ஆப்கானிஸ்தானில் நிலவும் கடுமையான வேலையின்மை, வறட்சி மற்றும் சர்வதேச உதவிகள் முடக்கப்பட்டமை காரணமாக, நாட்டின் பெரும்பாலான மக்கள் பட்டிணியால் பாதிக்கப்பட்டுள்ளனர்
இவர்கள் ஒருவேளை உணவிற்காகத் தங்களது சொந்தக் குழந்தைகளையே விற்கும் அதிரவைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் அண்மைக்காலத் தரவுகளின்படி,
ஆப்கானிஸ்தானில் நான்கில் மூன்று பேர் தங்களது அடிப்படைத் தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றமை தெரிய வந்துள்ளது .
மேலும், நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பத்தில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் பஞ்சத்தின் விளிம்பில் வாழ்ந்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் கோர் மாகாணத்தின் தலைநகரான சாக்உயசான் பகுதியில் உள்ள ஒரு தூசு நிறைந்த சதுக்கத்தில், தினமும் நூற்றுக்கணக்கான ஆண்கள் விடிவதற்கு முன்பே கூடுகின்றனர்.
யாராவது தங்களுக்குக் கூலி வேலை தரமாட்டார்களா என்ற ஏக்கத்துடனேயே அவர்கள் காத்திருக்கின்றனர்.
வேலை கிடைக்காத பட்சத்தில்
பசியின் கொடுமை தாங்க முடியாமல், பெற்ற பிள்ளைகளையே விற்கத் துணியும் அவல நிலைக்குப் பெற்றோர் தள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னர் ஆப்கானிஸ்தானுக்கு அதிகளவில் நிதியுதவி வழங்கி வந்த அமெரிக்கா, கடந்த ஆண்டு முதல் தனது மனிதாபிமான உதவிகள் அனைத்தையும் துண்டித்துள்ளது.
பிரித்தானியா உள்ளிட்ட ஏனைய முக்கிய நாடுகளும் தங்களது பங்களிப்பைக் கணிசமாகக் குறைத்துள்ளன.
இதன் காரணமாக, 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஆப்கானிஸ்தானுக்குக் கிடைத்துள்ள சர்வதேச நிதியுதவி 70 சதவீதத்திற்கும் மேலாகக் குறைந்துள்ளதாக ஐநா தரவுகள் காட்டுகின்றன.










