• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, June 5, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

முத்தரிப்புத்துறையில் அருவி ஆற்றின் கரை அரிப்பைத் தடுக்க விசேட தலையீட்டைக் கோருகிறார் ரவிகரன் எம்.பி!

selvan by selvan
June 5, 2026
in இலங்கை செய்திகள்.
0
முத்தரிப்புத்துறையில் அருவி ஆற்றின் கரை அரிப்பைத் தடுக்க விசேட தலையீட்டைக் கோருகிறார் ரவிகரன் எம்.பி!
Share on FacebookShare on Twitter

மன்னார் மாவட்டத்தின் சிலாவத்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முத்தரிப்புத்துறை கிராமத்தில், அருவி ஆற்றின் நீரோட்டத்தினால் ஏற்பட்டு வரும் கடுமையான ஆற்றங்கரை அரிப்பைத் தடுப்பதற்கு உடனடியாக விசேட தலையீட்டை மேற்கொள்ளுமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மன்னார் மாவட்டச் செயலாளரிடம் கடிதம் மூலம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட ஆற்றங்கரை அரிப்பை விடவும், கடந்த ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட ‘தித்வா’ புயலின் பின்னர் இப்பகுதியில் பாதிப்புகள் மிகக் கடுமையான முறையில் அதிகரித்து வருகின்றமை தொடர்பில் மாவட்டச் செயலாளரின் கவனத்திற்கு குறித்த கடிதம் மூலம் ரவிகரனால் கொண்டுவரப்பட்டுள்ளது.

முத்தரிப்புத்துறை மக்களும், புனித செங்கோல் மாதா ஆலய பங்குத்தந்தையும் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக, பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடந்த 2026.05.01 மற்றும் 2026.05.25 ஆகிய நாள்களில் குறித்த பகுதிகளுக்கு நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாகவே அவரால் நேற்று (04.06.2026) இந்த அவசரக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மாவட்டச் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

‘தித்வா’ புயலின் பின்னரான கடுமையான ஆற்றங்கரை அரிப்பினால், இக்கரையோரத்தில் வாழும் 50இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நேரடியாகப் பாதிப்படைந்துள்ளதோடு, வரலாற்றுச் சிறப்புமிக்க புனித செங்கோல் மாதா ஆலய வளாகமும் தொடர்ச்சியாகப் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றது.

மக்களின் வாழிடங்களில் உள்ள பெறுமதிமிக்க மரங்கள் வேரோடு சரிந்து வருவதுடன், மலசலகூடங்கள் உடைந்து பயன்படுத்த இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

அருவி ஆறு பல்வேறு கிளை ஆறுகளாகப் பிரிந்து கடலுடன் கலக்கும் நிலையில், இவ் ஆற்றங்கரை அரிப்புக்கான தற்காலிக அல்லது நிரந்தர தடுப்பு ஏற்பாடுகள் உடனடியாகச் செய்யப்படாவிட்டால், முத்தரிப்புத்துறை கிராமத்தின் பெரும்பாலான பகுதிகள் அடுத்த 5-10 ஆண்டுகளில் கடலோடு சங்கமிக்கும் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளன.


எனவே, தற்போது நிகழும் பாதிப்புகள் மேலும் தொடராதிருக்கும் வகையில், உடனடித் தற்காலிக ஏற்பாடுகளையும், முறையான திட்டமிடலுடனான நிரந்தர கரையோர அரிப்புத் தடுப்பு வேலைத்திட்டத்தையும் முன்னெடுக்குமாறு ரவிகரன் எம்.பி ஆல் கோரப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் மாவட்டச் செயலகத்தால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து தமக்கும் இற்றைப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதோடு, கிராமத்தின் நிலவரத்தை விளக்கும் வெவ்வேறு காலப்பகுதிகளில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களும் (இணைப்பு 01-08), புனித செங்கோல் மாதா ஆலய பங்குத்தந்தை அவர்களால் ரவிகரனுக்கு அனுப்பப்பட்ட கடிதமும் (இணைப்பு 09) மேற்படி கடிதத்துடன் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது.

இக்கடிதத்தின் பிரதிகள் வடமாகாண கௌரவ ஆளுநர், வடமாகாண பிரதம செயலாளர் மற்றும் முத்தரிப்புத்துறை புனித செங்கோல் மாதா ஆலய பங்குத்தந்தை ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

by selvan
June 5, 2026
0

நேற்றிரவு வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிளவத்தை பகுதியில் வாள்வெட்டு குழு ஒன்று அட்டகாசம் புரிந்துள்ளது. முகங்களை மூடி, கறுப்பு உடை அணிந்து, வாளுடன் வந்த குழுவினர் வீட்டின்...

கற்பனைக் கதைகளால் தீர்வு காணவே முடியாது! – ஜனாதிபதியைச் சாடும் முஜிபுர்

கற்பனைக் கதைகளால் தீர்வு காணவே முடியாது! – ஜனாதிபதியைச் சாடும் முஜிபுர்

by selvan
June 5, 2026
0

தற்போதைய அரசுக்கு முறையான பொருளாதார தொலைநோக்கு பார்வை இல்லாததன் காரணமாக, டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...

சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் 9 வயதுச் சிறுவன் உயிரிழப்பு!

சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் 9 வயதுச் சிறுவன் உயிரிழப்பு!

by selvan
June 5, 2026
0

பொத்துவில் பசரிச்சேனை ஜும்ஆ பள்ளிவாயல்க்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் 9 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்காக சென்ற 9 வயதுடைய அறூஸ்...

மன்னாரில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கண்டல்த் தாவர நடுகை

மன்னாரில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கண்டல்த் தாவர நடுகை

by selvan
June 5, 2026
0

பூமி மற்றும் அதன் இயற்கை வளங்களின் நிலைத்தன்மையை உறுதி படுத்தும் நோக்கில், உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டு...

தேசிய மக்கள் சக்தியை யாராலும்  அசைத்துவிட முடியாது! – அமைச்சர் சுசில் ரணசிங்க முழக்கம்

தேசிய மக்கள் சக்தியை யாராலும் அசைத்துவிட முடியாது! – அமைச்சர் சுசில் ரணசிங்க முழக்கம்

by selvan
June 5, 2026
0

தேசிய மக்கள் சக்தி என்பது வெறும் அரசியல் இயக்கம் மட்டுமல்லாமல், அதுவொரு முறையான ஒழுக்கமும், பலமான கட்டமைப்பும் கொண்ட மக்கள் சக்தி என்பதால் தங்களை யாராலும் எளிதாக...

சுரேஷ் சலேவுக்குக் கடுமையான சித்திரவதை! – மொட்டுக் கட்சி குற்றச்சாட்டு

சுரேஷ் சலேவுக்குக் கடுமையான சித்திரவதை! – மொட்டுக் கட்சி குற்றச்சாட்டு

by selvan
June 5, 2026
0

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, நாட்டுக்குச் சேவையாற்றிய முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலேயை அதே சட்டத்தின் கீழ்...

தமிழர்கள் பாடுவதற்குக் கூட சுதந்திரம் இல்லாத நாடு இலங்கை – மன்னார் நகர சபையின் முதல்வர் தெரிவிப்பு!

தமிழர்கள் பாடுவதற்குக் கூட சுதந்திரம் இல்லாத நாடு இலங்கை – மன்னார் நகர சபையின் முதல்வர் தெரிவிப்பு!

by selvan
June 5, 2026
0

உண்மையிலேயே தமிழர்கள் பாடுவதற்கு கூட சுதந்திரம் இல்லாத ஒரு நாடாக எமது  நாடு மாறிக்கொண்டு வருகிறது என மன்னார் நகர சபையின் முதல்வர் டானியல் வசந்தன் தெரிவித்துள்ளார்....

உமையாள்புரம் கிராம அலுவலர் பிரிவில் 300 மரக்கன்றுகள் நடும் விசேட நிகழ்வு.!

உமையாள்புரம் கிராம அலுவலர் பிரிவில் 300 மரக்கன்றுகள் நடும் விசேட நிகழ்வு.!

by Mathavi
June 5, 2026
0

மரங்களை நடுகை செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு தற்போது மக்கள் மத்தியில் பரவலாக ஏற்பட்டிருக்கின்றது. அவ்வாறு நடுகை செய்யப்படும் மரங்களைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வும்...

பொன்.சிவகுமாரனின் நினைவேந்தல் யாழில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு!

பொன்.சிவகுமாரனின் நினைவேந்தல் யாழில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு!

by selvan
June 5, 2026
0

தமிழின விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்ட முதல் தியாகியான பொன். சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தல் நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை யாழ். உரும்பிராயில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. வலிகாமம் கிழக்கு...

மனிதர்களின் செயற்பாடுகளால் யானைகளின் வாழ்விடங்கள் அழிக்கப்படுகின்றன.!

மனிதர்களின் செயற்பாடுகளால் யானைகளின் வாழ்விடங்கள் அழிக்கப்படுகின்றன.!

by Mathavi
June 5, 2026
0

மனிதர்களின் செயற்பாடுகளால் (காடழிப்பு) யானைகளின் வாழ்விடங்கள் அழிக்கப்படுகின்றன. அவற்றுக்கான உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவதனாலேயே அவை கிராமங்களை நோக்கி வருகின்றன என மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தின் மாவட்ட...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி