• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, July 3, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

அனைத்துத் துறைகளிலும்
அரசு முற்றாகத் தோல்வி அடைந்துள்ளது!

selvan by selvan
July 3, 2026
in இலங்கை செய்திகள்.
0
அனைத்துத் துறைகளிலும்அரசு முற்றாகத் தோல்வி அடைந்துள்ளது!
Share on FacebookShare on Twitter

தேசிய மக்கள் சக்தி அரசானது டெங்கு ஒழிப்பு, நீதித்துறை வெற்றிடங்களை நிரப்புதல் மற்றும் பொருளாதார நெருக்கடியைக் கையாளுதல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் முற்றாகத் தோல்வியடைந்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா குற்றம் சாட்டியுள்ளார்.

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப் பணிமனையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:-

“இந்த அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் பெருமளவான நிதிச் செலவில் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய போதிலும், தற்போது டெங்கு நோய் நாடளாவிய ரீதியில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்குப் பரவியுள்ளது. தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் தரவுகளின்படி, இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 56 ஆயிரத்து 422 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 1,025 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். நாட்டின் பல மருத்துவமனைகள் நோயாளர்களால் நிரம்பியுள்ளன. இந்நிலைமை மேலும் தீவிரமடைந்தால் பேரழிவை ஏற்படுத்தும் எனச் சுகாதாரத் துறையினர் எச்சரிக்கும் சூழலிலும், அரசிடம் முறையான வேலைத்திட்டம் எதுவும் இல்லை. எனவே, டெங்கு ஒழிப்பை விரைவுபடுத்தி மக்களைப் பாதுகாப்பதற்கான உடனடி வேலைத்திட்டத்தை வகுக்குமாறு அரசை வலியுறுத்துகின்றோம்.

உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் நிலவும் நீதிபதிகள் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்ந்து தாமதப்படுத்தப்பட்டு வருகின்றது. ஐந்து மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் இந்த வெற்றிடங்களால் வழக்கு விசாரணைகள் முடங்கி, கடுமையான தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலைமையில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை இரண்டு வருடங்களால் நீடிப்பதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கீழ் நீதிமன்றங்களில் உள்ள தகுதியான அதிகாரிகளை மேல் நீதிமன்றங்களுக்கு நியமிக்கும் பாரம்பரியத்தை மீறி, பதவிக் காலத்தை நீடிக்க முயல்வதற்குப் பின்னால் அரசியல் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் எழுகின்றது. இந்த வெற்றிடங்களுக்கான பெயர்களைப் பரிந்துரைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என்பதால், பாரம்பரியங்களை உடைக்காமல் தகுதியான நீதிபதிகளை உடனடியாக நியமிக்க ஜனாதிபதி தலையிட வேண்டும்.

இலங்கை நடுத்தர வருமான நாடாக மாறியுள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளமை குறித்து மகிழ்ச்சியடைகின் றோம். ஆனால், 2018 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசின் காலத்திலும் இந்நிலை சாத்தியமானது என்பதை நினைவூட்ட விரும்புகின்றோம். தற்போதைய அறிவிப்பால் ஏழை மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. 2018 ஐ விட பொருள்களின் விலைகள் மூன்று மடங்கு உயர்ந்துள்ளன.

எரிபொருள் விலையைப் பெருமளவில் அதிகரித்துவிட்டு, பின்னர் சொற்ப தொகையால் குறைத்து அரசு பெருமை பேசுகின்றது. போதிய எரிபொருள் இருப்புக்கள் இருந்த போதிலும், கறுப்புச் சந்தை முதலாளியைப் போல நுகர்வோரைச் சுரண்டி அரசு இலாபம் ஈட்டியுள்ளது. மக்களை வதைத்து வரி வசூலித்து திறைசேரியை நிரப்பியுள்ளதாகக் கூறும் அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை. மாறாக, நாளொன்றுக்கு ஒரு இலட்சம் ரூபா சம்பாதிக்கும் ஒவ்வொருவரும் வரி செலுத்த வேண்டும் என மக்களை மேலும் சுரண்டுகின்றது.

ஆட்சிக்கு வந்தால் நெல்லுக்கு 120 ரூபா சான்றிதழ் விலை வழங்குவதாக உறுதியளித்த தேசிய மக்கள் சக்தி, அந்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை. அரசின் நெற்களஞ்சியசாலைகள் நெல்லைக் கொள்வனவு செய்ய முன்வராததால் விவசாயிகள் போராடி வருகின்றனர். போராடும் விவசாயிகளை அரசின் அமைச்சர்கள் அவமதிப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

கடந்த போகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட நெல்லை சந்தைக்கு விடுவிப்பதற்கான எந்தவொரு திட்டமும் அரசிடம் இல்லை. உள்நாட்டு நெல் களஞ்சியங்களில் தேங்கிக் கிடக்கையில், வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அரசின் அமைச்சர்களிடம் வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளனவே தவிர, முறையான திட்டங்கள் எதுவுமில்லை.” – என்றார்

Related Posts

யாழ். இந்து மகளிர் கல்லூரியில் புதிய மாடிக் கட்டடத்துக்கு இன்று அடிக்கல் நாட்டு விழா

யாழ். இந்து மகளிர் கல்லூரியில் புதிய மாடிக் கட்டடத்துக்கு இன்று அடிக்கல் நாட்டு விழா

by selvan
July 3, 2026
0

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் புதிய இரண்டு மாடி வகுப்பறைக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாகாணத்துக்காகக் குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதியின் கீழ்,...

தமிழக முதலமைச்சர் விஜய்யுடன் தமிழ்த் தேசியப் பேரவை சந்திப்பு!

தமிழக முதலமைச்சர் விஜய்யுடன் தமிழ்த் தேசியப் பேரவை சந்திப்பு!

by selvan
July 3, 2026
0

தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான ஏழு பேர் கொண்ட தூதுக்குழுவினர், தமிழ்நாட்டு முதலமைச்சர் சந்திரசேகர் ஜோசப் விஜய்யைச் சந்தித்து ஈழத் தமிழ் மக்களின்...

எட்டு மாதங்களின் பின்னர் இடம்பெற்ற பச்சிலைப்பள்ளி அபிவிருத்திக் குழுக் கூட்டம்!

எட்டு மாதங்களின் பின்னர் இடம்பெற்ற பச்சிலைப்பள்ளி அபிவிருத்திக் குழுக் கூட்டம்!

by selvan
July 3, 2026
0

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை 9:30 மணியளவில் பச்சிளைப்பள்ளி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது இவ் பிரதேச...

இலங்கை கராத்தே சங்கத்தில் பாரிய பண மோசடி; விளையாட்டுத்துறை அமைச்சர் வேடிக்கை.!

இலங்கை கராத்தே சங்கத்தில் பாரிய பண மோசடி; விளையாட்டுத்துறை அமைச்சர் வேடிக்கை.!

by Mathavi
July 3, 2026
0

இலங்கை கராத்தே சங்கத்தில் இடம்பெற்று வரும் பெருமளவிலான பண மோசடிகள் மற்றும் தன்னிச்சையான செயல்பாடுகள் குறித்து கொழும்பில் நேற்று வியாழக்கிழமை விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில்...

சொந்தமாகக் குடியிருப்பு நிலம் இல்லாமையால் மக்கள் அசௌகரியம்.!

சொந்தமாகக் குடியிருப்பு நிலம் இல்லாமையால் மக்கள் அசௌகரியம்.!

by Mathavi
July 3, 2026
0

கிளிநொச்சி மாவட்டம், வண்ணாங்கேணி வடக்கு கிராமத்தில் 50 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமக்கென சொந்தமாகக் குடியிருப்பு நிலம் (காணி) இல்லாத காரணத்தினால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக...

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது.!

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது.!

by Mathavi
July 3, 2026
0

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவை இலங்கை...

மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு.!

மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு.!

by Mathavi
July 3, 2026
0

ருவன்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இஹல மொரவத்த பகுதியில் உள்ள வாகன சேவை மையம் ஒன்றில் நேற்று வியாழக்கிழமை (2) பணியாற்றிக்கொண்டிருந்த 18 வயது இளைஞன் ஒருவர் மின்சாரத்...

நாடு முழுவதிலும் 56,422 டெங்கு தொற்றாளர்கள் பதிவு.!

நாடு முழுவதிலும் 56,422 டெங்கு தொற்றாளர்கள் பதிவு.!

by Mathavi
July 3, 2026
0

இலங்கையில் தற்போது பரவி வரும் டெங்கு நோயின் தாக்கம் மற்றும் அதனைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டு வரும் அவசர நடவடிக்கைகள் குறித்து தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் தற்காலிக...

பெற்றோலை 131 ரூபாவாலும் டீசலை 101 ரூபாவாலும் உடனடியாகக் குறைக்க முடியும்.!

பெற்றோலை 131 ரூபாவாலும் டீசலை 101 ரூபாவாலும் உடனடியாகக் குறைக்க முடியும்.!

by Mathavi
July 3, 2026
0

மக்களுக்கு உணரும் படியாக எரிபொருள் விலையைக் குறைப்பதாகப் பொய் வாக்குறுதி அளித்த திசைகாட்டி அரசாங்கம், 'மலையைக் கிண்டி எலியைப் பிடித்த கதையாக' மிகச் சொற்ப அளவிலேயே விலையைக்...

அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்.!

அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்.!

by Mathavi
July 3, 2026
0

'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ், ஜூன் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவை இன்று (03) முதல் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, முதலாம் கட்டத்தின்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி