• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 29, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

பழைய முகங்கள் போதும் : ஆறு புதியவர்களை பாராளுமன்றம் அனுப்புங்கள் – தொழிலதிபர் விண்ணன் வேண்டுகோள்!

User1 by User1
November 10, 2024
in இலங்கை செய்திகள், யாழ் செய்திகள்
0 0
0
பழைய முகங்கள் போதும் : ஆறு புதியவர்களை பாராளுமன்றம் அனுப்புங்கள் – தொழிலதிபர் விண்ணன் வேண்டுகோள்!
Share on FacebookShare on Twitter

தமிழ் மக்கள் பல தசாப்த காலமாக வாக்களித்து ஏமாந்து போன பழைய முகங்களை தவிர்த்து இளம் புதிய முகங்கள் ஆறு பேரை யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் இருந்து பாராளுமன்றம் அனுப்புமாறு பிரபல தொழிலதிபர் விண்ணன் கோரிக்கை முன்வைத்தார்.

நேற்றையதினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்று தரப் போகிறோம் என கூறி வாக்குகளை பெற்ற தமிழ் தேசியக் கட்சிகள் தமது சுகபோக வாழ்க்கையை அனுபவித்ததே வரலாறு.

ADVERTISEMENT

ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சனைக்காக பாராளுமன்றத்தில் போராடுவோம் எனக் கூறியவர்கள் தமிழ் மக்களை அடகு வைத்து பணப்பெட்டிகளை பெற்றமையை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தியவர்களுக்கு பெட்டிகளில் பணம் கைமாறப்பட்டுள்ளதாக நம்ப தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ் பொது வேட்பாளரின் பொது சின்னமாக சங்கு சின்னத்தில் போட்டியிட்ட நிலையில் சின்னத்தை அபகரித்து கட்சிகளின் சின்னமாக மாற்றி விட்டார்கள்.

பாராளுமன்றம் அவர்களுக்கு குடும்ப அரசியலாக மாறிவிட்ட நிலையில் திறமையான இளையவர்களை அரசியலில் இருந்து ஓரங்கட்டும் செயற்பாடுகளை தமிழ் கட்சிகள் செய்து வருகின்றன.

இளைஞர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குகிறோம் என கூறும் தமிழ் தேசிய கட்சிகள் திறமையான இளைஞர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதில்லை ஏனெனில் அவர்கள் தம்மை விட முன்னோக்கி சென்று விடுவார்கள் என்ற அச்சத்தினால் ஆகும்.

இம்முறை தமிழ் கட்சிகள் பல துண்டுகளாக பிரிந்துள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியும் தமிழ் மக்களின் நலனை சிந்திக்காமல் எப்படியாவது மீண்டும் பாராளுமன்றம் சென்று விட வேண்டும் என்ற நினைப்பில் கட்சித் தலைவர்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியை பொறுத்தவரையில் திறமையான இளைஞர் யுவதிகள் இம்முறை பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.

ஏற்கனவே பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றம் சென்றவர்கள் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்கள் இம்முறை பாராளுமன்ற செல்ல அனுமதிக்க கூடாது.

தெற்கு மக்கள் மாற்றத்தை விரும்பி வாக்களித்துள்ள நிலையில் 3 இலட்சம் வாக்குகளை பெற்ற தேசிய மக்கள் சக்தி இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 42 இலட்சம் வாக்குகளை பெற்றுள்ளது.

இம் முறை இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் இள வயதினர் தேசிய மக்கள் சக்தியை ஆட்சிக்கு கொண்டு வருவதில் பங்களிப்பு செய்துள்ள நிலையில் யாழ் தேர்தல் தொகுதியில் இருந்து தெரிவு செய்யப்படும் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களும் புதியவர்களாக பாராளுமன்றம் செல்ல வேண்டும்.

இம்முறை யாழ்ப்பாணம் தேர்தல் தேசிய மக்கள் சக்திக்கு மூன்று ஆசனங்களுக்கு மேல் கிடைக்கப்பெறும் வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்ற நிலையில் நிச்சயமாக ஒரு மாற்றத்தை தமிழ் மக்கள் உணர்வார்கள்.

ஆகவே கட்சி அரசியலும் முதுமை அரசியலும் தமிழ் மக்களை எதிர்கால அரசியலுக்கு பொருத்தமற்றது. ஆகவே தெற்கில் ஏற்பட்ட மாற்றத்தை போன்று வடக்கிலும் தமிழ் மக்கள் புதிய மாற்றம் ஒன்றை ஏற்படுத்த அணி திரள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

User1

User1

Related Posts

கனடாவில் நினைவுத்தூபி உடைத்தமைக்கு இயக்குனர் கௌதமன் கண்டனம்..!

கனடாவில் நினைவுத்தூபி உடைத்தமைக்கு இயக்குனர் கௌதமன் கண்டனம்..!

by Thamil
May 29, 2025
0

ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை வெளிப்படுத்தும் வகையில், கனடாவின் பிரம்டன் நகரில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி திறந்துவைக்கப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் அந்த நினைவுத்தூபியானது இனந்தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டது....

பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு..!

பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு..!

by Thamil
May 29, 2025
0

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் விழிப்புணர்வு நிகழ்வு தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்காக இன்று (29) குறித்த நிகழ்வினை...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த அறிவித்தல்..!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த எச்சரிக்கை..!

by Thamil
May 29, 2025
0

சீரற்ற காலநிலை காரணமாக பலத்த காற்று வீசுவதுடன், கடல் கொந்தளிப்பாகக் காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சிலாபம் முதல் புத்தளம் வரையிலும், மன்னார் முதல்...

ஜனாதிபதிக்கும், சீன அமைச்சருக்கும் இடையிலான கலந்துரையாடல்..!

ஜனாதிபதிக்கும், சீன அமைச்சருக்கும் இடையிலான கலந்துரையாடல்..!

by Thamil
May 29, 2025
0

தற்போது இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன மக்கள் குடியரசின் வர்த்தக அலுவல்கள் அமைச்சர் வங் வென்டாவோ இன்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை...

மண்டைதீவில் உயிர் நீத்த வீரர்களை நினைவுகூரும் வகையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு..!

மண்டைதீவில் உயிர் நீத்த வீரர்களை நினைவுகூரும் வகையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு..!

by Thamil
May 29, 2025
0

மண்டைதீவில் இன்று (29) முக்கிய உள்ளூர் பிரதிநிதிகள் மற்றும் கடற்படை வீரர்களின் பங்கேற்புடன் காலை 10 மணிக்கு மரம் நடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மே 18 ஆம்...

வவுனியாவில் கடும் காற்றினால் மரம் முறிந்து வீடுகள் தேசம் ; போக்குவரத்து ஸ்தம்பிதம்..!

வவுனியாவில் கடும் காற்றினால் மரம் முறிந்து வீடுகள் தேசம் ; போக்குவரத்து ஸ்தம்பிதம்..!

by Thamil
May 29, 2025
0

வவுனியாவில் கடந்த இரண்டு நாட்களாக கடும் காற்று வீசி வருகின்ற நிலையிலேயே இச் சேதம் இடம்பெற்றுள்ளதுடன் இதனால் அப் பாதையூடான போக்குவரத்தும் தடைப்பட்டிருந்தது வவுனியா தெற்கு தமிழ்...

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான அறிக்கை முல்லைத்தீவு நீதிமன்றில் சமர்ப்பிப்பு..!

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான அறிக்கை முல்லைத்தீவு நீதிமன்றில் சமர்ப்பிப்பு..!

by Thamil
May 29, 2025
0

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் மீட்கப்பட்ட 52 மனித எலும்புக்கூடுகளின் வயது, பாலினம், இறப்புக்கான காரணம் என முக்கிய விபரங்கள் அடங்கிய அறிக்கை சட்டவைத்திய அதிகாரி குழுவினரால் முல்லைத்தீவு நீதிமன்றில்...

இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

by Thamil
May 29, 2025
0

தினகரன் ஊடாக உதவி கோரியிருந்த இராசரத்தினம் தர்சினி என்பவர் சிறுநீரக செயலிழப்பினால் உயிரிழந்துள்ளார். இவரின் சிகிச்சைக்காக உதவி செய்த அனைவருக்கும் இதனை அறியத் தருகின்றோம். இவரின் ஆத்மா...

யாழில் திடீரென உயிரிழந்த ஆண் ; உடற்கூற்று பரிசோதனைகளில் வெளியான தகவல்..!

யாழில் திடீரென உயிரிழந்த ஆண் ; உடற்கூற்று பரிசோதனைகளில் வெளியான தகவல்..!

by Thamil
May 29, 2025
0

யாழில் இன்றைய தினம் (29) ஆண் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். கீரிமலை வீதி, சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த கணேசலிங்கம் ராஜ்குமார் (வயது 37) எனாபவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....

Load More
Next Post
யாழில் மழை அனர்த்தம் காரணமாக மூன்று குடும்பங்கள் பாதிப்பு!

யாழில் மழை அனர்த்தம் காரணமாக மூன்று குடும்பங்கள் பாதிப்பு!

மண்டபம் அகதிகள் முகாமிலிருந்து தப்பிச் சென்ற 9 இலங்கை தமிழர்கள் நெடுந்தீவில் கைது..!

மண்டபம் அகதிகள் முகாமிலிருந்து தப்பிச் சென்ற 9 இலங்கை தமிழர்கள் நெடுந்தீவில் கைது..!

ஜனநாயக ஐக்கிய முன்னணியின் வேட்பாளர்கள் தமிழரசு கட்சி வேட்பாளர் செல்வராஜ் டினேஸனுக்கு ஆதரவு

ஜனநாயக ஐக்கிய முன்னணியின் வேட்பாளர்கள் தமிழரசு கட்சி வேட்பாளர் செல்வராஜ் டினேஸனுக்கு ஆதரவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி