• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 25, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

செப்டெம்பரில் இந்த ஆட்சியை விரட்ட மாபெரும் மக்கள் போராட்டம் வெடிக்கும்.!

Mathavi by Mathavi
May 25, 2026
in இலங்கை செய்திகள்.
0
செப்டெம்பரில் இந்த ஆட்சியை விரட்ட மாபெரும் மக்கள் போராட்டம் வெடிக்கும்.!
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசுக்கு இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகும் எதிர்வரும் செப்டெம்பர் 22ஆம் திகதி, இந்த ஆட்சியை விரட்டியடிப்பதற்கான மாபெரும் மக்கள் போராட்டத்தை நாங்கள் வீதியில் இறங்கி ஆரம்பிப்போம் என்று ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க பகிரங்கமாக அறிவித்தார்.

“பொய்யையும் திருட்டையும் ஒன்றாக தோற்கடிப்போம்” எனும் தொனிப்பொருளில் கூட்டு எதிர்க்கட்சிகள் இணைந்து கம்பஹா, ஜா-எல பிரதேசத்தில் நடத்திய பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த அதிரடிப் போராட்டப் பிரகடனத்தை மேற்கொண்டார்.

இந்த அரசு ஆட்சிக்கு வந்து 18 மாதங்கள் கடந்துள்ள போதிலும், அவர்களால் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட அனைத்து வேலைத்திட்டங்களும் இன்று முற்றாகத் தோல்வியடைந்துள்ளன என்றும் சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,
“தூய்மையான நாட்டை உருவாக்குவதாகக் கூறி ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்துக்கு மக்களின் எதிர்ப்பு கிளம்பியதால், அது தற்போது செயலிழந்து போயுள்ளது. இதன் விளைவாக இன்று நகரெங்கும் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன.

சம்பத் மனம்பேரி என்பவருக்குச் சொந்தமான போதைப்பொருள் அடங்கிய 2 கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டன என்று பாரிய விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால், அவை சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட அதே காலப்பகுதியில்தான் விடுவிக்கப்பட்டுள்ளன. அதேபோல் நுவரெலியாவில் ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய நிறுவனம் குறித்தோ, கடல் மார்க்கமாகக் கடத்தப்பட்டு ‘சாந்த’ என்பவருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்த 2 லொறி போதைப்பொருட்கள் குறித்தோ தற்போது எவ்வித விசாரணைகளும் இல்லை.

‘டித்வா’ புயல் அனர்த்தம் ஏற்பட்டு 6 மாதங்கள் கடந்தும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் இன்னும் சீரமைக்கப்படவில்லை. ரயில் பாதைகளும் திருத்தப்படாமல் முடங்கிக் கிடக்கின்றன.

வாகன இறக்குமதி வரி அதிகரிப்புக்கு விடுக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்குப் பின்னால் பாரிய ஊழல் மோசடி ஒளிந்திருக்கின்றது.

வாகன இறக்குமதிக்கான வரியை 50 வீதத்தால் அதிகரித்து ஜனாதிபதி வர்த்தமானி வெளியிடுவதற்கு ஒரு நாளைக்கு முன்னர், அரசுக்கு நெருக்கமான குறிப்பிட்ட சில வர்த்தகர்களுக்கு மட்டும் அந்தத் தகவல் முன்கூட்டியே கசிந்துள்ளது.

சாதாரணமாக நாள் ஒன்றுக்கு 2.2 மில்லியன் டொலருக்கு மட்டுமே வாகன இறக்குமதிக்கான வங்கி கடன் பற்றுப்பத்திரங்கள் திறக்கப்பட்டு வந்த பின்னணியில், இந்த வர்த்தமானி வருவதற்கு முந்தைய 3 நாட்களில் மட்டும் திடீரென 43 மில்லியன் டொலருக்கு எல்.சி திறக்கப்பட்டுள்ளது. அநுரகுமாரவின் அரசிலும் தமக்கு நெருக்கமான உற்ற நண்பர்களுக்குச் சலுகை வழங்கும் ‘குரோனி கலாச்சாரம்’ தடையின்றி அரங்கேறுகின்றது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான டொலர் தட்டுப்பாடு மற்றும் நாளுக்கு நாள் டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதற்கு மத்திய கிழக்கு யுத்தத்தைக் காரணம் காட்டி அரசு தப்பிக்க முயல்கின்றது.

மத்திய கிழக்கு யுத்தம் அல்ல, அரசின் பிழையான பொருளாதார முகாமைத்துவமே டொலர் நெருக்கடிக்கு உண்மையான காரணம்.

பொருட்களின் விலையேற்றத்தால் மக்கள் வாழ முடியாத நிலையை இந்த அரசு தோற்றுவித்துள்ளது. எதிர்க்கட்சிகளின் போராட்டங்களை ஒடுக்குவதற்காக விடுக்கப்படும் அச்சுறுத்தல்களுக்கு நாம் பணியப்போவதில்லை.

எதிர்வரும் செப்டெம்பர் 22 இல் இந்த ஆட்சிக்கு எதிராக நாங்கள் தொடங்கும் போராட்டத்தை முடக்க எங்களைச் சிறையில் அடைக்கலாம் அல்லது எமது பிரஜா உரிமைகளை இல்லாமல் செய்து எங்களை அச்சுறுத்த நினைக்கலாம். ஆனால், தற்போதைய கூட்டு எதிர்க்கட்சியினர் எதற்கும் அச்சப்படப் போவதில்லை. அரசால் பாதுகாக்கப்பட்ட போதைப்பொருள் வியாபாரிகள் அனைவரையும் ஒருநாளில் நாங்கள் சட்டத்தின் முன் நிறுத்துவது உறுதி.” – என்றார்.

Related Posts

மன்னார் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கு எதிராக மூவர் அடங்கிய விசாரணைக் குழு நியமனம்.!

மன்னார் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கு எதிராக மூவர் அடங்கிய விசாரணைக் குழு நியமனம்.!

by Mathavi
May 25, 2026
0

வெற்றுக் காசோலைகளில் மோசடியாக ஒப்பமிட்டமை தொடர்பான முறைப்பாடுகளுக்கு அமைவாக மன்னார் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எம்.சாந்தசீலனை விசாரணை செய்வதற்காக மூவர் அடங்கிய விசாரணைக்குழு ஒன்றை வடமாகாண...

சற்றுமுன் இடம்பெற்ற விபத்து; பெண்ணொருவர் உயிரிழப்பு.!

சற்றுமுன் இடம்பெற்ற விபத்து; பெண்ணொருவர் உயிரிழப்பு.!

by Mathavi
May 25, 2026
0

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கரடிப்போக்கு உருத்திரபுரம் பகுதியில் இன்று நண்பகல் இடம்பெற்றவிபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் இரண்டு எதிர் எதிரே மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது....

சுனாமி காரணமாக பாதிக்கப்பட்ட கட்டடத்தை சுற்றி பாதுகாப்பு வேலி அமைப்பு.!

சுனாமி காரணமாக பாதிக்கப்பட்ட கட்டடத்தை சுற்றி பாதுகாப்பு வேலி அமைப்பு.!

by Mathavi
May 25, 2026
0

சுனாமி பேரனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட கட்டடம் மக்கள் பாவனைக்கு எப்போது விடப்படும் என செய்தி ஒன்று கடந்த சில வாரங்களுக்கு முன்னர் எமது ஊடகம் பிரசுரித்திருந்தது. இச்செய்தியில்...

குளங்களில் மீன் குஞ்சுகளை விடும் திட்டம் ஆரம்பம்.!

குளங்களில் மீன் குஞ்சுகளை விடும் திட்டம் ஆரம்பம்.!

by Mathavi
May 25, 2026
0

டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் குளங்களில் மீன் குஞ்சுகளை விடும் திட்டத்தின் கீழ் தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார...

மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு.!

மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு.!

by Mathavi
May 25, 2026
0

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையிலிருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன 19 வயது இளைஞனின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. கல்முனைக்குடி கடற்பகுதியில் வைத்து தேடுதல்...

அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தை வைத்து சுரேஷ் சலே மீது பழி சுமத்துவது அரசியல் சதியே.!

அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தை வைத்து சுரேஷ் சலே மீது பழி சுமத்துவது அரசியல் சதியே.!

by Mathavi
May 25, 2026
0

வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள அசாத் மௌலானாவின் போலியான வாக்குமூலத்தின் அடிப்படையில், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதக் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சுரேஷ் சலே என்று பிரதி சொலிசிட்டர்...

தோட்டத் தொழிலாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.!

தோட்டத் தொழிலாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.!

by Mathavi
May 25, 2026
0

பெருந்தோட்டப் பகுதிகளில் அண்மைக் காலமாக தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொண்டு வரும் வீடு மற்றும் காணிப் பிரச்சினைகள் தீவிரமடைந்து வருகின்றன. பல வருடங்களாக தங்களது சொந்தச் செலவில் இலட்சக்கணக்கான...

பொருளாதார நெருக்கடியை தீர்க்கக்கூடிய வரைபடம் உண்டு; பொறுப்பை தந்தால் இந்த நொடியே சாதிப்பேன்.!

பொருளாதார நெருக்கடியை தீர்க்கக்கூடிய வரைபடம் உண்டு; பொறுப்பை தந்தால் இந்த நொடியே சாதிப்பேன்.!

by Mathavi
May 25, 2026
0

முறையான மற்றும் அறிவியல் ரீதியான வேலைத்திட்டம் இன்றி எந்தவொரு பொறுப்பையும் ஏற்பது தவறு என்றும், தற்போதைய பொருளாதார நெருக்கடியைக் கையாள்வதற்குரிய தெளிவான வரைபடம் தன்னிடம் உள்ளதால் இன்று...

வட்டிக்குப் பணம் வழங்கும் வர்த்தகர் சுட்டுக் கொ*லை; இருவர் கைது.!

தங்க நகைகள் கொள்ளை; இருவர் கைது.!

by Mathavi
May 25, 2026
0

சாமிமலை பகுதியில் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் நேற்று 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவத்தில் 21, 38 வயதுடைய இருவர் மஸ்கெலியா பொலிசாரினால் அதிரடியாக...

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டுபிடிப்பு.!

by Mathavi
May 25, 2026
0

மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹியங்கனை நகரில் உள்ள பாழடைந்த வீடொன்றுக்கு அருகில் உள்ள வாய்க்காலில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று கொண்டு...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி