• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, May 26, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

“விளாவூர் யுத்தம்” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி.!

Mathavi by Mathavi
May 4, 2026
in இலங்கை செய்திகள்., மட்டக்களப்பு செய்திகள்
0
“விளாவூர் யுத்தம்” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி.!
Share on FacebookShare on Twitter

தமிழர்கள் விடயத்தில் கடந்த காலங்களில் தான் அரசுகள் ஒரு பக்கச்சார்பற்ற முறையில், கவனிப்பாரற்ற முறையில் நடந்திருந்தன என்று சொல்லப்பட்டாலும் கூட, இன்று உள்ள அரசாங்கமும் அதனை நிவர்த்திக்காமல், செயற்பாடுகளை முன்கொண்டு செல்லாத நிலையே காணப்படுவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு – விளாவட்டவான் ராஜா விளையாட்டுக்கழகம் தனது 56 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “விளாவூர் யுத்தம்” எனும் தொனிப்பொருளில் நடாத்திய அணிக்கு 11 போர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் காஞ்சிரங்குடா நாகஒளி விளையாட்டுக் கழகம் மகுடம் சூடியுள்ளது.

முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் திகதிகளில் படுவான்கரை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன், விளாவட்டவான் ராஜா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குறித்த சுற்றுப் போட்டியில் 29 அணிகள் களம் கண்டிருந்தது.

இதில் கரவெட்டி ஆதவன் அணியும், காஞ்சிரங்குடா நாக ஒளி அணியும் நேற்று(03) மாலை இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தியிருந்த நிலையில் தண்ட உதை மூலம் காஞ்சிரங்குடா நாக ஒளி அணியும் வெற்றி பெற்று ராஜாவின் விளாவூர் யுத்தத்தின் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

சுற்றுப் போட்டியில் இரண்டாம் இடத்தினை காஞ்சிரங்குடா நாக ஒளி அணியும், மூன்றாம் இடத்தினை கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா அணியும், நான்காவது இடத்தினை கொல்லநுலை விவேகானந்தா அணியும் பெற்றுக்கொள்ள சிறந்த நன்னடத்தை அணியாக நடராஜானந்தபுரம் சித்தி விநாயகர் அணியும் பெற்றுக்கொண்டது.

2026 ஆம் ஆண்டு சுற்றுப்போட்டியின் நாயகனாக கரவெட்டி ஆதவன் அணி வீரர் த.ஜீவிதன் தெரிவு செய்யப்பட்டார்.
அத்தோடு சிறந்த பந்துக் காப்பாளராக கரவெட்டி ஆதவன் அணியின் பந்துக் காப்பாளர் ச.நிலுக்சனும்(அஜித்), சிறந்த பின்கள வீரராக காஞ்சிரங்குடா நாக ஒளி அணியின் விமலநாதனும் மற்றும் சிறந்த வீரராக காஞ்சிரங்குடா நாகஒளி அணியின் சிவகாந்தனும் தெரிவு செய்யப்பட்டனர்.

சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கிண்ணம் மற்றும் பணப்பரிசு வழங்கப்பட்டது.

ராஜா விளையாட்டுக் கழக தலைவர் இ.அபிலாஸ் தலைமையில் நடைபெற்ற குறித்த சுற்றுப் போட்டியின் இறுதி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத் மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் த.கோபாலப்பிள்ளை, படுவான்கரை உதைபந்தாட்ட சங்கத்தின் நிர்வாக சபையினர், விளாவட்டவான் விநாயகர் வித்தியாலய அதிபர், விளாவட்டவான் ஆலய நிர்வாக சபையின் பிரதிநிதிகள், பொது அமைப்பினர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,
வடகிழக்கு எங்கும் இருக்கின்ற பிரச்சினைகள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அடிப்படை கட்டமைப்புகள் இல்லாமல், விளையாட்டு வீரர்களுக்கான வாய்ப்புகள் போதியளவு இல்லாமல், வசதிகள் மற்றும் வளப்பற்றாக்குறைகள் இருக்கின்ற பொழுதும், எமது வடகிழக்கைச் சேர்ந்த தமிழ் விளையாட்டு வீரர்கள் பல சாதனைகளை மாவட்டங்கள் கடந்தும், தேசிய ரீதியிலும், தேசியத்தைத் தாண்டி பல்வேறு நாடுகளிலும் ஆற்றிக் கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறு இருக்கையில், அவர்களுக்குப் போதிய வசதிகள் இருக்கின்ற பொழுது எமது சமூகம் இன்னும் எவ்வாறான நிலைமைகளில் மிக முன்னோக்கியதாக இருக்கும் என்பதை நாம் எதிர்வு கூறக்கூடியதாக இருக்கின்றது.

உண்மையிலே கடந்த காலங்களில் தான் அரசுகள் அவ்வாறான ஒரு பக்கச்சார்பற்ற முறையில், கவனிப்பாரற்ற முறையில் நடந்திருந்தன என்று சொல்லப்பட்டாலும் கூட, இன்று கூட அதற்கான நிவர்த்திப் பணிகள் அல்லது நிவர்த்திகள் செய்யக்கூடிய அளவு இன்றைய அரசாங்கம் கூட முன்னிக்கவில்லை அல்லது முழு ஈடுபாட்டுடன் அதற்குரிய செயற்பாட்டை ஆதரிக்கவில்லை அல்லது முன்னோக்கிக் கொண்டு செல்லவில்லை என்பதையே நாங்கள் இங்கு அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. இருந்தாலும், நாம் ஒரு சுயசார்பு அடிப்படையில் எமது மக்களின் வரிப்பணத்திலே மிகப்பெரிய அளவு பங்கினை வகிக்கின்ற இந்தச் சூழலில், எமக்கான பொருளாதாரச் சலுகைகள் அல்லது பொருளாதார உரிமைகள் அளிக்கப்பட வேண்டும். அந்த வகையிலே இந்த அரசாங்கத்திற்கும் அந்தப் பொறுப்பு இருக்கின்றது.

விளையாட்டுகள் உண்மையிலேயே உடற்பயிற்சிகள் மட்டுமல்லாது, தனிமனித ஒழுக்கத்தையும், கூட்டுப் பொறுப்பையும், தலைமைதாங்கும் உணர்வுகளையும், தோல்விகளைச் சகித்துக் கொள்கின்ற மனப்பக்குவத்தையும், வெற்றிக்காக ஒரு அணியாக உழைக்கின்ற தன்மையையும் தருகின்றது. ஆகவே, இன்றைய இளைஞர் சமுதாயம் இவ்வாறான விளையாட்டுக்களிலே குழுவாக ஈடுபட வேண்டும். விளையாட்டுக்கழகங்கள் இளைஞர்களை வலுப்படுத்துகின்ற வேலைப்பாடுகளைச் செய்ய வேண்டும்.

இந்தச் சூழலில் எமது தமிழரசுக் கட்சியின் ஊடாகப் பல வேலைத்திட்டங்களைச் செய்யக்கூடியதாக இருக்கும். நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து இந்தப் பிரதேசத்தின் விளையாட்டை அபிவிருத்தி செய்வதற்காக முழுமையாக ஈடுபடுவோம். கடினமான உழைப்பின் மூலமே நாம் பல வெற்றிகளை எதிர்காலத்தில் பெற முடியும் என்ற தன்னம்பிக்கையோடு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம் என்றார்.

Related Posts

போலி இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தி வாகனம் செலுத்துவோருக்கு எச்சரிக்கை!

by selvan
May 25, 2026
0

சிதைக்கப்பட்ட அல்லது தரப்படுத்தப்படாத போலி இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தி வாகனங்களைச் செலுத்த வேண்டாம் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே....

அச்சிடப்பட்ட காப்புறுதி அட்டைகள் இனி வழங்கப்பட மாட்டாது!

அச்சிடப்பட்ட காப்புறுதி அட்டைகள் இனி வழங்கப்பட மாட்டாது!

by selvan
May 25, 2026
0

வாகனங்களுக்கான அச்சிடப்பட்ட காப்புறுதி அட்டைகள் இனி வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றுக்குப் பதிலாக, இனிமேல் QR குறியீடு மற்றும் கைபேசி மூலம் பெறக்கூடிய டிஜிட்டல் காப்புறுதி...

இந்திய அரசால் இலங்கை பொலிசாருக்கு 134 கெப் ரக வாகனங்கள் அன்பளிப்பு

by selvan
May 25, 2026
0

இந்திய அரசாங்கத்தினால் இலங்கை பொலிஸாரின் பயன்பாட்டிற்காக, அன்பளிப்பாக வழங்கப்பட்ட 134 கெப் ரக வாகனங்கள் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இன்று  கையளிக்கப்பட்டன.இன்று (25) முற்பகல்...

கொழும்பில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம்

கொழும்பில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம்

by selvan
May 25, 2026
0

‘டிட்வா’ (Ditwah) சூறாவளியால் பாதிக்கப்பட்ட கொழும்பு மாவட்ட மீனவ சமூகத்திற்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 1,265,270 ரூபா பெறுமதியான மீன்பிடி வலைகள் வழங்கும் நிகழ்வு கடற்றொழில், நீரியல்...

தற்கொ*லை செய்துகொண்ட வித்தியா வழக்கின் குற்றவாளியினது சடலத்தை பொறுப்பேற்க அவரது மனைவி மறுப்பு!

தற்கொ*லை செய்துகொண்ட வித்தியா வழக்கின் குற்றவாளியினது சடலத்தை பொறுப்பேற்க அவரது மனைவி மறுப்பு!

by selvan
May 25, 2026
0

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொ*லை வழக்குடன் தொடர்புடைய குற்றவாளியின் இறுதி சடங்கை அரச செலவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.புங்குடுதீவு பகுதியை சேர்ந்த பூபாலசிங்கம் ஜெயக்குமார் (வயது 46)...

வடக்கில் வெசாக் பண்டிகை குறித்து தவறான செய்தி பகிரப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு!

வடக்கில் வெசாக் பண்டிகை குறித்து தவறான செய்தி பகிரப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு!

by selvan
May 25, 2026
0

வெசாக் பண்டிகை குறித்து தவறான செய்தி பகிரப்பட்டு வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த...

பொய் வழக்கிற்கான வாக்குமூலம் என்னிடம் பெறப்பட்டது!

பொய் வழக்கிற்கான வாக்குமூலம் என்னிடம் பெறப்பட்டது!

by selvan
May 25, 2026
0

பொலிசார் தாக்கல் செய்த பொய் வழக்கிற்கான வாக்குமூலம் நேற்றையதினம் பதிவு செய்யப்பட்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம்...

உடலில் காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம்  மீட்பு!

by selvan
May 25, 2026
0

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறைப் பகுதியில், உடலில் காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம்  மீட்க்கப்பட்டுள்ளது.இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-உன்னிச்சை, நெடியமடுப் பகுதியைச் சேர்ந்த...

மன்னாரில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை!

மன்னாரில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை!

by selvan
May 25, 2026
0

மன்னார் மாவட்டத்தில் படையினர் வசமுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டச் செயலகத்தில் பாதுகாப்புப் பிரதி...

விமல் வீரவன்ச பிணையில் விடுதலை!

விமல் வீரவன்ச பிணையில் விடுதலை!

by selvan
May 25, 2026
0

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச, இன்று கைது செய்யப்பட்ட நிலையில் கடுவல நீதவான் நீதிமன்றம் அவரை பிணையில் விடுவித்துள்ளது. பத்தரமுல்லையில் தேசிய...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி