• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, June 20, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களில் உள்ளோர் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டும்.!

Mathavi by Mathavi
June 19, 2026
in இலங்கை செய்திகள்.
0
தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களில் உள்ளோர் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டும்.!
Share on FacebookShare on Twitter

தமிழக அரசியல் மாற்றம் ஜனநாயகத்திற்கு நல்லது. தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட தென்பிராந்திய மாநிலங்களில் உள்ள முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இந்தியா யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் முதன்முறையாக தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சருக்கு கொழும்பில் பாராட்டு விழா நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், கண்டி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் நேற்று வியாழக்கிழமை (18) முற்பகல் சென்றார். அவரை திருச்சி அய்மான் மகளிர் கலை அறிவியல் கல்லூரி தாளாளர் மற்றும் செயலாளர் ஹபிபுல்லாஹ், மூத்த ஊடகவியலாளர் திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது ஆகியோர்
சால்வை அணிவித்து வரவேற்றனர்.

பின்னர், அங்கு வந்திருந்த ஊடகவியலாளர்களுக்கு பேட்டியளித்தபோது அவர் கூறியதாவது ,

கேள்வி : வெளிநாடுகளில் இலங்கையில் தான் முதன் முதலில் இசைமுரசு நாகூர் ஈ.எம். ஹனிபாவின் நூற்றாண்டு விழா சிறப்பாக நடத்தப்பட்டது. அதேபோல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் முதன்முதலில் இடம்பெற்றுள்ள அமைச்சருக்கு பாராட்டு விழா எதுவும் நடத்தப்படுமா?

பதில் : இந்தியா யூனியன் முஸ்லிம் லீக்கில் முதன்முறையாக அமைச்சரவையில் பங்கேற்ற அமைச்சர்களுக்கு பாராட்டு விழா நடத்துவது தொடர்பாக கட்சி ரீதியாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,
நிச்சயமாக பாராட்டு விழா குறித்து விரைவில் திகதி முடிவு செய்யப்படும்.

கேள்வி : தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி செயற்பாடுகள் பற்றி உங்கள் கருத்து என்ன ?

பதில்: தமிழகத்தில் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது. இதற்கு முன்பு ஆட்சி அதிகாரத்தில் இல்லாத ஒரு வித்தியாசமான அணியினர், எதிர்பாராத வகையில் ஒரு பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள்.

ஜனநாயகத்தில் இதுபோன்ற இடைக்கால மாற்றங்கள் வருவது நல்லது. முந்தைய ஆட்சியாளர்கள் தமிழகத்தைக் கொண்டு நிறுத்திய இடத்திலிருந்து, இந்தப் புதிய ஆட்சியாளர்கள் மாநிலத்தை இன்னும் அடுத்தகட்ட முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். தமிழக வெற்றிக் கழகம் நல்ல முறையில் சிறப்பாக செயற்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

கேள்வி : இருநாட்டு மீனவர்கள் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு என்ன?

பதில் : மீனவர் பிரச்சினை என்பது இரு தரப்பிலும் மனிதாபிமான ரீதியாக அணுகப்பட வேண்டிய ஒரு விஷயம். சட்ட மீறல்கள் என்ற விவகாரத்தையும் தாண்டி, மக்களின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். இரு தரப்பிலும் சில விட்டுக்கொடுப்புகளோடு இதற்கு சுமூக முடிவு காணப்பட வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.
இது தொடர்பாக தமிழ்நாடு மாநில அரசும், மத்திய அரசும், இலங்கையின் மத்திய அரசு மற்றும் யாழ். குடாநாட்டு மீனவர் சமூகத்தோடு இணைந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும். எங்களது மீன்பிடித்துறை அமைச்சர் ஏற்கனவே தமிழகத்திற்கு வந்து, இங்குள்ள அரசியல் தலைமைகளுடனும் மத்திய அரசுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இது ராஜதந்திர மட்டத்தில் பேசித் தீர்க்கப்பட வேண்டிய விவகாரம் என்பதால், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து இப்போது கருத்துக் கூறுவது கடினம்.

இலங்கை மக்களின் தற்போதைய வாழ்வாதாரம் மற்றும் விலைவாசி உயர்வு குறித்துப் பேசுகையில், தற்போதைக்கு விலைவாசி விவகாரத்தில் பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லை. நாளுக்கு நாள் விலைவாசி ஏறிக்கொண்டுதான் செல்கிறது.

மத்திய கிழக்கு யுத்தத்தை பொறுத்தவரை, மோதல் தவிர்ப்பு ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைக்கு இன்னும் அநேக நாட்கள் எஞ்சியுள்ளன. அது சுமுகமாக முடிந்தாலும், அதன் சாதகமான பலன்களை அனுபவிக்க இன்னும் 2 முதல் 3 மாதங்கள் ஆகும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். எனவே, உலகளாவிய இந்த யுத்த சூழ்நிலைகளால் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சுமைகளையும், ஏற்கனவே இலங்கையில் உள்ள பொருளாதார வீழ்ச்சியையும் சேர்த்து சமாளிப்பது என்பது தற்போதைய அரசுக்கு மிக சவாலான காரியமாக உருவெடுத்துள்ளது .

தி.மு.க அரசாக இருந்தாலும் சரி, தமிழக வெற்றிக் கழகமாக இருந்தாலும் சரி, இரு நாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகளைத் தீர்க்க மத்திய அரசுடன் இணைந்துதான் செயற்பட வேண்டும்.

சர்வதேச நாணய மாற்று விகிதத்தில் இலங்கை நாணயம் சந்தித்துள்ள வீழ்ச்சி, இறக்குமதியாளர்களைப் பெரிய அளவில் பாதித்துள்ளது. கச்சா எண்ணெய், பயிர் உரம் (பசளை) போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கான இறக்குமதி இதனால் முடங்கியுள்ளது.

மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உடன்படிக்கையின்படி கடன்களை மறுசீரமைப்பு செய்ய எங்களுக்கு இரண்டு வருட கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், கச்சா (மசகு) எண்ணெய் மற்றும் இதர அத்தியாவசிய இறக்குமதிகளுக்காக எங்களின் அந்நியச் செலாவணி இருப்பு வேகமாக கரைந்து வருகிறது. சர்வதேச நாணயநிதி எதிர்பார்த்த அளவை விட கையிருப்பு குறைந்து வருவது நாட்டுக்கு மேலும் ஒரு பாரிய கடன் சுமையை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

இந்தக் கடன் சுமையைச் சமாளிப்பது எப்படி என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க நாம் ஏற்றுமதிகளை அதிகரிக்க வேண்டும் அல்லது வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க வேண்டும். இந்த இரண்டு விஷயங்களிலும் தற்போதைய இலங்கை அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, இந்தியாவின் தமிழ்நாடு உள்ளிட்ட தென்பிராந்திய மாநிலங்களில் உள்ள முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வர வேண்டும். அதற்கான தாராளமான ஊக்குவிப்பு தொகைகளையும், சாதகமான சூழலையும் ஏற்படுத்தித் தர இலங்கை அரசு தயாராக இருக்கிறது. அதனை நாங்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.

கேள்வி : இலங்கை இந்தியா இடையே உறவுகள் எப்படி இருக்கிறது

பதில் : இலங்கையில் பொருளாதார சரிவு ஏற்பட்டது. எங்களுக்கு இந்தியா பெரும் அளவில் உதவி செய்ததது. ரூ. 4000 பில்லியன் டொலர்கள் உதவி செய்ததை மறக்க முடியாது. எங்கள் உறவு தொப்புள் கொடி உறவு. எப்போதும் இந்தியாவோடு நெருங்கி உறவுகளுவோடு தான் இருக்கிறோம்.

விலைவாசி விவகாரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை நாளுக்குநாள் ஏறிக்கொண்டு செல்கிறது, ஈரான் அமெரிக்கா இடையே மோதல் முடிவுக்கு வந்தாலும் நிலைமை சீராக இரண்டு மூன்று மாதங்கள் ஆகும் என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள், யுத்தத்தினால் ஏற்பட்ட சுமை மற்றும் பொருளாதார வீழ்ச்சியிலிருந்தும் மீண்டு வருவது ஒரு சவாலான விஷயம்.

தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பாக, வட பிராந்தியத்தின் மீனவர் சமுதாயம் நெகிழ்ச்சி போக்கை கையாள்வது பற்றி அரசு அவர்களிடம் பேசிக்கொண்டு இருக்கிறது. இலங்கை மீன்வளத்துறை அமைச்சு மத்திய, மாநில அரசுகளிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறது. ராஜதந்திர மட்டத்தில் இதற்கான முடிவுகள் எட்டப்படுவது தான் சிறந்தது. சட்டரீதியாக நீதிமன்றத்தில் உள்ள விவகாரங்கள் பற்றி பேச முடியாது.

தி.மு.கவாக இருந்தாலும் சரி, தமிழக வெற்றி கழகமாக இருந்தாலும் சரி இரண்டு நாடுகளிடையே உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மத்திய அரசுடன் பேசி தான் தீர்வு காண வேண்டும், இரு அரசுகளும் இலங்கை அரசுடன் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு ஒத்துழைப்பு தர அனைவரும் தயாராக இருக்கிறார்கள் என்றார்.

Related Posts

சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியாகின!

சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியாகின!

by selvan
June 19, 2026
0

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (19) வெளியிடப்பட்டுள்ளன.2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையானது, கடந்த...

இந்த ஆண்டுக்குள் பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்படும்

by selvan
June 19, 2026
0

நீண்டகாலமாக விவாதத்திற்குரியதாக இருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) இந்த ஆண்டுக்குள் முழுமையாக நீக்கப்பட்டு, புதிய சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார...

துமிந்த திஸாநாயக்கவை மீண்டும் சந்தேகநபராகப் பெயரிடுமாறு உத்தரவு!

துமிந்த திஸாநாயக்கவை மீண்டும் சந்தேகநபராகப் பெயரிடுமாறு உத்தரவு!

by selvan
June 19, 2026
0

ஹெவ்லொக் சிட்டி சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசிய ரி-56 ரக துப்பாக்கியின் உரிமையாளர் தொடர்பான வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த...

பசிலுக்கு எதிரான பிடியாணையை மீளப் பெற முடியாது! – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

by selvan
June 19, 2026
0

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப் பெறுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை மாத்தறை பிரதம நீதவான் சதுரங்க எரங்க திஸாநாயக்க நிராகரித்துள்ளார். மாத்தறை எளியகந்த வீதி,...

மன்னாரில் ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்பின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு!

மன்னாரில் ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்பின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு!

by selvan
June 19, 2026
0

ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்பின் ஸ்தாபக தலைவர் தோழர் கே.பத்மநாபா மற்றும் போராளிகள்,பொது மக்களின் 36 ஆவது ஆண்டு நினைவு தின தியாகிகள் தின நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (19) மாலை...

நுவரேலியாவில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுப்பு!

நுவரேலியாவில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுப்பு!

by selvan
June 19, 2026
0

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு,  நுவரெலியா மாவ்டத்தின் அம்பகமுவ சபை எல்லைக்குட்பட்ட அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளையும் உள்ளடக்கி, பொது இடங்கள், குடியிருப்புப் பகுதிகள், கடைகள்...

வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயக் காணிகளை விடுவிக்கக் கோரி உரிமையாளர்கள் போராட்டம்!

வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயக் காணிகளை விடுவிக்கக் கோரி உரிமையாளர்கள் போராட்டம்!

by selvan
June 19, 2026
0

யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமாண்டோ" பங்களா...

நீதி இல்லாத நாட்டிற்கு நீதி அமைச்சர் எதற்கு? – செம்மணியில் போராட்டம்!

நீதி இல்லாத நாட்டிற்கு நீதி அமைச்சர் எதற்கு? – செம்மணியில் போராட்டம்!

by selvan
June 19, 2026
0

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்காக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வருகை தரவுள்ள நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்று ஏ -...

மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரைக்கும் பரிட்சார்த்த புகையிரத சேவை முன்னெடுப்பு

மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரைக்கும் பரிட்சார்த்த புகையிரத சேவை முன்னெடுப்பு

by selvan
June 19, 2026
0

மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரைக்கும் புகையிரத சேவையின் பரிட்சார்த்த நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை (19) மதியம் இடம் பெற்றது.-தலைமன்னாரில் இருந்து கொழும்பிற்கான புகையிரத சேவைகள் கடந்த 6...

நெடுந்தீவில் கடற்படைக்குக் காணி ஒதுக்கப்பட்ட விவகாரம் – யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில்  மோதல்!

நெடுந்தீவில் கடற்படைக்குக் காணி ஒதுக்கப்பட்ட விவகாரம் – யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில்  மோதல்!

by selvan
June 19, 2026
0

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், நெடுந்தீவில் கடற்படைக்குக் காணி ஒதுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆளும் தரப்பினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாய்த்தர்க்கம் காரணமாகக் கூட்டம்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி