• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, June 5, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

வாக்குறுதிகளை என்.பி.பி. அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்.!

Mathavi by Mathavi
June 5, 2026
in இலங்கை செய்திகள்.
0
வாக்குறுதிகளை என்.பி.பி. அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்.!
Share on FacebookShare on Twitter

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்னர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா வலியுறுத்தியுள்ளார்.

எதுல்கோட்டையிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது தற்போதைய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் குறித்து அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் வர்த்தகத் துறையும் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது என்று குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், கடந்த இரண்டு வருடங்களில் இலங்கை ரூபாயின் மதிப்பு வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது என்றும் குற்றஞ்சாட்டினார்.

டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பை வலுப்படுத்துவதற்கு ஏற்றுமதி வருவாய் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற போதிலும், அதனை ஊக்குவிக்க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் சாடினார்.

அமெரிக்கா தனது இறக்குமதிகளுக்கு 12.5 % வரி விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளமையால் இலங்கையின் ஆடை ஏற்றுமதித் துறை பாரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது என்றும், மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழல் காரணமாக தேயிலை ஏற்றுமதியும், வெளிநாட்டுப் பண அனுப்புதல்களும் வீழ்ச்சியடைந்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், ஐரோப்பிய நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ள நிலையில், மாற்று நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க அரசு தவறியுள்ளது என்று குறிப்பிட்ட அவர், தற்போதைய அரசிடம் பொருளாதாரத்தை மீட்கக்கூடிய திறமையான அல்லது அனுபவமிக்க குழுவினர் எவரும் இல்லை என்றும் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாக மக்களுக்கு வழங்கப்படும் மானியங்களை அரசு நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரித்த ஹர்ஷன ராஜகருணா, இதனால் மின்சாரக் கட்டணம், எரிபொருள் விலை, நீர்க் கட்டணம் மற்றும் எரிவாயு விலை என்பன மீண்டும் அதிகரிக்கக்கூடும் என்றும் கூறினார்.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயரும் அதேவேளை, மக்களின் வருமானம் அதிகரிக்காமல் செலவுகள் மட்டுமே அதிவேகமாக உயர்ந்து வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில், நாட்டைச் சூறையாடவோ, வேலைநிறுத்தங்களை நடத்தவோ அல்லது வன்முறைகளில் ஈடுபடவோ ஐக்கிய மக்கள் சக்தி முற்படாது என்று உறுதியளித்த அவர், பொறுப்புணர்வுடன், நாகரிகமான முறையில் மக்கள் சார்பாகத் தங்களது கடமைகளைச் செய்ய அர்ப்பணிப்புடன் உள்ளது என்றும் தெரிவித்தார்.

‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட சொத்துக்களைப் புனரமைப்பதற்காக அரசால் உருவாக்கப்பட்ட நிதி கணக்கு சட்டபூர்வமற்ற ஒன்று என்பது நாடாளுமன்ற அரசாங்க நிதிக் குழுவுக் கூட்டத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் வெளிப்படுத்தினார்.

இந்நிதிக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பொதுமக்களிடமிருந்து பெருமளவிலான பணம் திரட்டப்பட்ட போதிலும், இதுவரை அதில் ஒரு ரூபாவேனும் பாதிக்கப்பட்ட மக்களுக்காகச் செலவிடப்படவில்லை என்றும், பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் தற்காலிக முகாம்களிலேயே வாழ்வதுடன் சேதமடைந்த வீதிகள், பாலங்கள் எவையும் இதுவரை புனரமைக்கப்படவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என மேடைகளில் கூறப்பட்ட போதிலும், தற்போது அதனை நடத்துவதற்கு அரசு எவ்வித தயார்நிலையும் காட்டவில்லை என்று தெரிவித்த அவர், அரசு நாட்டில் ஒரு சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்த முற்படுகின்றது என்றும் குறிப்பிட்டார்.

அரசியல் சாசனத்தை மீறி தன்னிச்சையான நியமனங்களை அரசு மேற்கொண்டு வருகின்றது என்றும், ஜே.வி.பியின் தலைமையகமான ‘பெலவத்தை’ கட்சி காரியாலயப் பிரதிநிதிகளே இன்று சுயாதீன ஆணைக்குழுக்களைக் கட்டுப்படுத்துகின்றனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மாகாண ஆளுநர்களுக்கு எவ்வித அதிகாரமும் இன்றி பெலவத்தை காரியாலயத்தின் உத்தரவின்படியே மாகாண சபைகள் நிர்வாகம் செய்யப்படுவதால் சில ஆளுநர்கள் பதவி விலக நேரிட்டுள்ளது என்று கூறிய அவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகளை விடவும் கட்சிப் பிரதிநிதிகளின் தலையீடே மேலோங்கி நிற்கின்றது என்றும் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற மகா பரிமாண ஊழல்கள் மட்டுமன்றி, தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசின் கீழ் இடம்பெற்றதாகக் கூறப்படும் கொள்கலன் மோசடி, நிலக்கரி மோசடி உள்ளிட்ட ஊழல்களுக்கு எதிராகவும் சட்டம் துரிதமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரினார்.

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான தனிநபர்களுடன் ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் இணையாது என்றும், கொள்கை ரீதியாகக் கட்சிகளுடனேயே கூட்டணி அமைப்போம் என்றும் தெளிவுபடுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தங்களது முகாம்களைப் பலப்படுத்தி, பொதுவான ஒரு வேட்பாளரைக் களமிறக்குவதற்கு இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் மேலும் தெரிவித்தார்.

