• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, July 5, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

சென்னையில் கஜேந்திரகுமார் குழுவினர் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் முக்கிய பேச்சு.!

Mathavi by Mathavi
July 5, 2026
in இலங்கை செய்திகள்.
0
சென்னையில் கஜேந்திரகுமார் குழுவினர் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் முக்கிய பேச்சு.!
Share on FacebookShare on Twitter

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் ஈழத் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் மற்றும் வாழ்வாதார உரிமைகள் தொடர்பில் தமிழ்த் தேசியப் பேரவையினர் முக்கிய கலந்துரையாடலொன்றை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை தியாகராய நகரிலுள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகத்தில் நேற்று நண்பகல் 12 மணியளவில் இச்சந்திப்பு நடைபெற்றது.

அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் உள்ளிட்ட தலைவர்களைத் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான ஈழத் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் குழு நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தியது.

இச்சந்திப்பின் போது, ஈழத் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மற்றும் சமகால சவால்கள் குறித்து விரிவான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

வலியுறுத்தப்பட்ட முக்கிய கோரிக்கைகள்

  • சமஷ்டி அரசியல் தீர்வு:
    இலங்கையின் ஒற்றையாட்சி அரசமைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, தமிழ்த் தேசம், இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை அங்கீகரிக்கும் அடிப்படையிலான சமஷ்டி அரசியல் தீர்வுக்கு இந்திய அரசியல் கட்சிகள் தங்களது முழுமையான ஆதரவை வழங்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
  • சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை:
    தமிழர் இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணையை முன்னெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், அதற்கு தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் தொடர்ச்சியான ஆதரவை வழங்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
  • மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு:
    இந்திய மற்றும் இலங்கை தமிழ் மீனவர்களுக்கிடையே நீண்டகாலமாக நிலவி வரும் எல்லைதாண்டிய மீன்பிடிப் பிரச்சினைகளுக்கு, இருதரப்பு வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் வகையிலான நிரந்தரத் தீர்வைக் காண வேண்டியதன் அவசியம் குறித்து ஆராயப்பட்டது.
  • அகதிகள் நலன்:
    தமிழ்நாட்டில் தங்கியுள்ள ஈழத் தமிழ் அகதிகளின் வாழ்வாதார மேம்பாடு மற்றும் அவர்களின் அடிப்படை உரிமைகள் சார்ந்த விடயங்கள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
  • சர்வகட்சி குழுவுக்கான கோரிக்கை: ஈழத் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு நீதியான அரசியல் தீர்வை நோக்கிய அழுத்தங்களை வழங்கும் பொருட்டு, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய ‘சர்வகட்சி குழு’ ஒன்றை அமைத்து, ஒருங்கிணைந்த முறையில் செயற்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இதன்போது முன்வைக்கப்பட்டது.

இச்சந்திப்பில், தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் இணைந்து பொ.ஐங்கரநேசன் (தலைவர், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம்), செல்வராசா கஜேந்திரன் (பொதுச்செயலாளர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி), ஜனாதிபதி சட்டத்தரணி கே. தவராசா (தலைவர், ஜனநாயகத் தமிழரசுக் கட்சி), தருமலிங்கம் சுரேஷ் (தேசிய அமைப்பாளர், தமிழ்த் தேசியப் பேரவை), சிரேஷ்ட சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் (பேச்சாளர், தமிழ்த் தேசியப் பேரவை), சிரேஷ்ட சட்டத்தரணி நடராஜர் காண்டீபன் (கொள்கைப் பரப்புச் செயலாளர், தமிழ்த் தேசியப் பேரவை) ஆகியோர் பங்கேற்றனர்.

Related Posts

வளமான நாடு எனக் கூறி நீதிமன்ற சுயாதீனத்தை அழிக்கின்றது அநுர அரசு.!

வளமான நாடு எனக் கூறி நீதிமன்ற சுயாதீனத்தை அழிக்கின்றது அநுர அரசு.!

by Mathavi
July 5, 2026
0

வளமான நாடும் அழகான வாழ்க்கையும் அமைத்துத் தருவோம் எனக் கூறி அதிகாரத்துக்கு வந்த 'திசைகாட்டி' (தேசிய மக்கள் சக்தி) அரசு, இன்று நீதிமன்றத்தின் சுயாதீனத்தை அழித்துக் கொண்டிருக்கின்றது...

நகுலேஸ்வரத்தில் 4 கிலோ வெள்ளி திருட்டு; இருவர் கைது.!

நகுலேஸ்வரத்தில் 4 கிலோ வெள்ளி திருட்டு; இருவர் கைது.!

by Mathavi
July 5, 2026
0

நேற்று இரவு கீரிமலை - நகுலேஸ்வரத்தில் 4 கிலோ வெள்ளி களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் இருவரை...

கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு.!

கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு.!

by Mathavi
July 5, 2026
0

மொனராகலை மாவட்டம், தனமல்வில - உடவளவ வீதியின் போடகம பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக வந்த...

சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொ*லை; பிரதான சந்தேகநபர் கைது.!

சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொ*லை; பிரதான சந்தேகநபர் கைது.!

by Mathavi
July 5, 2026
0

கொழும்பு - அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 23 வயதுடைய பிரதான பாதாள உலகக் கும்பல் சந்தேகநபர் மாலைதீவிலிருந்து நாடு...

மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை.!

மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை.!

by Mathavi
July 5, 2026
0

மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை. இவர்கள் வெளிப்படையாகச் சொல்லி வெளிவரலாம். போலிக் குற்றம், பொய்க் குற்றச்சாட்டு, ஜனாதிபதியைப் பற்றிய விமர்சனமெல்லாம் ஒரு அறிவுபூர்வமான, அர்த்தமுள்ள விமர்சனம்...

கோர விபத்தில் குடும்பப் பெண் உயிரிழப்பு.!

கணவனின் தாக்குதலில் இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு.!

by Mathavi
July 5, 2026
0

பொலன்னறுவை மாவட்டம், அரலகங்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிம்பொகுண பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற குடும்பத் தகராறொன்றின் போது, கணவனால் தாக்கப்பட்ட இளம் குடும்பப் பெண்...

டெங்கு தீவிரம்; 39 பேர் உயிரிழப்பு.!

டெங்கு தீவிரம்; 39 பேர் உயிரிழப்பு.!

by Mathavi
July 5, 2026
0

இலங்கையில் இந்த ஆண்டில் டெங்குக் காய்ச்சலின் பரவல் கணிசமாக அதிகரித்து வருகின்றது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு விடுத்துள்ள புதிய புள்ளிவிவரங்கள் எச்சரித்துள்ளன. நேற்று நள்ளிரவு...

தமிழக தலைவர்களுடனான சந்திப்பு சுயலாப அரசியலின் வெளிப்பாடு – டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

தமிழக தலைவர்களுடனான சந்திப்பு சுயலாப அரசியலின் வெளிப்பாடு – டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

by selvan
July 4, 2026
0

தென்னிலங்கையில் ஆட்சிக்கு வருகின்ற யாருமே தங்க தாம்பாழ தட்டில் வைத்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை தரமாட்டார்கள் என்று தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா, எமது அரசியல் உரிமைகளை...

மன்னாரில் திருடப்பட்டு முச்சக்கர வண்டியில் கடத்திச் செல்லப்பட்ட இரண்டு மாடுகள் மீட்பு!

மன்னாரில் திருடப்பட்டு முச்சக்கர வண்டியில் கடத்திச் செல்லப்பட்ட இரண்டு மாடுகள் மீட்பு!

by selvan
July 4, 2026
0

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் தாராபுரம் பிரதான வீதி பகுதியில் வைத்து முச்சக்கர வண்டியில் சட்ட விரோதமான முறையில் கொண்டு கொண்டு செல்லப்பட்ட இரண்டு மாடுகளை மன்னார்...

நுவரெலியாவில் இருந்து கதிர்காமம் நோக்கிய புனித யாத்திரை இன்று ஆரம்பம்!

நுவரெலியாவில் இருந்து கதிர்காமம் நோக்கிய புனித யாத்திரை இன்று ஆரம்பம்!

by selvan
July 4, 2026
0

மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாத சுவாமி ஆலயத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி செல்லும் பாதை யாத்திரை இன்று 04 ம் திகதி திரு.செல்வம் தலைமையில் மறே, நல்லதண்ணி சாமி...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி