சிகிரியாவில் முதலுதவி வசதிகள் இல்லாமையால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுற்றுலா சங்கமொன்றின் செயலாளர் .பி. விஜேசிங்க தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிகிரியாவை பார்வையிடுவதற்கான பயணச்சீட்டு 11,000 ரூபா ஆகும். ஆனால் அங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு முறையான முதலுதவி வசதிகள் எதுவும் இல்லை. இது மிகவும் பாரதூரமான ஒரு விடயமாகும்.
முறையான முதலுதவி வசதிகள் இல்லாத காரணத்தினால் சிகிரியாவில் கடந்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் 6 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
சுற்றுலாத் தலங்களில் முறையான முதலுதவி வசதிகளை வழங்குவது தொடர்பில் சுற்றுலாத் துறைசார்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.