Related Posts

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

by selvan
June 5, 2026
0

நேற்றிரவு வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிளவத்தை பகுதியில் வாள்வெட்டு குழு ஒன்று அட்டகாசம் புரிந்துள்ளது. முகங்களை மூடி, கறுப்பு உடை அணிந்து, வாளுடன் வந்த குழுவினர் வீட்டின்...

கற்பனைக் கதைகளால் தீர்வு காணவே முடியாது! – ஜனாதிபதியைச் சாடும் முஜிபுர்

கற்பனைக் கதைகளால் தீர்வு காணவே முடியாது! – ஜனாதிபதியைச் சாடும் முஜிபுர்

by selvan
June 5, 2026
0

தற்போதைய அரசுக்கு முறையான பொருளாதார தொலைநோக்கு பார்வை இல்லாததன் காரணமாக, டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...

சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் 9 வயதுச் சிறுவன் உயிரிழப்பு!

சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் 9 வயதுச் சிறுவன் உயிரிழப்பு!

by selvan
June 5, 2026
0

பொத்துவில் பசரிச்சேனை ஜும்ஆ பள்ளிவாயல்க்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் 9 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்காக சென்ற 9 வயதுடைய அறூஸ்...

முத்தரிப்புத்துறையில் அருவி ஆற்றின் கரை அரிப்பைத் தடுக்க விசேட தலையீட்டைக் கோருகிறார் ரவிகரன் எம்.பி!

முத்தரிப்புத்துறையில் அருவி ஆற்றின் கரை அரிப்பைத் தடுக்க விசேட தலையீட்டைக் கோருகிறார் ரவிகரன் எம்.பி!

by selvan
June 5, 2026
0

மன்னார் மாவட்டத்தின் சிலாவத்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முத்தரிப்புத்துறை கிராமத்தில், அருவி ஆற்றின் நீரோட்டத்தினால் ஏற்பட்டு வரும் கடுமையான ஆற்றங்கரை அரிப்பைத் தடுப்பதற்கு உடனடியாக விசேட தலையீட்டை...

மன்னாரில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கண்டல்த் தாவர நடுகை

மன்னாரில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கண்டல்த் தாவர நடுகை

by selvan
June 5, 2026
0

பூமி மற்றும் அதன் இயற்கை வளங்களின் நிலைத்தன்மையை உறுதி படுத்தும் நோக்கில், உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டு...

தேசிய மக்கள் சக்தியை யாராலும்  அசைத்துவிட முடியாது! – அமைச்சர் சுசில் ரணசிங்க முழக்கம்

தேசிய மக்கள் சக்தியை யாராலும் அசைத்துவிட முடியாது! – அமைச்சர் சுசில் ரணசிங்க முழக்கம்

by selvan
June 5, 2026
0

தேசிய மக்கள் சக்தி என்பது வெறும் அரசியல் இயக்கம் மட்டுமல்லாமல், அதுவொரு முறையான ஒழுக்கமும், பலமான கட்டமைப்பும் கொண்ட மக்கள் சக்தி என்பதால் தங்களை யாராலும் எளிதாக...

சுரேஷ் சலேவுக்குக் கடுமையான சித்திரவதை! – மொட்டுக் கட்சி குற்றச்சாட்டு

சுரேஷ் சலேவுக்குக் கடுமையான சித்திரவதை! – மொட்டுக் கட்சி குற்றச்சாட்டு

by selvan
June 5, 2026
0

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, நாட்டுக்குச் சேவையாற்றிய முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலேயை அதே சட்டத்தின் கீழ்...

தமிழர்கள் பாடுவதற்குக் கூட சுதந்திரம் இல்லாத நாடு இலங்கை – மன்னார் நகர சபையின் முதல்வர் தெரிவிப்பு!

தமிழர்கள் பாடுவதற்குக் கூட சுதந்திரம் இல்லாத நாடு இலங்கை – மன்னார் நகர சபையின் முதல்வர் தெரிவிப்பு!

by selvan
June 5, 2026
0

உண்மையிலேயே தமிழர்கள் பாடுவதற்கு கூட சுதந்திரம் இல்லாத ஒரு நாடாக எமது  நாடு மாறிக்கொண்டு வருகிறது என மன்னார் நகர சபையின் முதல்வர் டானியல் வசந்தன் தெரிவித்துள்ளார்....

உமையாள்புரம் கிராம அலுவலர் பிரிவில் 300 மரக்கன்றுகள் நடும் விசேட நிகழ்வு.!

உமையாள்புரம் கிராம அலுவலர் பிரிவில் 300 மரக்கன்றுகள் நடும் விசேட நிகழ்வு.!

by Mathavi
June 5, 2026
0

மரங்களை நடுகை செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு தற்போது மக்கள் மத்தியில் பரவலாக ஏற்பட்டிருக்கின்றது. அவ்வாறு நடுகை செய்யப்படும் மரங்களைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வும்...

பொன்.சிவகுமாரனின் நினைவேந்தல் யாழில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு!

பொன்.சிவகுமாரனின் நினைவேந்தல் யாழில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு!

by selvan
June 5, 2026
0

தமிழின விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்ட முதல் தியாகியான பொன். சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தல் நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை யாழ். உரும்பிராயில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. வலிகாமம் கிழக்கு...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி