• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, June 20, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home அம்பாறை செய்திகள்

இறக்காமத்திற்கான தனியான நீதிமன்றத்தினை உருவாக்க நீதி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்.!

Mathavi by Mathavi
May 25, 2025
in அம்பாறை செய்திகள், இலங்கை செய்திகள்
0 0
0
இறக்காமத்திற்கான தனியான நீதிமன்றத்தினை உருவாக்க நீதி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்.!
Share on FacebookShare on Twitter

இறக்காமத்திற்கான தனியான நீதிமன்றத்தினை உருவாக்க நீதி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக் கோவை(திருத்தம்) சட்டமூல குழு விவாதம் நேற்று (23.05.2025) நடைபெற்றது. இக்குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தனது உரையில்,

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள இறக்காமப் பிரதேசத்தில் சுமார் 18000 மக்கள் வாழ்கின்றனர். இதில் 94% மான சுமார் 17000 க்கும் மேற்பட்ட மக்கள் தமிழை தாய்மொழியாக கொண்டுள்ளனர். 12 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதான இறக்காமப் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பிரதேசமானது 2012 ஆம் ஆண்டு வரை அக்கரைப்பற்று நீதி நிர்வாக வலயத்தின் கீழ் காணப்பட்டதோடு பின்னர் அது அம்பாறை நீதி நிர்வாக வலயத்தின் கீழ் எவ்வித அறிவித்தலும் இன்றி மாற்றப்பட்டு இருந்தது சிங்கள மொழியை நீதிமன்ற மொழியாக கொண்ட அம்பாறை நீதி நிர்வாக வலயத்தின் கீழ் தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட இறக்காமப் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பிரதேசம் இணைக்கப்பட்டமையானது அப்பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களது அடிப்படை உரிமையை மீறுகின்ற ஒரு செயலாகும்.

அத்தோடு இப் பிரதேசத்தில் வாழ்கின்ற 94% மான தமிழ் பேசும் மக்கள் அம்பாறை நீதிமன்றங்களில் தமது வழக்கு நடவடிக்கைகளை தமக்கு பரீட்சயமற்ற சிங்கள மொழியில் தாக்கல் செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். அத்தோடு வழக்கு நடவடிக்கைகளை கையாள்வதிலும் சிரமப்படுகின்றனர்.

ADVERTISEMENT

நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக தமிழில் இருந்து சிங்களத்துக்கும் சிங்களத்திலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்ப்பு செய்வதற்காக வழக்குச் செலவுக்கு மேலதிகமாக பெருந்தொகையான பணத்தை செலவிட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது அத்தோடு வழக்கு நடவடிக்கைகளின் போதும் சாட்சியங்களின் போதும் நீதிமன்றின் பெறுமதியான நேரத்தை மொழிபெயர்ப்புக்காக செலவிட வேண்டிய துரதிஷ்டவசமான நிலையும் ஏற்பட்டுள்ளது.

இறக்காமப் பிரதேசமானது புவியியல் ரீதியாக சிங்கள மொழியை நீதிமன்ற மொழியாக கொண்ட அம்பாறை நீதி நிர்வாக வலயத்திற்கும் தமிழ் மொழியை நீதிமன்ற மொழியாக கொண்ட அக்கரைப்பற்று நீதி நிர்வாக வலயத்திற்கும் இடையில் அமையப் பெற்ற பிரதேசமாகும்.

சிங்கள மொழியிலான அம்பாறை நீதி நிர்வாக வலயத்தினுள் இக்கினியாகல, உகன, தமன, மங்கலகம, மத்தியமுகாம், பக்கியல்ல மற்றும் அம்பாறை ஆகிய பொலிஸ் பிரிவுகள் அடங்குகின்றன. இதில் ஒரே ஒரு தமிழ் பேசுகின்ற மக்களை கொண்ட இறக்காமப் பிரதேசமானது பொருத்தமற்ற வகையில் இணைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழியிலான அக்கரைப்பற்று நீதி நிர்வாக வலயத்தினுள் அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் ஆகிய பொலிஸ் பிரிவுகள் மாத்திரம் உள்ளடங்குகின்றன. எனவே தான் தமிழ் பேசுகின்ற மக்களை கொண்ட இறக்காமப் பிரதேசமானது தமிழ் மொழியை நீதிமன்ற மொழியாக கொண்ட அக்கரைப்பற்று நீதி நிர்வாக வலயத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் அல்லது இறக்காமப் பிரதேசத்திற்கான தனியான நீதிமன்றம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை நீதி அமைச்சு மேற்கொள்ள வேண்டும்.

Related Posts

கெஹெலிய வழக்கு விவகாரம் ; அறிக்கையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!

கெஹெலிய வழக்கு விவகாரம் ; அறிக்கையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!

by Thamil
June 19, 2025
0

கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கின் முக்கிய அறிக்கையொன்று இன்று (19) நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தரம் குறைந்த மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்து...

மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்..!

மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்..!

by Thamil
June 19, 2025
0

அம்பாறை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து உயர்மட்ட கலந்துரையாடல் இன்று 2025.06.19 இடம்பெற்றது. அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச அபிவிருத்தி குழுக்களின் தலைவரும், அரசியலமைப்பு பேரவை...

மாநகர சபை முதல்வர் பதவி சுழற்சிமுறையில் ரெலோவிற்கு..!

மாநகர சபை முதல்வர் பதவி சுழற்சிமுறையில் ரெலோவிற்கு..!

by Thamil
June 19, 2025
0

வவுனியா மாநகரசபையின் முதல்வர் பதவி மூன்று வருடங்களின் பின்னரான காலப்பகுதியில் ரெலோவிற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் இ.விஜயகுமார்(புரூஸ்) தெரிவித்தார்....

யாழில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது..!

யாழில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது..!

by Thamil
June 19, 2025
0

இன்றைய தினம் யாழில் 160 போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுதுமலை பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே போதை...

திடீரென மயங்கி விழுந்த குடும்பப் பெண் ஒருவர் உயிரிழப்பு..!

திடீரென மயங்கி விழுந்த குடும்பப் பெண் ஒருவர் உயிரிழப்பு..!

by Thamil
June 19, 2025
0

இன்றைய தினம் யாழ்ப்பாணம் - காரைநகர் பகுதியில் திடீரென மயங்கி விழுந்த குடும்பப் பெண்ணொருவர் வைத்தியசாலையில் சேர்ப்பித்தவேளை உயிரிழந்துள்ளார். இதன்போது காரைநகர் - களபூமியைச் சேர்ந்த கேதீஸ்வரன்...

குடை சாய்ந்த உழவு இயந்திரம்..!

குடை சாய்ந்த உழவு இயந்திரம்..!

by Thamil
June 19, 2025
0

இன்று (19) நுவரெலியா - உடபுஸ்ஸல்லாவ வீதியில் உள்ள ஹல்கிரானோயா பகுதியில் தேயிலை தொழிற்சாலைக்குச் சொந்தமான உழவு இயந்திரம் ஒன்று குடை சாய்ந்தது. இடம்பெற்ற இவ் விபத்தில்...

வத்திராயனில் இடம்பெற்ற இளைஞர் கழகத்திற்கான பொதுக்கூட்டம்..!

வத்திராயனில் இடம்பெற்ற இளைஞர் கழகத்திற்கான பொதுக்கூட்டம்..!

by Thamil
June 19, 2025
0

வடமராட்சிக் கிழக்கு வத்திராயன் சொலிட் இளைஞர் கழகத்திற்கான பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகத் தெரிவும் இன்று (19) இடம்பெற்றது. இன்று மாலை 4.00 மணிக்கு வடமராட்சி கிழக்கு வத்திராயன்...

வன விலங்குகளால் ஏற்படும் விவசாய சேதங்கள் தொடர்பான கலந்துரையாடல்..!

வன விலங்குகளால் ஏற்படும் விவசாய சேதங்கள் தொடர்பான கலந்துரையாடல்..!

by Thamil
June 19, 2025
0

வனவிலங்குகளால் உணவு உற்பத்திக்கு (விவசாயம் மற்றும் பெருந்தோட்டத்துறை) ஏற்படும் சேதங்களை விஞ்ஞான பொறிமுறை ஊடாக முகாமைத்துவம் செய்வதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் நிலையான தீர்வுகளை கண்டறிந்து நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் செயலாளர்...

யாழில் கஞ்சாவுடன் சிக்கிய இளைஞன்..!

யாழில் கஞ்சாவுடன் சிக்கிய இளைஞன்..!

by Thamil
June 19, 2025
0

இன்றைய தினம் (19) குருநகர் வைத்தியசாலைக்கு முன்பாக கஞ்சா கலந்த மாவா வைத்திருந்த 19 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி