படல்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொடகந்த பிரதேசத்தில் உள்ள வயல் ஒன்றில் உள்ள கிணற்றிலிருந்து நேற்று (02) பிற்பகல் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க 05 அடி 06 அங்குலம் உயரமுடைய பெண்ணொருவர் ஆவார்.
சடலமானது ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை படல்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.