• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, July 3, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

பெற்றோலை 131 ரூபாவாலும் டீசலை 101 ரூபாவாலும் உடனடியாகக் குறைக்க முடியும்.!

Mathavi by Mathavi
July 3, 2026
in இலங்கை செய்திகள்.
0
பெற்றோலை 131 ரூபாவாலும் டீசலை 101 ரூபாவாலும் உடனடியாகக் குறைக்க முடியும்.!
Share on FacebookShare on Twitter

மக்களுக்கு உணரும் படியாக எரிபொருள் விலையைக் குறைப்பதாகப் பொய் வாக்குறுதி அளித்த திசைகாட்டி அரசாங்கம், ‘மலையைக் கிண்டி எலியைப் பிடித்த கதையாக’ மிகச் சொற்ப அளவிலேயே விலையைக் குறைத்துள்ளது என்று பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
“2026 பெப்ரவரி 28 அன்று ஈரான் போர் தொடங்கும் போது, கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 72.87 டொலராகக் காணப்பட்டது. ஜூன் 29 அன்று இலங்கையில் எரிபொருள் விலை மாற்றப்பட்ட போது, அதன் விலை 72.55 டொலராகக் குறைவடைந்துள்ளது. உலக சந்தையில் விலை குறைந்துள்ளதால் அரசால் போருக்கு முந்தைய விலையிலோ அல்லது அதைவிடக் குறைவான விலையிலோ எரிபொருளை வழங்க முடியும்.

போருக்கு முன் 293 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்று தற்போது 20 ரூபா குறைக்கப்பட்டு 414 ரூபாவுக்கு விற்கப்படுகின்றது. இது இன்னும் 131 ரூபாவால் குறைக்கப்பட வேண்டும். அதேபோல், 281 ரூபாவாக இருந்த ஒட்டோ டீசல் 25 ரூபா குறைக்கப்பட்டு 382 ரூபாவுக்கு விற்கப்படுவதால், அது இன்னும் 101 ரூபாவினாலும் குறைக்கப்பட வேண்டும்.

இதேபோல் ஒக்டேன் 95 பெற்றோல் 155 ரூபாவினாலும், சுப்பர் டீசல் 149 ரூபாவினாலும் குறைக்கப்பட வேண்டும். அதிக விலைக்கு வாங்கிய எரிபொருள் இருப்பில் இருப்பதாக அரசு கூறும் காரணம் முற்றிலும் பொய்யானதாகும்.

கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதியன்று மத்திய கிழக்கு போர் தொடங்கிய போது, தன்னிடம் 35 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பதாகக் கூறிய அரசு, போர் தொடங்கி 12 நாட்களுக்குள் விலையை ஏற்றியது. ஆனால், இப்போது உலக சந்தையில் விலை குறைந்து இரண்டு வாரங்கள் கடந்தும் அதன் பயனை மக்களுக்கு வழங்க மறுக்கின்றது. உலகிலேயே அதிக விலைக்கு எரிபொருளை வாங்கியதன் மூலம் பெறப்பட்ட இடைத்தரகுப் பண ஊழலை மறைப்பதற்கே அரசு இவ்வாறு செய்கின்றது.

அத்துடன், இலங்கையின் பொருளாதார தற்சார்புக்கு மிக முக்கியமானதாகக் கருதப்பட்ட எமது நாட்டு எண்ணெய் அகழ்வாராய்ச்சிப் பணிகள் தற்போதைய அரசால் நிறுத்தப்பட்டது ஏன்?” – என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Continue Reading

Related Posts

மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு.!

மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு.!

by Mathavi
July 3, 2026
0

ருவன்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இஹல மொரவத்த பகுதியில் உள்ள வாகன சேவை மையம் ஒன்றில் நேற்று வியாழக்கிழமை (2) பணியாற்றிக்கொண்டிருந்த 18 வயது இளைஞன் ஒருவர் மின்சாரத்...

நாடு முழுவதிலும் 56,422 டெங்கு தொற்றாளர்கள் பதிவு.!

நாடு முழுவதிலும் 56,422 டெங்கு தொற்றாளர்கள் பதிவு.!

by Mathavi
July 3, 2026
0

இலங்கையில் தற்போது பரவி வரும் டெங்கு நோயின் தாக்கம் மற்றும் அதனைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டு வரும் அவசர நடவடிக்கைகள் குறித்து தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் தற்காலிக...

அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்.!

அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்.!

by Mathavi
July 3, 2026
0

'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ், ஜூன் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவை இன்று (03) முதல் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, முதலாம் கட்டத்தின்...

நாடு கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் அபாயம்; தடுக்கவே புதிய சட்டமூலங்கள்.!

நாடு கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் அபாயம்; தடுக்கவே புதிய சட்டமூலங்கள்.!

by Mathavi
July 3, 2026
0

நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் நாட்டை கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் அபாயத்தைத் தடுத்தல் ஆகியவற்றை நோக்காகக் கொண்டே புதிய திருத்தச் சட்டமூலங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என இலங்கை...

பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பாரவூர்தி.!

பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பாரவூர்தி.!

by Mathavi
July 3, 2026
0

கொழும்பு - கடவத்தையிலிருந்து நுவரெலியா நோக்கிச் பயணித்த பாரவூர்தி பிரதான வீதியிலிருந்து விலகிச் சென்று விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை (03) அதிகாலை...

மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள்; யார் ராஜா என்று பார்த்துவிடுவோம்.!

மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள்; யார் ராஜா என்று பார்த்துவிடுவோம்.!

by Mathavi
July 3, 2026
0

மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் யார் ராஜா என்று தெரிந்துவிடும் என்றும், நாட்டு மக்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறும் அநுர...

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான போதைப்பொருள் வியாபாரிக்கு விளக்கமறியல்.!

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான போதைப்பொருள் வியாபாரிக்கு விளக்கமறியல்.!

by Mathavi
July 3, 2026
0

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேசத்தில் 7 கிராம் 199 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 40 வயதுடைய போதைப்பொருள் வியாபாரியை எதிர்வரும் 15 ஆம் திகதிவரை...

அரசை அபாண்டமாகத் தாக்காதீர்கள்; மனிதாபிமானத்தோடு அணுகுங்கள்.!

அரசை அபாண்டமாகத் தாக்காதீர்கள்; மனிதாபிமானத்தோடு அணுகுங்கள்.!

by Mathavi
July 3, 2026
0

சுயநல நோக்கோடு அரசின் மீது அபாண்டமான தாக்குதல்களை நடத்துவதை விடுத்து, அரசு இன்று எதிர்நோக்கும் இக்கட்டான சூழ்நிலையை ஓரளவுக்கு மனிதாபிமானத்துடனும் அனுதாபத்துடனும் அணுகிப் பேச வேண்டும் என்று...

ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை தவிக்கும் நாடு – சம்பள உயர்வை வழங்குமாறு அரசுக்கு மொட்டுக் கட்சி அழுத்தம்.!

ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை தவிக்கும் நாடு – சம்பள உயர்வை வழங்குமாறு அரசுக்கு மொட்டுக் கட்சி அழுத்தம்.!

by Mathavi
July 3, 2026
0

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் அரச ஊழியர்கள், ஏழை எளிய மக்கள் மட்டுமன்றி, நடுத்தர வர்க்கத்தினரும் அதிக வருமானம் ஈட்டும் பிரிவினரும் கூட இன்று பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர்...

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நீர்வெட்டு.!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நீர்வெட்டு.!

by Mathavi
July 3, 2026
0

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நாளை 12 மணிநேரம் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இந்த நீர்விநியோகத் தடையானது...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி