யாழ்ப்பாணம் மாவட்ட விவசாய குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் பிரதேச செயலர்கள், திணைகள் அதிகாரிகள், விவசாய பணிப்பாளர்கள், மாவட்ட விவசாய திணைக்களத்தினர் மற்றும் துறை சார்ந்தவர்கள் கமநல சேவை பிரிவினை சேர்ந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகரித்து வரும் வெள்ளை ஈயின் தாக்கம் தென்னைகளை அதிகளவில் பாதிப்பு தொடர்பிலும் அதற்கு மருந்துகளை விசிறி அவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் தென்னை பயிர்ச் செய்கை சபை தெரிவித்திருந்தது.
மேலும் வீதிகளை அமைக்கும் போது கமநல சேவைகள் விவசாய குழுக்களின் கருத்துக்களை கேட்டு அவற்றை செய்ய வேண்டும் என்ற விடயங்கள் உள்ள பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டு அதற்கான தீர்வுகளும் எட்டப்பட்டன.





