6 ஆயிரத்து 400 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
கொவிஜன சேவா நிலையத்துக்குப் பின்புறமாக வசிக்கும் நபர் ஒருவரும், பூஜா நகர் பகுதியைச் சேர்ந்த நபர் இருவருமாக மூவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர் ஒவ்வொருவரிடமும் 3 ஆயிரத்து 500 மில்லிகிராம், 1400 மில்லி கிராம், 1500 மில்லி கிராம் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
மஹியங்கனைப் பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைய குறித்த சந்தேகநபர்களைச் சோதனைக்கு உட்படுத்தியபோது அவர்களிடம் இருந்து கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் அவர்களை மஹியங்கனை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
……….