• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, June 5, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

மனிதர்களின் செயற்பாடுகளால் யானைகளின் வாழ்விடங்கள் அழிக்கப்படுகின்றன.!

Mathavi by Mathavi
June 5, 2026
in இலங்கை செய்திகள்., மட்டக்களப்பு செய்திகள்
0
மனிதர்களின் செயற்பாடுகளால் யானைகளின் வாழ்விடங்கள் அழிக்கப்படுகின்றன.!
Share on FacebookShare on Twitter

மனிதர்களின் செயற்பாடுகளால் (காடழிப்பு) யானைகளின் வாழ்விடங்கள் அழிக்கப்படுகின்றன. அவற்றுக்கான உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவதனாலேயே அவை கிராமங்களை நோக்கி வருகின்றன என மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தின் மாவட்ட அதிகாரி என்.சுரேஸ்குமார் தெரிவித்தார்.

உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட உறுகாமம் பகுதியில் யானை மனித மோதலை கட்டுப்படுத்த சிரமதான நிகழ்வு மற்றும் மரநடுகை உட்பட பல்வேறு நிகழ்வுகள் நடாத்தப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை, ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகம் ஆகியவற்றின் பங்கேற்புடன் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

வனஜீவராசிகள் திணைக்களத்தின் மாவட்ட அதிகாரி என்.சுரேஸ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதேசத்தின் கிராம சேவையாளர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், கிராம தலைவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது யானை மனித மோதலுக்கு அதிகம் பாதிப்புக்குள்ளாகும் உறுகாமம் பகுதியில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உறுகாமம் சுபைர் வித்தியாலயத்தில் பொது மக்களுக்கு யானை மனித மோதலைக் கட்டுப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு வழங்கப்பட்டதுடன், மரம் நடுகை நிகழ்வு மற்றும் யானைகள் அதிகம் நடமாடும் வீதியோரத்தில் உள்ள பற்றைக்காடுகளை துப்பரவு செய்து சிரமதானம் என்பனவும் இடம்பெற்றன.

இதன்போது யானை தாக்குதல்களிலிருந்து இரவு வேளைகளில் பாதுகாக்கும் வகையில் வீதி மின்விளக்குகளும் பிரதேச சபையினால் பொருத்தப்பட்டன.

இதன்போது கருத்து தெரிவித்த சுரேஸ்குமார்,
இந்த உறுகாமம் பிரதேசம் யானை – மனித மோதலால் அதிகளவு பாதிப்புக்குள்ளான பிரதேசமாகக் காணப்படுகின்றது. நான் நினைக்கிறேன், ஒரு 10 வருடங்களுக்கு முன்னர் இந்த உறுகாமம் பிரதேசத்தைச் சுற்றி ஒரு யானை வேலி அமைக்கப்பட்டுள்ளது. அந்த யானை வேலி உறுகாமம், கித்துள் போன்ற கிராமங்களைப் பாதுகாப்பதற்கு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் திட்டமிட்டு அமைக்கப்பட்டிருந்த போதிலும், யானை வேலி பராமரிப்பு உறுகாமம் பிரதேசத்துக்குள் தற்பொழுதும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது.
ஏன் அவ்வாறு நடக்கிறது என்று நாங்கள் சிந்தித்துப் பார்த்தால், குறித்த அந்த யானைக்குரிய இருப்பிடம் காட்டிலில்லை. அதற்குரிய உணவுத் தேவை இல்லை. காரணம், சனத்தொகை வளர்ச்சி காரணமாக நம் மனித செயற்பாடு காட்டை நோக்கி முன்னேறி, அங்குள்ள மரங்களை, அதன் வாழ்விடங்களை அழித்த காரணத்தினால் அதன் பலாபலனை நாம் தற்பொழுது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

அதற்காக நாம் என்ன செய்ய வேண்டும்? மரங்களை நட வேண்டும். காடழிப்பைத் தடுக்க வேண்டும். இவ்வாறான செயற்பாட்டைச் செயற்படுத்துவதன் மூலம், குறித்த உயிரினங்களுக்கு, உதாரணமாக யானைகளுக்குரிய வாழ்விடங்களை ஏற்படுத்திக் கொடுத்து, அதனை அழிவிலிருந்து பாதுகாக்கக் கூடியதாக இருக்கும் என்பது ஒரு யதார்த்தம்.

நாம் ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு மரமாவது இன்றைய தினத்தில் நமது வீட்டில் நாட்ட வேண்டும். எனக்குத் தெரியும் இந்த உறுகாமம் பிரதேசம் தண்ணீருக்கு மிகவும் கஷ்டமான பிரதேசம். அவ்வாறு இருந்தும் கூட, இந்த உறுகாமம் பிரதேசத்தில் நான் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று பார்த்தால், ஏதாவது ஒரு மூலையில் ஒரு தேசிய மரமாவது நட்டி வைப்பார்கள். அவ்வாறான ஒரு தொழில் முயற்சியாளர்கள் வாழ்கின்ற இடம்தான் இந்த உறுகாமம். தேனீ வளர்ப்பு போன்றவை இன்னும் ஞாபகம் இருக்கிறது.

யானைகளால் மக்கள் பாதிக்கப்படுகின்ற அதேவேளை, மக்களுடைய வாழ்வாதாரங்களை அரசாங்கம் கட்டியெழுப்பிக் கொடுத்த போதிலும், இந்த யானையினால் அவை அழிக்கப்படுகின்றன. அவற்றைப் பாதுகாப்பது எப்படி என்று பல திட்டங்கள் உள்ளன. அதன் அடிப்படையில்தான் யானை வேலி மற்றும் யானையால் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கான நட்டஈடுகள், குறிப்பாக இவ்வருடம் 43 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மக்களுக்கும் மாவட்டத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பல சேவைகளை வனஜீவராசிகள் திணைக்களம் செய்த போதிலும், இந்த யானை – மனித மோதலைக் குறைப்பதற்கு பொதுமக்களாகிய உங்களது பங்களிப்பு நூற்றுக்கு நூறு வீதம் அவசியம்.

வனஜீவராசிகள் திணைக்களம் மாத்திரம் எதையும் செய்ய முடியாது. பொதுமக்களுடைய பங்களிப்பும், ஏனைய அரச உத்தியோகத்தர்களின் பங்களிப்பும் இருந்தால் மாத்திரமே குறிப்பிட்ட இந்த யானை – மனித மோதலைத் தடுக்கக் கூடியதாக இருக்கும்.

Related Posts

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

by selvan
June 5, 2026
0

நேற்றிரவு வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிளவத்தை பகுதியில் வாள்வெட்டு குழு ஒன்று அட்டகாசம் புரிந்துள்ளது. முகங்களை மூடி, கறுப்பு உடை அணிந்து, வாளுடன் வந்த குழுவினர் வீட்டின்...

கற்பனைக் கதைகளால் தீர்வு காணவே முடியாது! – ஜனாதிபதியைச் சாடும் முஜிபுர்

கற்பனைக் கதைகளால் தீர்வு காணவே முடியாது! – ஜனாதிபதியைச் சாடும் முஜிபுர்

by selvan
June 5, 2026
0

தற்போதைய அரசுக்கு முறையான பொருளாதார தொலைநோக்கு பார்வை இல்லாததன் காரணமாக, டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...

சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் 9 வயதுச் சிறுவன் உயிரிழப்பு!

சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் 9 வயதுச் சிறுவன் உயிரிழப்பு!

by selvan
June 5, 2026
0

பொத்துவில் பசரிச்சேனை ஜும்ஆ பள்ளிவாயல்க்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் 9 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்காக சென்ற 9 வயதுடைய அறூஸ்...

முத்தரிப்புத்துறையில் அருவி ஆற்றின் கரை அரிப்பைத் தடுக்க விசேட தலையீட்டைக் கோருகிறார் ரவிகரன் எம்.பி!

முத்தரிப்புத்துறையில் அருவி ஆற்றின் கரை அரிப்பைத் தடுக்க விசேட தலையீட்டைக் கோருகிறார் ரவிகரன் எம்.பி!

by selvan
June 5, 2026
0

மன்னார் மாவட்டத்தின் சிலாவத்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முத்தரிப்புத்துறை கிராமத்தில், அருவி ஆற்றின் நீரோட்டத்தினால் ஏற்பட்டு வரும் கடுமையான ஆற்றங்கரை அரிப்பைத் தடுப்பதற்கு உடனடியாக விசேட தலையீட்டை...

மன்னாரில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கண்டல்த் தாவர நடுகை

மன்னாரில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கண்டல்த் தாவர நடுகை

by selvan
June 5, 2026
0

பூமி மற்றும் அதன் இயற்கை வளங்களின் நிலைத்தன்மையை உறுதி படுத்தும் நோக்கில், உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டு...

தேசிய மக்கள் சக்தியை யாராலும்  அசைத்துவிட முடியாது! – அமைச்சர் சுசில் ரணசிங்க முழக்கம்

தேசிய மக்கள் சக்தியை யாராலும் அசைத்துவிட முடியாது! – அமைச்சர் சுசில் ரணசிங்க முழக்கம்

by selvan
June 5, 2026
0

தேசிய மக்கள் சக்தி என்பது வெறும் அரசியல் இயக்கம் மட்டுமல்லாமல், அதுவொரு முறையான ஒழுக்கமும், பலமான கட்டமைப்பும் கொண்ட மக்கள் சக்தி என்பதால் தங்களை யாராலும் எளிதாக...

சுரேஷ் சலேவுக்குக் கடுமையான சித்திரவதை! – மொட்டுக் கட்சி குற்றச்சாட்டு

சுரேஷ் சலேவுக்குக் கடுமையான சித்திரவதை! – மொட்டுக் கட்சி குற்றச்சாட்டு

by selvan
June 5, 2026
0

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, நாட்டுக்குச் சேவையாற்றிய முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலேயை அதே சட்டத்தின் கீழ்...

தமிழர்கள் பாடுவதற்குக் கூட சுதந்திரம் இல்லாத நாடு இலங்கை – மன்னார் நகர சபையின் முதல்வர் தெரிவிப்பு!

தமிழர்கள் பாடுவதற்குக் கூட சுதந்திரம் இல்லாத நாடு இலங்கை – மன்னார் நகர சபையின் முதல்வர் தெரிவிப்பு!

by selvan
June 5, 2026
0

உண்மையிலேயே தமிழர்கள் பாடுவதற்கு கூட சுதந்திரம் இல்லாத ஒரு நாடாக எமது  நாடு மாறிக்கொண்டு வருகிறது என மன்னார் நகர சபையின் முதல்வர் டானியல் வசந்தன் தெரிவித்துள்ளார்....

உமையாள்புரம் கிராம அலுவலர் பிரிவில் 300 மரக்கன்றுகள் நடும் விசேட நிகழ்வு.!

உமையாள்புரம் கிராம அலுவலர் பிரிவில் 300 மரக்கன்றுகள் நடும் விசேட நிகழ்வு.!

by Mathavi
June 5, 2026
0

மரங்களை நடுகை செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு தற்போது மக்கள் மத்தியில் பரவலாக ஏற்பட்டிருக்கின்றது. அவ்வாறு நடுகை செய்யப்படும் மரங்களைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வும்...

பொன்.சிவகுமாரனின் நினைவேந்தல் யாழில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு!

பொன்.சிவகுமாரனின் நினைவேந்தல் யாழில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு!

by selvan
June 5, 2026
0

தமிழின விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்ட முதல் தியாகியான பொன். சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தல் நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை யாழ். உரும்பிராயில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. வலிகாமம் கிழக்கு...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி