• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 16, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

செம்மணியில் உடைந்த நிலையில் எலும்புக்கூடுகள்: ஆய்வுகளின் பின்னரே உண்மை வெளிவரும் என்கிறார்  சட்டத்தரணி நிரஞ்சன்

selvan by selvan
June 16, 2026
in இலங்கை செய்திகள்.
0
செம்மணியில் உடைந்த நிலையில் எலும்புக்கூடுகள்: ஆய்வுகளின் பின்னரே உண்மை வெளிவரும் என்கிறார்  சட்டத்தரணி நிரஞ்சன்
Share on FacebookShare on Twitter

“புதைக்கப்பட்ட இடங்களில் இருந்து மீண்டும் தோண்டி எலும்புக்கூடுகள் புதைக்கப்பட்டிருக்கின்றமை சாதாரணமாகவே கண்களுக்கு தெரிகின்றன. ஆனால் இது தொடர்பான விசாரணைகள் மூலமே உண்மையான முடிவுகளை கூற முடியும்.” – என்று செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்தார்.

“நேற்றுமுன்தினம் தாடைப்பகுதி உடைந்த நிலையில் உடைந்த தாடை நெஞ்சுப் பகுதியில் காணப்பட்டது. இவ்வாறு பல எலும்புக்கூடுகள் பல பகுதிகளில் உடைந்த நிலையில் காணப்படுகின்றன. அது தொடர்பான ஆய்வுகள் எதாவது மேற்கொள்ளப்படுகின்றதா?” என்று  ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து உடைந்த நிலையில் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்படுகின்றமை தொடர்பாக சட்ட வைத்திய அதிகாரியால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.

புதைக்கப்படும்போது எலும்புக்கூடுகள் உடைந்த நிலையில் இருந்தனவா அல்லது பிற்பாடு நடைபெற்ற நிகழ்வுகளால் எலும்புக்கூடுகளில் உடைவுகள் ஏற்பட்டனவா என்பது தொடர்பில் ஆய்வுகளின் பின்னரே முழுமையான தகவல்களைப் பெற முடியும்.

செம்மணி மனித புதைப்குழியில் அடையாளம் காணப்படும் எலும்புக்கூடுகள் நேர்சீராக இல்லாமல் இருப்பதைப் பார்க்கக்கூடியதாக உள்ளது.

புதைக்கப்பட்ட இடங்களில் இருந்து மீண்டும் தோண்டி எலும்புக்கூடுகள் புதைக்கப்பட்டிருக்கின்றமை சாதாரணமாகவே கண்களுக்குத் தெரிகின்றன. ஆனால் இது தொடர்பான விசாரணைகள் மூலமே உண்மையான முடிவுகளைக் கூற முடியும்

மேலும் செம்மணி மனிதப் புதைகுழியை நீதி அமைச்சர் ஹர்ஷன  நாணயக்கார பார்வையிடவுள்ளார் என்று ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டோம். ஆனால் இன்னமும் நீதிமன்றத்திடம் அதற்கான விண்ணப்பம் செய்யப்படவில்லை.” – என்றார்.

Related Posts

மாலைதீவு பிரதிநிதிகள் கல்முனைக்கு விஜயம்

மாலைதீவு பிரதிநிதிகள் கல்முனைக்கு விஜயம்

by selvan
June 16, 2026
0

YWMA பேரவையின் ஒருங்கிணைப்பில் மாலைதீவு “Neurodiversity Association – Male” அமைப்பின் துணைத் தலைவி Aminath Azeema அவர்கள் கல்முனைக்கு வருகை தந்துள்ளார். இஸ்லாமிய புத்தாண்டான முஹர்ரம்...

கடமை நேரத்தில் பிரதேச சபை ஊழியர்களைக் கொண்டு தனது வீட்டுக்கு வர்ணம் பூச வைத்த உத்தியோகத்தர்!

கடமை நேரத்தில் பிரதேச சபை ஊழியர்களைக் கொண்டு தனது வீட்டுக்கு வர்ணம் பூச வைத்த உத்தியோகத்தர்!

by selvan
June 16, 2026
0

மானிப்பாய் பிரதேச சபையின் நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளர்கள் இருவரை அவர்களுக்கு மேலுள்ள உத்தியோகத்தர் ஒருவர் தனது வீட்டுக்கு வர்ணம் பூச அழைத்துச் சென்றதாக மானிப்பாய் பிரதேச...

