• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 2, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

நாம் கொண்டு வந்த ‘சங்காதிகரண’ சட்டமூலத்தை அன்று எதிர்த்துவிட்டு இன்று ‘தர்மாதிகரணம்’ பேசுவது வேடிக்கையானது!

selvan by selvan
June 2, 2026
in இலங்கை செய்திகள்.
0
நாம் கொண்டு வந்த ‘சங்காதிகரண’ சட்டமூலத்தை அன்று எதிர்த்துவிட்டு இன்று ‘தர்மாதிகரணம்’ பேசுவது வேடிக்கையானது!
Share on FacebookShare on Twitter

தாம் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சராக இருந்தபோது ‘சங்காதிகரண’ (சங்க நீதிமன்றம்) சட்டமூலத்தைக் கொண்டு வந்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர்,

அச்சட்டம் காரணமாகவே இன்று விகாரைகளும் பௌத்த சின்னங்களும் ஓரளவு பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும்,

இல்லையெனில் அவை எப்போதோ விற்கப்பட்டிருக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாம் கொண்டு வந்த அந்தச் சட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

ஏதேனும் தவறுகள் நடக்கும் பட்சத்தில், அந்தந்த நிகாயாக்களின் தலைமைகளுக்குச் சட்டப்படி உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரம் இன்றும் உள்ளது.

எனினும், அன்று இரண்டு மூன்று தேரர்களின் எதிர்ப்புக் காரணமாக இந்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்ற முடியாமல் போனதால், இன்று அதனை நடைமுறைப்படுத்துவதற்கான முழுமையான அதிகாரம் இல்லாமல் போயுள்ளது குறித்துக் கவலை அடைகின்றேன்.

அரசாங்கத்தின் தற்போதைய வரைவிலக்கணத்தின்படி மதம் என்பது ஒரு பழங்குடித்தனமான விடயமாகவே பார்க்கப்படுகின்றது.

அவ்வாறான ஓர் அரசாங்கம் எவ்வாறு சங்காதிகரணத்தைக் கொண்டுவரும்?

தாம் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் கொண்டு வந்த சட்டம் அன்று நிறைவேற்றப்பட்டிருந்தால், இன்று பௌத்த சாசனத்தையோ அல்லது தேரர்களையோ எவரும் தூற்றவும், சாசனம் சீரழியவும் வாய்ப்பிருந்திருக்காது.

தற்போது நீதித்துறையில் நான்கு நீதிபதி பதவிகள் நீண்டகாலமாக வெற்றிடமாக உள்ளன.

சில நீதிபதிகள் இந்த வெற்றிடங்கள் நிரப்பப்படாத நிலையிலேயே ஓய்வுபெற்றும் சென்றுள்ளனர்.

இவ்வாறான நிலையில் மக்களுக்கு எவ்வாறு நீதி கிடைக்கும்?

நிர்வாகத்துறையும் அரசமைப்பும் நீதித்துறை வெற்றிடங்களை நிரப்பாதபோது, இவர்கள் எவ்வாறு சங்காதிகரணத்தை அமைப்பார்கள்?

நமது வாழ்நாளில் மிக மோசமான பொருளாதாரக் காலத்தை 2022 இல் எதிர்கொண்டோம்.

அன்று முழு அதிகாரத்துடன் இருந்த அரசாங்கம் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்ய முடியாமல் வீட்டுக்குச் சென்ற பின்னர், நாடாளுமன்றத்தில் ஒரேயொரு ஆசனத்தைக் கொண்டிருந்த ரணில் விக்ரமசிங்க, அரசாங்கத்தின் எஞ்சியிருந்த சில உறுப்பினர்களின் ஆதரவோடு ஆட்சிக்கு வந்தார்.

அன்று 6.4 பில்லியன் டொலராக இருந்த பொருளாதாரத்தை நாம் கட்டியெழுப்பினோம்.

2028ஆம் ஆண்டளவில் கடனை மீளச் செலுத்த வேண்டுமாயின், அதனை 15 பில்லியன் டொலராக உயர்த்த வேண்டும் என்ற திட்டம் எங்களிடம் இருந்தது.

எனினும், தற்போது 500 மில்லியன் டொலர் எல்லைக்குள் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் நாட்டுக்கு அவசியமானவையா?

அவை அனைத்தும் தற்போது விற்பனை நிலையங்களிலேயே தேங்கிக் கிடக்கின்றன.

சர்வதேச நாணய நிதியம் தங்கியிருக்கும் வீடுகளுக்கு வரி விதிக்குமாறு கோரிய போதிலும், மக்களுக்கு மேலும் சுமையளிக்கக் கூடாது என்பதால் நாம் அதனைச் செய்யவில்லை.

மத்திய வங்கி சுயாதீனமாக இயங்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றாலும், முறையான முகாமைத்துவம் இல்லாததால் அது நம் நாட்டுக்குப் பொருத்தமற்றதாகிவிட்டது.

தற்போது நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான திசையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது.

வட்டி வீதக் கொள்கை 7.7 ஆக இருந்தபோது அதனை மேலும் உயர்த்தியதன் மூலம் இந்தத் தீர்வை எட்ட முடியுமா?

வட்டி வீதம் அதிகரிக்கும் போது கைத்தொழில்துறையினர் கடன் பெற மாட்டார்கள் என்பதால் பொருளாதாரம் முடங்கும்.

அரசு வங்கிகளின் இலாபம் 10 பில்லியனாகவும், தனியார் வங்கிகளின் இலாபம் 4 முதல் 5 பில்லியனாகவும் இருந்த நிலையில், கடந்த ஐந்து வருடங்களில் இந்த வங்கிகளின் இலாபம் ஐந்து மடங்காக அதிகரித்துள்ளது.

தற்போதுஉள்நாட்டு இறைவரித் திணைக்களத்திலும், வங்கிகளிலும் பணம் குவிந்து கிடக்கிறதே தவிர முதலீடுகள் செய்யப்படுவதில்லை.

உலகின் எந்தவொரு நாடும் பொக்கிஷங்களில் பணத்தைப் பூட்டி வைப்பதில்லை.

நாடு வளர்ச்சியடைய வேண்டுமாயின் அந்தப் பணம் சந்தைக்கு வர வேண்டும்.

இவ்வளவு பணம் உள்நாட்டில் இருக்கும்போது, ஏன் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 1,900 மில்லியன் டொலர் கடனைப் பெற்று அதற்கு வீணாக வட்டி செலுத்த வேண்டும்?

நமது நாடு வீழ்ச்சியடைவதையே வெளிநாடுகள் விரும்புகின்றன.

‘அரகலய’ போராட்டக் காலம் தொட்டே இலங்கையை வீழ்த்துவதற்கு வெளிநாட்டுச் சக்திகள் திட்டமிட்டுச் செயற்பட்டு வருகின்றன.” – என்றார்.

Related Posts

ஊடகவியலாளர் நடேசன் அவர்களுக்கு  சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தால் நினைவேந்தல்

ஊடகவியலாளர் நடேசன் அவர்களுக்கு சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தால் நினைவேந்தல்

by selvan
June 2, 2026
0

2004 ஆம் ஆண்டு மட்டக்களப்பு பகுதியில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசன் அவர்களுக்கு சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தால் பருத்தித்துறை பகுதியில் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிரேஸ்ட...

தாயகப் பாடலை எடிட் செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பாடகர் யாழில் கைது!

தாயகப் பாடலை எடிட் செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பாடகர் யாழில் கைது!

by selvan
June 2, 2026
0

தாயக எழுச்சிப் பாடலை எடிட் செய்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட கிளிநொச்சியை சேர்ந்த பாடகர் ஒருவர் இன்றையதினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரியில் வைத்து யாழ்ப்பாணம்...

மக்களை ஆட்சியின் அங்கமாக்குவதே ‘பிரஜா சக்தி’! – பிரதமர் ஹரிணி தெரிவிப்பு

மக்களை ஆட்சியின் அங்கமாக்குவதே ‘பிரஜா சக்தி’! – பிரதமர் ஹரிணி தெரிவிப்பு

by selvan
June 2, 2026
0

'பிரஜா சக்தி' வேலைத்திட்டமானது தற்போதைய மக்கள்நேய அரசாங்கத்தின் ஜனநாயகப் பண்புகளை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய பகுதி என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கிராமிய அபிவிருத்தி,...

ஸ்ரீலங்கா காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்கு 536 மில்லியன் ரூபாய் நிகர நட்டம் ஏற்பட்டுள்ளது!

ஸ்ரீலங்கா காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்கு 536 மில்லியன் ரூபாய் நிகர நட்டம் ஏற்பட்டுள்ளது!

by selvan
June 2, 2026
0

ஸ்ரீலங்கா காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தில் வாடிக்கையாளர்களின் வைப்புப் பணத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட 6 பில்லியன் ரூபாய் திறைசேரிப் பிணைமுறி முதலீட்டு விவகாரத்தினால், கூட்டுத்தாபனத்திற்கு 536 மில்லியன் ரூபாய் நிகர...

மாஃபியாக்கள் மற்றும் ஊழல்கள் காரணமாகவே எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது!

மாஃபியாக்கள் மற்றும் ஊழல்கள் காரணமாகவே எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது!

by selvan
June 2, 2026
0

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்த போதிலும் இலங்கையில் நிறுவனங்களின் மாஃபியாக்கள் மற்றும் ஊழல்கள் காரணமாகவே எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி பலத்த...

செம்மணி மனித புதைகுழியில் தோண்டத் தோண்ட எலும்புக்கூடுகள்!

செம்மணி மனித புதைகுழியில் தோண்டத் தோண்ட எலும்புக்கூடுகள்!

by selvan
June 2, 2026
0

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் 5 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் இரண்டாம் பகுதி...

பாதுகாப்புப் பிரதியமைச்சர் திருகோணமலைக்கு விஜயம்! – காணி விவகாரங்கள் குறித்து ஆராய்வதாக உறுதி

பாதுகாப்புப் பிரதியமைச்சர் திருகோணமலைக்கு விஜயம்! – காணி விவகாரங்கள் குறித்து ஆராய்வதாக உறுதி

by selvan
June 2, 2026
0

பாதுகாப்புப் பிரதியமைச்சர் அருண ஜயசேகர இன்று செவ்வாய்க்கிழமை முதன்முறையாகத் திருகோணமலை மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட சந்திப்பின்போது அவர் பொதுமக்களை...

அரச வருமான நிறுவனங்களில் ஊழலை ஒழிக்க ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல்.!

அரச வருமான நிறுவனங்களில் ஊழலை ஒழிக்க ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல்.!

by Mathavi
June 2, 2026
0

இலங்கையின் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளைப் பலப்படுத்தும் நோக்கில், அரசாங்கத்தின் பிரதான வருமானம் ஈட்டும் நிறுவனங்களில் நிறுவப்பட்டுள்ள 'உள்ளக விவகாரப் பிரிவுகளின்' செயற்பாடுகள் மற்றும் '2025 - 2029...

வவுனியா மாநகர சபை, முதல்வர் மீதான தடை நீக்கம்!

வவுனியா மாநகர சபை, முதல்வர் மீதான தடை நீக்கம்!

by selvan
June 2, 2026
0

வவுனியா மாநகர சபை, முதல்வர் மீதானதடையை உயர்நீதிமன்றம் விலக்கியுள்ளது. எனினும் பிரதி முதல்வர் மீதான தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா மாநகர சபை மற்றும் அதன்...

தியாகி பொன். சிவகுமாரனின் நினைவேந்தல்; வெள்ளிக்கிழமை உரும்பிராயில் நிகழ்வு.!

தியாகி பொன். சிவகுமாரனின் நினைவேந்தல்; வெள்ளிக்கிழமை உரும்பிராயில் நிகழ்வு.!

by Mathavi
June 2, 2026
0

தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தான தியாகி பொன். சிவகுமாரனின் 52ஆவது நினைவேந்தல் நிகழ்வு, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) காலை 8 மணிக்கு வலிகாமம்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி