறையான பொருளாதாரத் திட்டமும் இல்லை. தினம் இருவரை என்ற கணக்கில் கைது செய்வது மட்டுமே இந்த அரசின் பிரதான வேலைத்திட்டமாக மாறியுள்ளது.

ஏதாவது ஒரு குற்றச்சாட்டைச் சுமத்தி, தினமும் இருவர் வீதம் அரசியல் பழிவாங்கல்களின் அடிப்படையில் கைது செய்து, அதன் மூலமே இந்த அரசு தங்களைத் தக்கவைத்துக் கொள்ளப் பார்க்கின்றது என விமல் வீரவன்ச கடுமையாகக் குற்றம் சாட்டினார்.

Related Posts

தேர்தல்களில் போட்டியிட முடியாத ஆபத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி.!

தேர்தல்களில் போட்டியிட முடியாத ஆபத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி.!

by Mathavi
June 30, 2026
0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது எதிர்கொண்டுள்ள கடுமையான சட்ட மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு, அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து சுமூகமான சமரசத்துக்கு வருவதே ஒரே தீர்வு என்று நாடாளுமன்ற...

அறநெறி பாடசாலை ஆரம்பித்து வைப்பு.!

அறநெறி பாடசாலை ஆரம்பித்து வைப்பு.!

by Mathavi
June 30, 2026
0

வட்டவளை மீனாட்சி தோட்டத்தில் நேற்று 29.06.2026 ஆம் திகதி புதிதாக அறநெறி பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. சிறுவர்களின் எதிர்காலத்தை கல்வியால் உயர்த்துவோம் எனும் தொனிப்பொருளில் மீனாட்சி தோட்ட இளைஞர்...

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் கைது.!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் கைது.!

by Mathavi
June 30, 2026
0

தேசிய லொத்தர் சபையின் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளை மீறி, தன்னிச்சையாக மூவருக்கு நியமனங்களை வழங்கி அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், அச்சபையின் முன்னாள் தலைவர் ஷியாமலா பெரேரா...

ஹட்டன் கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளராக சேவையாற்றி ஓய்வுபெறும் ஆசிர்வாதம் ஜோர்ஜ் வில்சன்.!

ஹட்டன் கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளராக சேவையாற்றி ஓய்வுபெறும் ஆசிர்வாதம் ஜோர்ஜ் வில்சன்.!

by Mathavi
June 30, 2026
0

ஹட்டன் கல்வி வலயத்தின் உதவிக் கல்விப்பணிப்பாளராக சேவையாற்றிய வணக்கத்திற்குரிய ஆசிர்வாதம் ஜோர்ஜ் வில்சன் அவர்கள் இன்றுடன் தனது 36 வருடகால கல்விப்பணியிலிந்து ஓய்வுபெறுகின்றார். ஆசிர்வாதம் ஜோர்ஜ் வில்சன்...

அதிவேக மோட்டார் சைக்கிள்கள், போலி இலக்கத் தகடுகளுடன் ஒருவர் கைது.!

அதிவேக மோட்டார் சைக்கிள்கள், போலி இலக்கத் தகடுகளுடன் ஒருவர் கைது.!

by Mathavi
June 30, 2026
0

அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹோகந்தர பகுதியில், நேற்று திங்கட்கிழமை (29) அதிவேக மோட்டார் சைக்கிள்கள், போலி இலக்கத் தகடுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் ஹோகந்தர பகுதியை...

புலிகள் பாவித்த ஸ்னைப்பர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பாம்.!

புலிகள் பாவித்த ஸ்னைப்பர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பாம்.!

by Mathavi
June 30, 2026
0

தமிழீழ விடுதலைப்புலிகள் பாவித்தத்தாக சந்தேகிக்கப்படும் ஸ்னைப்பர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை நேற்று திங்கட்கிழமை(29) மாலை சாகாமம் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...

வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்கள்; இருவர் உயிரிழப்பு.!

விபத்தில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு.!

by Mathavi
June 30, 2026
0

மாத்தளையிலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று, லொறியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 29 வயதுடைய இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்று அதிகாலை...

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை.!

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை.!

by Mathavi
June 30, 2026
0

கடுவளை, சுதர்ஷன மாவத்தையில் குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோக நிலையம் என்ற பெயரில் சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்து வந்த ஆலை ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்து, ஆறு சந்தேகநபர்களை...

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இரண்டு சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு.!

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இரண்டு சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு.!

by Mathavi
June 30, 2026
0

பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள ரிதீமாலியத்த - குருவிதென்ன, தொட்டிலேயாய பகுதியில் அமைந்துள்ள லொக்கல்லா ஓயா நீர்த்தேக்கத்தில் படகு சவாரி செய்துகொண்டிருந்த இருவர் நீரில்...

வாகனம் மோதி சிறுத்தைக் குட்டி உயிரிழப்பு.!

வாகனம் மோதி சிறுத்தைக் குட்டி உயிரிழப்பு.!

by Mathavi
June 30, 2026
0

நேற்று (29) காலை 7.00 மணியளவில் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் செனன் (Shannon) பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், தாயைப் பிரிந்திருந்த சிறுத்தை குட்டி...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி