உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

செம்மணியில் உடைந்த நிலையில் எலும்புக்கூடுகள்: ஆய்வுகளின் பின்னரே உண்மை வெளிவரும் என்கிறார்  சட்டத்தரணி நிரஞ்சன்

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
25 பார்வைகள்

“புதைக்கப்பட்ட இடங்களில் இருந்து மீண்டும் தோண்டி எலும்புக்கூடுகள் புதைக்கப்பட்டிருக்கின்றமை சாதாரணமாகவே கண்களுக்கு தெரிகின்றன. ஆனால் இது தொடர்பான விசாரணைகள் மூலமே உண்மையான முடிவுகளை கூற முடியும்.” – என்று செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்தார்.

“நேற்றுமுன்தினம் தாடைப்பகுதி உடைந்த நிலையில் உடைந்த தாடை நெஞ்சுப் பகுதியில் காணப்பட்டது. இவ்வாறு பல எலும்புக்கூடுகள் பல பகுதிகளில் உடைந்த நிலையில் காணப்படுகின்றன. அது தொடர்பான ஆய்வுகள் எதாவது மேற்கொள்ளப்படுகின்றதா?” என்று  ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து உடைந்த நிலையில் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்படுகின்றமை தொடர்பாக சட்ட வைத்திய அதிகாரியால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.

புதைக்கப்படும்போது எலும்புக்கூடுகள் உடைந்த நிலையில் இருந்தனவா அல்லது பிற்பாடு நடைபெற்ற நிகழ்வுகளால் எலும்புக்கூடுகளில் உடைவுகள் ஏற்பட்டனவா என்பது தொடர்பில் ஆய்வுகளின் பின்னரே முழுமையான தகவல்களைப் பெற முடியும்.

செம்மணி மனித புதைப்குழியில் அடையாளம் காணப்படும் எலும்புக்கூடுகள் நேர்சீராக இல்லாமல் இருப்பதைப் பார்க்கக்கூடியதாக உள்ளது.

புதைக்கப்பட்ட இடங்களில் இருந்து மீண்டும் தோண்டி எலும்புக்கூடுகள் புதைக்கப்பட்டிருக்கின்றமை சாதாரணமாகவே கண்களுக்குத் தெரிகின்றன. ஆனால் இது தொடர்பான விசாரணைகள் மூலமே உண்மையான முடிவுகளைக் கூற முடியும்

மேலும் செம்மணி மனிதப் புதைகுழியை நீதி அமைச்சர் ஹர்ஷன  நாணயக்கார பார்வையிடவுள்ளார் என்று ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டோம். ஆனால் இன்னமும் நீதிமன்றத்திடம் அதற்கான விண்ணப்பம் செய்யப்படவில்லை.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொ*லை செய்த கணவன்.!

அநுராதபுரம், கொரகஹவெவ பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, அதே ஆயுதத்தால் தன்னையும் குத்திக்கொண்டு உயிரை மாய்க்க…

20 0 0
இலங்கை செய்திகள்

கண்டி தலதா பெரஹராவை கண்டுகளித்தார் ஜனாதிபதி.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் இறுதி மகா ரந்தோலி பெரஹரா நேற்று முன்தினம் இரவு வீதி உலா வந்த…

41 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிக்கு யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு, எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கு, கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்திலே “நீதிக்கான நீள் பயணம்” என்று…

62 0 0
இலங்கை செய்திகள்

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்.!

மன்னார் மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் (LRC) கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை மன்னார் மாவட்ட…

67 0 0