முடிவுக்கு வந்துவிட்டது திசைகாட்டி அரசின் ஆயுள்!

முடிவுக்கு வந்துவிட்டது திசைகாட்டி அரசின் ஆயுள்!

by selvan
June 16, 2026
0

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சலேக்கு எதிராக தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் பழிவாங்கும் விசாரணைகள் மற்றும் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் குறித்துப்...

சங்கீத்ஷனின் அடிப்படை உரிமை மீறல் மனு ஒத்திவைப்பு!

சங்கீத்ஷனின் அடிப்படை உரிமை மீறல் மனு ஒத்திவைப்பு!

by selvan
June 16, 2026
0

சொல்லிசைப் பாடகர் க.சங்கீத்ஷன் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட போது அதை ஆட்சேபித்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு இன்று...

மருத்துவர்கள் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு வழங்குமாறு கோரி ரவிகரன் எம்.பி. கடிதம்

மருத்துவர்கள் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு வழங்குமாறு கோரி ரவிகரன் எம்.பி. கடிதம்

by selvan
June 16, 2026
0

சுதேச மருத்துவ சேவையில் பதிலீடு இன்றி வழங்கப்பட்ட இடமாற்றங்களால் ஏற்பட்டுள்ள மருத்துவர்கள் பற்றாக்குறையை சுட்டிக்காட்டி, அவற்றுக்கு உடனடி தீர்வு வழங்குமாறு வடமாகாண சுதேச வைத்தியத்துறை திணைக்கள ஆணையாளர்...

தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிப்பு!

தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிப்பு!

by selvan
June 16, 2026
0

2026ம் ஆண்டு வரவு செலவுதிட்ட ஒதுக்கீட்டின் கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக செயல்படுத்தப்படும் 'தமக்கென ஓர் இடம் -அழகான வாழ்க்கை" தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ்...

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு.!

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு.!

by Mathavi
June 16, 2026
0

மீள்குடியேற்ற அமைச்சின் கீழ் 2026ஆம் ஆண்டு வரவு செலவுதிட்ட ஒதுக்கீட்டின் கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக செயல்படுத்தப்படும் 'தமக்கென ஓர் இடம் - அழகான வாழ்க்கை'...

புதுக்குடியிருப்பு பாண்டியன் வீதி பாலம் அமைக்கும் பணிகள் ஆரம்பம்; நேரடியாக சென்று பார்வையிட்ட ரவிகரன் எம்.பி.!

புதுக்குடியிருப்பு பாண்டியன் வீதி பாலம் அமைக்கும் பணிகள் ஆரம்பம்; நேரடியாக சென்று பார்வையிட்ட ரவிகரன் எம்.பி.!

by Mathavi
June 16, 2026
0

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களது தொடர்ச்சியான வலியுறுத்தலையடுத்து கடந்த டித்வா பேரனர்த்தத்தின்போது உடைப்பெடுத்த முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, பாண்டியன்வீதி பாலத்தை புதிதாக அமைக்கும்...

பண மோசடி தடுப்புச் சட்ட வழக்கில் யோஷிதவின் மனு மீதான விசாரணைகள் நிறைவு.!

பண மோசடி தடுப்புச் சட்ட வழக்கில் யோஷிதவின் மனு மீதான விசாரணைகள் நிறைவு.!

by Mathavi
June 16, 2026
0

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தனக்கெதிராகச் சுமத்தப்பட்டுள்ள "சதித்திட்டம்" என்ற குற்றச்சாட்டைத் தள்ளுபடி செய்யக் கோரி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ தாக்கல்...

ஈஸ்டர் தாக்குதலின் உண்மைத் தன்மையை மூடிமறைக்காது உரிய விசாரணை நடத்துக.!

ஈஸ்டர் தாக்குதலின் உண்மைத் தன்மையை மூடிமறைக்காது உரிய விசாரணை நடத்துக.!

by Mathavi
June 16, 2026
0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதக் குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரிகளை உடனடியாகக் கண்டறிந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக நீதியைப் பெற்றுத்தர வலியுறுத்தி, கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி