3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரட் பெட்டிகளை விற்க முயன்ற புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த இளைஞர் ஒருவரை அச்சுவேலி பொலிசார் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது யாழ் அச்சுவேலி பேரூந்து நிலையத்தில் வெளிநாட்டு சிகரட் பெட்டிகளை விற்பதற்காக இளைஞர் ஒருவர் வருகை தந்துள்ளார் என பொலிசாருக்கு புலனாய்வு தகவல் கிடைத்துள்ளது.தொடர்ந்து குறித்த பகுதிக்கு விரைந்த பொலிசார் இளைஞர் ஒருவரை 160 வெளிநாட்டு சிகரட் பெட்டிகளுடன் கைது செய்தனர்
தொடர்ந்து 22 வயதான முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த இளைஞர் ஒருவரை கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட சிகரட்டுகளின் பெறுமதி 3லட்சத்து 20 ஆயிரம் என சராசரியாக மதிக்கபட்டுள்ள நிலையில் சந்தேக நபரிடம் 25 ஆயிரம் ரூபாய் பணமும் கைப்பற்றபட்டுள்ளது.
