• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, June 3, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

மாகாண சபை விவகாரத்தில் இந்தியாவை மீண்டும் இழுப்பது சரியல்ல.!

Mathavi by Mathavi
June 3, 2026
in இலங்கை செய்திகள்.
0
நாடாளுமன்ற அனுமதியின்றி மாகாண சபைத் தேர்தல் நிதி மறு ஒதுக்கீடு செய்யப்பட்டதா?
Share on FacebookShare on Twitter

மாகாண சபைத் தேர்தல் அல்லது இலங்கையின் தேசிய இனப் பிரச்சினை விவகாரங்களில் இந்தியாவை மீண்டும் இழுத்து உள்ளே விடுவது எமக்கும் சரி, இந்தியாவுக்கும் சரி, எவ்வித நன்மையையும் பயக்காது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

வடக்கு – கிழக்கை இணைத்து, இந்தியாவால் பெற்றுத்தர முடிந்த மாகாண சபை முறையை முதற்கட்ட தீர்வாகப் பெற்று, தம்மைத் திடப்படுத்திக் கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் வரலாறு தந்த வாய்ப்பைத் தமிழ்த் தேசியக் கட்சிகள் தவறவிட்டுவிட்டன என்றும், அதனால் இன்று மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே வரலாறு நம்மைக்கொண்டு வந்து விட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆங்கில நாளேடு ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அந்த நேர்காணலில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது:-
“இலங்கை இனப் பிரச்சினை விவகாரத்தில் இந்திய அரசுக்கு ஒரு தார்மீகப் பொறுப்பு உள்ளது என்பது உண்மைதான். அந்தப் பொறுப்பு உருவாவதற்குக் காரணம், இலங்கையில் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தைச் செயலிழக்கச் செய்வதில் இந்தியாவின் இராஜதந்திர முயற்சிகளும், இராணுவத் தலையீடும் தீர்மானகரமான பங்கை வகித்தமையே ஆகும். அந்தச் செயல்முறையில் இந்தியா சுமார் இரண்டாயிரம் இராணுவ வீரர்களை இழந்தது. இதற்கு முன்னோடியாக, தமிழ் ஆயுத இயக்கங்கள் இந்தியாவில் பயிற்சி பெற்ற காலகட்டமும் இருந்தது. அதன் விளைவாக, இந்தியத் தொடர்பு என்பது இலங்கையின் சிங்களவர், தமிழர் ஆகிய இரு தரப்புக்குமே உணர்வுபூர்வமான ஒரு விடயமாக மாறியது.

எனினும், இன்று மாறிவிட்ட புதிய உலக ஒழுங்குச் சூழ்நிலையில், இந்தியாவை மீண்டும் இந்த விவகாரத்துக்குள் இழுத்து வரக் கூடாது என்ற நிலைப்பாட்டில்தான் நான் இருக்கின்றேன். இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் நிலைப்பாடும் இதுதான் என நான் திடமாக நம்புகின்றேன். இந்திய அரசு, இனிமேல் இலங்கைத் தமிழர் தரப்பின் பங்காளியாக, இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையில் நேரடியாகத் தலையிட்டுச் செயற்படாது என்பது எனக்கு நன்கு விளங்குகின்றது.

அண்மைக்காலங்களில், தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில் இந்தியப் பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் சமீபத்தில் இந்திய உப ஜனாதிபதி உள்ளிட்ட அந்நாட்டின் உயர்மட்டத் தலைவர்களை நாம் சந்தித்த போதெல்லாம், 13ஆவது திருத்தம் அல்லது மாகாண சபைகள் தொடர்பான விடயங்கள் எமது நிகழ்ச்சி நிரலில் இடம்பெறவில்லை.

13ஆவது திருத்தச் சட்டம் என்பது இலங்கையின் அரசமைப்பின் ஒரு பகுதியாகும். எனவே, அதனைத் தக்கவைத்துக் கொள்வதா, மேம்படுத்துவதா, முழுமையாக நடைமுறைப்படுத்துவதா, சீர்திருத்துவதா அல்லது முற்றிலும் நீக்குவதா என்பதைத் தீர்மானிக்க வேண்டியது ஒட்டுமொத்த இலங்கையர்களின் பொறுப்பாகும். இந்த விவகாரத்திலிருந்து இந்தியாவைத் தூரத்தில் வைத்திருப்பது இந்தியாவுக்கும் நன்மை பயக்கும். குறிப்பாக, புதிய உலக ஒழுங்குச் சூழலில், இந்தியா ஒரு தமிழர் ஆதரவு நாடாக அல்லாமல், இலங்கையை முழுமையாக ஆதரிக்கும் ஒரு நாடாகவே சர்வதேசத்தால் பார்க்கப்பட வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகள் இந்தியாவுடனான தங்களது உறவைச் சரியான முறையிலும், சரியான நேரத்திலும் பயன்படுத்தத் தவறிவிட்டன. இலங்கை அரசின் மீது இந்தியா கொண்டிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, இணக்கமான அரசியல் தீர்வை முன்னெடுக்க அவர்கள் போதுமான முயற்சிகளை எடுக்கவில்லை. அதேபோல், மாகாண சபை அமைப்பைப் பயன்படுத்தித் தங்களது நிலையை முதலில் வலுப்படுத்திக் கொண்டு, பிறகு அடுத்த கட்டத்தை நோக்கி நகரவும், இந்தியாவின் நம்பிக்கையைப் பெறவும் அவர்கள் திறம்படச் செயல்படவில்லை.

மாகாண சபையை நிர்வாக மற்றும் அரசியல் அதிகாரப் பகிர்வுத் தளமாகப் பயன்படுத்தாமல், வெறுமனே கட்சி அரசியல் தளமாகப் பயன்படுத்தி, தங்களுக்குள் அடிபட்டு மோதி, அது ஒரு பயனற்ற அமைப்பு என்ற கருத்து மக்கள் மத்தியில் ஏற்படக் காரணமாகிவிட்டார்கள். அதன் விளைவாக, மாகாண சபை விவகாரத்தில் நாம் மீண்டும் தொடக்க நிலைக்கே திரும்பிவிட்டோம்.

ஆகவே, இந்த விவகாரத்தில் இந்தியாவை மீண்டும் இழுத்து வர முடியாது. வரவும் கூடாது. தீர்வு இலங்கைக்குள், இலங்கையர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, இலங்கையர்களாலேயே இறுதி செய்யப்பட வேண்டும். இந்தியாவுடன் பரஸ்பர நன்மை தரும் பொருளாதார இணைப்புகளைத்தான் நாம் மேலும் ஆழப்படுத்த வேண்டுமே தவிர, அரசியல் தீர்வுகளுக்காக அவர்களைச் சார்ந்திருக்கக் கூடாது.” – என்றார்.

Related Posts

‘1990 சுவசெரிய’ அம்புலன்ஸ் சேவை முடக்கப்படவில்லை!

‘1990 சுவசெரிய’ அம்புலன்ஸ் சேவை முடக்கப்படவில்லை!

by selvan
June 3, 2026
0

நாடளாவிய ரீதியில் இலவசமாக முன்னெடுக்கப்பட்டு வரும் '1990 சுவசெரிய' அவசர அம்புலன்ஸ் சேவை முடக்கப்பட்டுள்ளதாகச் சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை அதன் நிர்வாகம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது....

இந்திய பிரதி உயர்ஸ்தானிகருக்கும் ஜே.வி. பி க்கும் இடையே சந்திப்பு

இந்திய பிரதி உயர்ஸ்தானிகருக்கும் ஜே.வி. பி க்கும் இடையே சந்திப்பு

by selvan
June 3, 2026
0

ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, இலங்கையிலுள்ள இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டேயை நேற்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். கொழும்பில் தனது மூன்று ஆண்டுகால இராஜதந்திரப் பணிக்காலத்தை...

மருதங்கேணியில் இறால்க் குளம் தூர்வாரும் பணிகள் ஆரம்பம்

மருதங்கேணியில் இறால்க் குளம் தூர்வாரும் பணிகள் ஆரம்பம்

by selvan
June 3, 2026
0

யாழ்ப்பாணம் மருதங்கேணி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பொற்பதி (J/420) கிராம அலுவலர் பிரிவில், 1 மில்லியன் ரூபா செலவிலான இறால் குளம் தூர்வாரும் பணி இன்று உத்தியோகபூர்வமாக...

யோஷித ராஜபக்ஷவின் சீராய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானம்

யோஷித ராஜபக்ஷவின் சீராய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானம்

by selvan
June 3, 2026
0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ சமர்ப்பித்த சீராய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று புதன்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. பண மோசடி...

சுரேஷ் சலேயின் விசேட மனு; நாளை அறிக்கை சமர்ப்பிக்குக.!

சுரேஷ் சலேயின் விசேட மனு; நாளை அறிக்கை சமர்ப்பிக்குக.!

by Mathavi
June 3, 2026
0

உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான குற்றவியல் விசாரணைகளில் மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் கைது.!

போதைப்பொருளுடன் ஒருவர் கைது.!

by Mathavi
June 3, 2026
0

பேராதனை, கொரகாதெனிய பகுதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, 6 கிலோகிராமுக்கும் அதிக எடையுடைய கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேராதனை...

வெளிநாட்டு ஊழியர்களுக்கு அரசு மீது நம்பிக்கையில்லை.!

வெளிநாட்டு ஊழியர்களுக்கு அரசு மீது நம்பிக்கையில்லை.!

by Mathavi
June 3, 2026
0

தேர்தல் காலத்தில் திசைகாட்டி அரசு நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின்படி, வெளிநாட்டு ஊழியர்கள் டொலர்களை நாட்டுக்கு அனுப்புவதில் ஏற்பட்டுள்ள தாமதமானது, தற்போதைய அரசின் மீதான வெளிநாட்டு ஊழியர்களின்...

வடக்கில் வெசாக் தன்சல், அலங்காரங்கள்; ஆளுநர் எந்தத் தடையும் விதிக்கவில்லை.!

யாழ். பல்கலைக்கழக வெசாக் கூடு சேதப்படுத்தல்; பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவும் தீவிர விசாரணை.!

by Mathavi
June 3, 2026
0

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இணைந்து உருவாக்கிய வெசாக் கூடு சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து தீவிர விசேட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்று...

வட்டுவாகல் பாலத்தின் ஒரு பகுதியாவது தமிழின அழிப்பின் நினைவுச் சின்னமாக பாதுகாக்கப்பட வேண்டும்.!

வட்டுவாகல் பாலத்தின் ஒரு பகுதியாவது தமிழின அழிப்பின் நினைவுச் சின்னமாக பாதுகாக்கப்பட வேண்டும்.!

by Mathavi
June 3, 2026
0

முல்லைத்தீவு - வட்டுவாகல் பழைய பாலத்தின் ஒரு பகுதியாவது தமிழ் இன அழிப்பின் நினைவுச் சின்னமாகப் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா...

ஹாட்லிக் கல்லூரியில் விளையாட்டு உள்ளரங்கு அமைக்க நடவடிக்கை..!

ஹாட்லிக் கல்லூரியில் விளையாட்டு உள்ளரங்கு அமைக்க நடவடிக்கை..!

by Mathavi
June 3, 2026
0

யாழ்ப்பாணம் வடமராட்சி ஹாட்லிக் கல்லூரியின் நீண்டகால தேவையாக காணப்படுகின்ற பொது நோக்கு விளையாட்டு உள்ளரங்கு அமைக்கும் கோரிக்கைக்கு மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் R.சந்திரசேகர் நடவடிக்கைகளை...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி