இலங்கையில் 58 பாதாள குழுக்கள் செயல்படுகின்றன. அந்த குற்ற வலையமைப்புக்குள் 1,400 பேர் வரை இடம்பெற்றுள்ளனர் என்று பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 17 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 5 கத்திக்குத்து தாக்குதல் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
2024 ஆம் ஆண்டில் 75 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும், 18 வாள்வெட்டு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
வெளிநாடுகளில் இருந்தே பாதாள குழுக்களை வழிநடத்துகின்றனர். வெளிநாடுகளில் உள்ள பாதாள குழு உறுப்பினர்களை நாட்டுக்கு கொண்டுவரும் நடவடிக்கை தொடர்கின்றது.
பாதாள குழுக்களுக்கு தற்போது அரசியல் பாதுகாப்பு கிடைப்பதில்லை எனவும் பதில் பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவித்தார்.