• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, June 3, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு அரசு மீது நம்பிக்கையில்லை.!

Mathavi by Mathavi
June 3, 2026
in இலங்கை செய்திகள்.
0
வெளிநாட்டு ஊழியர்களுக்கு அரசு மீது நம்பிக்கையில்லை.!
Share on FacebookShare on Twitter

தேர்தல் காலத்தில் திசைகாட்டி அரசு நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின்படி, வெளிநாட்டு ஊழியர்கள் டொலர்களை நாட்டுக்கு அனுப்புவதில் ஏற்பட்டுள்ள தாமதமானது, தற்போதைய அரசின் மீதான வெளிநாட்டு ஊழியர்களின் நம்பிக்கையீனத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கலாம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன,

“தேசிய பொருளாதாரத்தின் வெளிநாட்டுத் துறையில் விரைவான மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக, தேர்தல் காலத்தில் திசைகாட்டி அரசு மிகவும் அழகான, பிரபலமான ஒரு முன்மொழிவை முன்வைத்தது. அதுதான் வெளிநாடுகளில் வாழும் இலங்கை நண்பர்களிடமிருந்து கிடைக்கப்போகும் டொலர்கள் பற்றிய கதையாகும். இந்த முன்மொழிவு அண்மைய நாட்களாக மீண்டும் பேசும்பொருளாக மாறியுள்ளது.

அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான திசைகாட்டி அரசு ஆட்சிக்கு வந்து, அதன் ஒட்டுமொத்தப் பதவிக்காலத்தில் இப்போது மூன்றில் ஒரு பகுதி நிறைவடைந்துள்ளது. ஆனால், வெளிநாடுகளில் வாழும் இலங்கையைச் சேர்ந்த அந்தத் தாராளமனம் கொண்ட நண்பர்களை இந்த அரசாங்கம் இன்னும் சந்திக்கவில்லை. நமக்குத் தெரிந்தவரை, அந்த வழியின் ஊடாக மில்லியன் கணக்கான டொலர்கள் ஒருபுறமிருக்க, ஒரு டொலர் கூட இன்னும் நாட்டுக்குள் வரவில்லை.

இந்தப் பிரபலமான முன்மொழிவு, தேர்தல் மேடைகளில் பேசப்பட்ட வெறும் உணர்ச்சிப்பூர்வமான பேச்சு மட்டும்தானா? இல்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது கௌரவ அநுர திஸாநாயக்கவின் வெற்றிக்காக முன்வைக்கப்பட்ட ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ கொள்கைப் பிரகடனத்திலும் அவர்கள் இந்தக் கருத்தாக்கத்தை முன்வைத்திருந்தார்கள். தேர்தல் மேடைகளில் பொதுமக்கள் இது குறித்து அறிவற்றவர்கள் என்ற ரீதியில் அவர்கள் பேசினாலும், கொள்கைப் பிரகடனத்தில் முறையானதொரு கட்டமைப்பின் கீழ் இந்த விடயம் விவாதிக்கப்பட்டிருந்தது.

அந்தக் கொள்கைப் பிரகடனத்தில், அவர்கள் வெளிநாட்டு ஊழியர்களுக்கான பிணைமுறி முன்மொழிவொன்றை முன்வைத்திருந்தார்கள். இரண்டாவதாக, பிரதேச அபிவிருத்தித் திட்டங்களுக்காக, வெளிநாட்டு இலங்கையர்களை இலக்கு வைத்து புதிய அபிவிருத்தி பிணைமுறி முன்மொழிவொன்றும் அதில் உள்ளடக்கப்படிருந்தது.

இவ்வாறானதொரு திட்டம் ஏன் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை? இதற்கு முக்கிய காரணம், இந்த அரசு மக்களுக்கு முன்வைத்த தங்களுடைய சொந்தக் கொள்கைப் பிரகடனத்தைக் கைவிட்டுவிட்டே ஆட்சியை நடத்துகிறது என்பதாகும்.

அதேபோன்று, வெளிநாட்டு இலங்கையர்களுக்கு டொலர்களை அனுப்பும் அளவுக்கு இந்த அரசின் மீது நம்பிக்கை இல்லை என்பதும் அரசாங்கத்திற்கு நன்றாகத் தெரியும். இந்தக் காரணங்களைத் தவிர வேறு ஏதேனும் காரணங்கள் இருந்தால், அதனை மக்களுக்குத் தெளிவுபடுத்துவது அரசின் கடமையாகும்.” – என்றார்.

Related Posts

‘1990 சுவசெரிய’ அம்புலன்ஸ் சேவை முடக்கப்படவில்லை!

‘1990 சுவசெரிய’ அம்புலன்ஸ் சேவை முடக்கப்படவில்லை!

by selvan
June 3, 2026
0

நாடளாவிய ரீதியில் இலவசமாக முன்னெடுக்கப்பட்டு வரும் '1990 சுவசெரிய' அவசர அம்புலன்ஸ் சேவை முடக்கப்பட்டுள்ளதாகச் சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை அதன் நிர்வாகம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது....

இந்திய பிரதி உயர்ஸ்தானிகருக்கும் ஜே.வி. பி க்கும் இடையே சந்திப்பு

இந்திய பிரதி உயர்ஸ்தானிகருக்கும் ஜே.வி. பி க்கும் இடையே சந்திப்பு

by selvan
June 3, 2026
0

ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, இலங்கையிலுள்ள இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டேயை நேற்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். கொழும்பில் தனது மூன்று ஆண்டுகால இராஜதந்திரப் பணிக்காலத்தை...

மருதங்கேணியில் இறால்க் குளம் தூர்வாரும் பணிகள் ஆரம்பம்

மருதங்கேணியில் இறால்க் குளம் தூர்வாரும் பணிகள் ஆரம்பம்

by selvan
June 3, 2026
0

யாழ்ப்பாணம் மருதங்கேணி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பொற்பதி (J/420) கிராம அலுவலர் பிரிவில், 1 மில்லியன் ரூபா செலவிலான இறால் குளம் தூர்வாரும் பணி இன்று உத்தியோகபூர்வமாக...

யோஷித ராஜபக்ஷவின் சீராய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானம்

யோஷித ராஜபக்ஷவின் சீராய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானம்

by selvan
June 3, 2026
0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ சமர்ப்பித்த சீராய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று புதன்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. பண மோசடி...

சுரேஷ் சலேயின் விசேட மனு; நாளை அறிக்கை சமர்ப்பிக்குக.!

சுரேஷ் சலேயின் விசேட மனு; நாளை அறிக்கை சமர்ப்பிக்குக.!

by Mathavi
June 3, 2026
0

உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான குற்றவியல் விசாரணைகளில் மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் கைது.!

போதைப்பொருளுடன் ஒருவர் கைது.!

by Mathavi
June 3, 2026
0

பேராதனை, கொரகாதெனிய பகுதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, 6 கிலோகிராமுக்கும் அதிக எடையுடைய கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேராதனை...

வடக்கில் வெசாக் தன்சல், அலங்காரங்கள்; ஆளுநர் எந்தத் தடையும் விதிக்கவில்லை.!

யாழ். பல்கலைக்கழக வெசாக் கூடு சேதப்படுத்தல்; பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவும் தீவிர விசாரணை.!

by Mathavi
June 3, 2026
0

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இணைந்து உருவாக்கிய வெசாக் கூடு சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து தீவிர விசேட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்று...

நாடாளுமன்ற அனுமதியின்றி மாகாண சபைத் தேர்தல் நிதி மறு ஒதுக்கீடு செய்யப்பட்டதா?

மாகாண சபை விவகாரத்தில் இந்தியாவை மீண்டும் இழுப்பது சரியல்ல.!

by Mathavi
June 3, 2026
0

மாகாண சபைத் தேர்தல் அல்லது இலங்கையின் தேசிய இனப் பிரச்சினை விவகாரங்களில் இந்தியாவை மீண்டும் இழுத்து உள்ளே விடுவது எமக்கும் சரி, இந்தியாவுக்கும் சரி, எவ்வித நன்மையையும்...

வட்டுவாகல் பாலத்தின் ஒரு பகுதியாவது தமிழின அழிப்பின் நினைவுச் சின்னமாக பாதுகாக்கப்பட வேண்டும்.!

வட்டுவாகல் பாலத்தின் ஒரு பகுதியாவது தமிழின அழிப்பின் நினைவுச் சின்னமாக பாதுகாக்கப்பட வேண்டும்.!

by Mathavi
June 3, 2026
0

முல்லைத்தீவு - வட்டுவாகல் பழைய பாலத்தின் ஒரு பகுதியாவது தமிழ் இன அழிப்பின் நினைவுச் சின்னமாகப் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா...

ஹாட்லிக் கல்லூரியில் விளையாட்டு உள்ளரங்கு அமைக்க நடவடிக்கை..!

ஹாட்லிக் கல்லூரியில் விளையாட்டு உள்ளரங்கு அமைக்க நடவடிக்கை..!

by Mathavi
June 3, 2026
0

யாழ்ப்பாணம் வடமராட்சி ஹாட்லிக் கல்லூரியின் நீண்டகால தேவையாக காணப்படுகின்ற பொது நோக்கு விளையாட்டு உள்ளரங்கு அமைக்கும் கோரிக்கைக்கு மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் R.சந்திரசேகர் நடவடிக்கைகளை...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி