• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 2, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

அநுர அரசுக்கு அரச நிர்வாக அனுபவம் கிடையாது; நாட்டை வழிநடத்த திலித் ஜயவீரவே தகுதியானவர்.!

Mathavi by Mathavi
June 2, 2026
in இலங்கை செய்திகள்.
0
அநுர அரசுக்கு அரச நிர்வாக அனுபவம் கிடையாது; நாட்டை வழிநடத்த திலித் ஜயவீரவே தகுதியானவர்.!
Share on FacebookShare on Twitter

ஜே.வி.பி அல்லது தேசிய மக்கள் சக்திக்கு அரச நிர்வாகம் குறித்த எந்தவொரு அனுபவமும் கிடையாது என்பது நாட்டு மக்கள் அனைவரும் அறிந்ததே என்றும், இத்தகைய சூழலில் நாட்டை முறையாக நிர்வகிக்கத் தயாராகவுள்ள ஒரே தலைவர் திலித் ஜயவீர மட்டுமே என்றும் சர்வஜன அதிகாரம் கட்சியின் தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் அழைப்பாளர் சட்டத்தரணி நளின் பத்திரன தெரிவித்தார்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-
“2022ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடி அன்றைய அரசைப் பதவியிறக்கி, அன்றைய ஜனாதிபதியையும் வீட்டுக்கு அனுப்பி மாற்றத்தை ஏற்படுத்தினர். அந்தப் போராட்டத்துக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த அரசு, மக்கள் ஓரளவு நிம்மதியாக வாழ்வதற்கான சூழலை உருவாக்கியதுடன், போராட்டக் காலத்துக்கு முந்தைய எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகளைக் மிகக் குறுகிய காலத்துக்குள் குறைத்து மக்களுக்கு நிவாரணங்களை வழங்கியது. அந்தக் காலகட்டத்தில்தான், மறுமலர்ச்சி என்ற கோஷத்துடன் தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தது.

நாட்டைச் சுபீட்சமான நாடாக மாற்றி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு இலட்சம் ரூபா வருமானம் ஈட்டிக்கொடுப்பதாகவும், மின்சாரக் கட்டணத்தை மூன்றில் இரண்டு பங்காகக் குறைப்பதாகவும், எரிபொருள் விலைகளைக் குறைத்து மக்களுக்குச் சிறந்த வாழ்வை வழங்குவதாகவும் வாக்குறுதி அளித்தே இவர்கள் ஆட்சிக்கு வந்தனர். ஆனால், இன்று மறுமலர்ச்சியின் உண்மையான விபரீத விளைவுகளை மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

ஜே.வி.பி. மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய இரு தரப்பினரும் தற்காலிகமாக அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் கூட்டணி அமைத்தே ஆட்சியைக் கைப்பற்றினர். நாட்டின் பிரதான கட்சிகளுக்கிடையில் நிலவிய அதிகார மோதலால், நாட்டின் சொத்துக்களை அழித்து, மனிதர்களைக் கொன்று, ஆட்சி இயந்திரத்தைச் சீர்குலைத்த, ஒருபோதும் அதிகாரத்துக்கு வரக்கூடாத ஒரு தரப்பினரே இன்று ஆட்சியில் அமர்ந்துள்ளனர்.

அரச நிர்வாகம் குறித்த எந்தவொரு அனுபவமும் இல்லாத இவர்கள், தமக்குக் கிடைத்த ஒரேயொரு பிரதேச சபையைக்கூட நிர்வகிக்கும் திறன் இல்லாமல் செயற்பட்டனர். இவர்களின் வாக்கு வங்கி எப்போதும் மூன்று சதவீதத்துக்குள்தான் இருந்தது. பிரதான கட்சிகளுக்கிடையில் நிலவிய அதிகார மோதலின் விளைவாகவே, இன்று இவர்கள் அதிகாரத்துக்கு வரக்கூடிய துரதிர்ஷ்டவசமான நிலை ஏற்பட்டதுடன், பொய்யான பிரச்சாரங்களை முன்னெடுத்தே இவர்கள் ஆட்சியைக் கைப்பற்றினர்.

இன்று நாட்டில் மீண்டும் எரிபொருள் நெருக்கடி தலைதூக்கியுள்ளது. அரசாங்கம் பதவியேற்ற காலத்துடன் ஒப்பிடும்போது, எரிபொருட்களின் விலை பெருமளவு உயர்த்தப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட போர்ச் சூழல் காரணமாகவே எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதாக அரசு கூறினாலும், அது முற்றிலும் பொய்யான கூற்றாகும். இக்காலகட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் எரிபொருள் விலைகளைக் குறைத்துள்ள நிலையில், இலங்கையில் மட்டும் 140 சதவீதத்துக்கும் மேல் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரே, ஜூலை மாதம் இறுதி வரை தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த எரிபொருள் ஏழு மாதங்களுக்கு முன்பே கொள்வனவு செய்யப்பட்டதாகும். அப்படியிருக்கையில், சர்வதேசப் போரைக் காரணம்காட்டி விலையை உயர்த்துவது மக்களை ஏமாற்றும் செயலாகும். தற்போதைய அரசால் நாட்டை நிர்வகிக்க முடியாது என்பது இன்று ஊர்ஜிதமாகியுள்ளதுடன், மக்கள் மீண்டும் ஒரு போராட்டத்திற்குத் தயாராகி வருகின்றனர்.

எனவே, இன்னும் மக்களை ஏமாற்ற முற்படாமல், இப்போதே இந்த ஆட்சியை மக்கள் தூக்கி எறியும் நிலையை உருவாக்காமல், நாட்டை நிர்வகிக்கக்கூடிய தகுதியுடைய ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைக்குமாறு அரசைக் கோருகின்றோம்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கக்கூடிய, அந்தத் தகுதியும் திறமையும் கொண்ட எமது தலைவர் திலித் ஜயவீர தற்போது நாட்டைப் பொறுப்பேற்கத் தயாராக உள்ளார். நாட்டை முன்னேற்றத் தகுதியுள்ள ஒருவரிடம் அதிகாரத்தை வழங்கி, அப்பாவி மக்களை மீண்டும் நெருக்கடிக்குள் தள்ளும் இந்தச் செயலை உடனடியாக நிறுத்துமாறு அரசை வலியுறுத்துகின்றோம்.” – என்றார்.

Related Posts

சந்தேகத்திற்கிடமான முறையில் புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம் மீட்பு!

சந்தேகத்திற்கிடமான முறையில் புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம் மீட்பு!

by selvan
June 2, 2026
0

சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில், சேற்று நிலமொன்றில் புதைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணொருவரின் உடலம், தெல்தெனிய - ரங்கல பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இக்கொலைச் சம்பவம் சுமார் ஒரு...

நாடு முழுவதும் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கி“ஆயிரம் கிராமங்களுக்கு ஆயிரம் வேலைத் திட்டங்கள்” செயற்றிட்டம் ஆரம்பம்.

நாடு முழுவதும் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கி“ஆயிரம் கிராமங்களுக்கு ஆயிரம் வேலைத் திட்டங்கள்” செயற்றிட்டம் ஆரம்பம்.

by selvan
June 2, 2026
0

தேசிய வறுமை ஒழிப்பு வேலைத் திட்டமான “பிரஜா சக்தி” திட்டத்துடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படும் “ஆயிரம் கிராமங்களுக்கு ஆயிரம் வேலைத்திட்டங்கள்” திட்டத்தின் கீழ், நாட்டின் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய...

ஊடகவியலாளர் நடேசன் அவர்களுக்கு  சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தால் நினைவேந்தல்

ஊடகவியலாளர் நடேசன் அவர்களுக்கு சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தால் நினைவேந்தல்

by selvan
June 2, 2026
0

2004 ஆம் ஆண்டு மட்டக்களப்பு பகுதியில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசன் அவர்களுக்கு சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தால் பருத்தித்துறை பகுதியில் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிரேஸ்ட...

தாயகப் பாடலை எடிட் செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பாடகர் யாழில் கைது!

தாயகப் பாடலை எடிட் செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பாடகர் யாழில் கைது!

by selvan
June 2, 2026
0

தாயக எழுச்சிப் பாடலை எடிட் செய்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட கிளிநொச்சியை சேர்ந்த பாடகர் ஒருவர் இன்றையதினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரியில் வைத்து யாழ்ப்பாணம்...

மக்களை ஆட்சியின் அங்கமாக்குவதே ‘பிரஜா சக்தி’! – பிரதமர் ஹரிணி தெரிவிப்பு

மக்களை ஆட்சியின் அங்கமாக்குவதே ‘பிரஜா சக்தி’! – பிரதமர் ஹரிணி தெரிவிப்பு

by selvan
June 2, 2026
0

'பிரஜா சக்தி' வேலைத்திட்டமானது தற்போதைய மக்கள்நேய அரசாங்கத்தின் ஜனநாயகப் பண்புகளை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய பகுதி என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கிராமிய அபிவிருத்தி,...

ஸ்ரீலங்கா காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்கு 536 மில்லியன் ரூபாய் நிகர நட்டம் ஏற்பட்டுள்ளது!

ஸ்ரீலங்கா காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்கு 536 மில்லியன் ரூபாய் நிகர நட்டம் ஏற்பட்டுள்ளது!

by selvan
June 2, 2026
0

ஸ்ரீலங்கா காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தில் வாடிக்கையாளர்களின் வைப்புப் பணத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட 6 பில்லியன் ரூபாய் திறைசேரிப் பிணைமுறி முதலீட்டு விவகாரத்தினால், கூட்டுத்தாபனத்திற்கு 536 மில்லியன் ரூபாய் நிகர...

நாம் கொண்டு வந்த ‘சங்காதிகரண’ சட்டமூலத்தை அன்று எதிர்த்துவிட்டு இன்று ‘தர்மாதிகரணம்’ பேசுவது வேடிக்கையானது!

நாம் கொண்டு வந்த ‘சங்காதிகரண’ சட்டமூலத்தை அன்று எதிர்த்துவிட்டு இன்று ‘தர்மாதிகரணம்’ பேசுவது வேடிக்கையானது!

by selvan
June 2, 2026
0

தாம் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சராக இருந்தபோது 'சங்காதிகரண' (சங்க நீதிமன்றம்) சட்டமூலத்தைக் கொண்டு வந்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாஸ...

மாஃபியாக்கள் மற்றும் ஊழல்கள் காரணமாகவே எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது!

மாஃபியாக்கள் மற்றும் ஊழல்கள் காரணமாகவே எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது!

by selvan
June 2, 2026
0

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்த போதிலும் இலங்கையில் நிறுவனங்களின் மாஃபியாக்கள் மற்றும் ஊழல்கள் காரணமாகவே எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி பலத்த...

செம்மணி மனித புதைகுழியில் தோண்டத் தோண்ட எலும்புக்கூடுகள்!

செம்மணி மனித புதைகுழியில் தோண்டத் தோண்ட எலும்புக்கூடுகள்!

by selvan
June 2, 2026
0

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் 5 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் இரண்டாம் பகுதி...

பாதுகாப்புப் பிரதியமைச்சர் திருகோணமலைக்கு விஜயம்! – காணி விவகாரங்கள் குறித்து ஆராய்வதாக உறுதி

பாதுகாப்புப் பிரதியமைச்சர் திருகோணமலைக்கு விஜயம்! – காணி விவகாரங்கள் குறித்து ஆராய்வதாக உறுதி

by selvan
June 2, 2026
0

பாதுகாப்புப் பிரதியமைச்சர் அருண ஜயசேகர இன்று செவ்வாய்க்கிழமை முதன்முறையாகத் திருகோணமலை மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட சந்திப்பின்போது அவர் பொதுமக்களை...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி