கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவு உட்பட்ட நாச்சிகுடா பிரதேசத்தில் கடற்கரையோரத்தை பாதுகாக்கும் வகையில் கண்டல் தாவரங்கள் இன்று (05) நடுகை செய்யப்பட்டுள்ளன.
உலக சுற்றாடல் தினத்தையொட்டி கடல் வாழ் உயிரினங்களின் பெருக்கத்தை அதிகரிப்பதற்கும் இயற்கை சமநிலையை பேணும் வகையிலும் மெசிடோ அமைப்புடன் பிரதேச கடற்தொழிலாளர்கள் இணைந்து குறித்த கண்டல் தாவரங்கள் நடுகை செய்யப்பட்டுள்ளன.
இன்றைய தினம் நாச்சிகுடா கரையோர பகுதி முழுவதும் குறித்த கண்டல் தாவரங்கள் நடுகை செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டிலும் இவ்வாறு கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்கவும் மீன் இனப்பெருக்கத்தை அதிகரிக்கவும் இயற்கை சூழலை பேணும் வகையிலும் கண்டல் தாவரங்கள் நடுகை செய்யப்பட்டுள்ளன.
குறித்த கரையோரப் பகுதிகளில் இதுவரை ஆயிரத்து76-க்கும் மேற்பட்ட கண்டல் தாவரங்கள் நடுகை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதில் கடற்தொழிலாளர்கள், மெசிடோ நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், கடற்தொழிலாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.












