• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 28, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

பொருளாதார, சமூக, சுகாதார, கல்வி உரிமைகள் அரசமைப்பில் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும்.!

Mathavi by Mathavi
May 28, 2026
in இலங்கை செய்திகள்.
0
பொருளாதார, சமூக, சுகாதார, கல்வி உரிமைகள் அரசமைப்பில் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும்.!
Share on FacebookShare on Twitter

“நமது நாட்டின் அரசமைப்பில் அடிப்படை உரிமைகளின் கீழ் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கு மேலதிகமாக, பொருளாதார, சமூக, சுகாதார மற்றும் கல்வி உரிமைகள் சேர்க்கப்பட வேண்டும்” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார். இவை அடிப்படை மனித உரிமைகளாக மாற்றப்படும் போதே, மாதவிடாய் வறுமையைப் போலவே நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் சுகாதாரப் பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வுகளைக் காண முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பெண்களின் மாதவிடாய் சுகாதார நலன் மற்றும் அது சார்ந்த சவால்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இன்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், மருத்துவ நிபுணர்கள், பெண்கள் அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்களை உள்ளடக்கிய விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறுகையில்,
“நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 52 சதவீதமானோர் பெண்களாகவே காணப்படுகின்றனர். இவ்வாறானதொரு சூழலில், மாதவிடாய் வறுமை என்பது நம் சமூகத்தில் பல்வேறு கோணங்களைக் கொண்ட ஒரு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இது குறித்துப் பொதுவெளியில் பேசத் தயங்குவதும், கலாச்சார ரீதியாக பொருத்தமற்றது என்று கருதுவது தவறானதாகும். இந்தத் தேக்க நிலையிலிருந்து விடுபட்டு நாம் அனைவரும் முற்போக்கான சிந்தனையுடன் செயல்பட வேண்டும்.

மருத்துவத் துறையின் உத்தியோகபூர்வ தரவுகளின்படி, நாட்டில் மாதவிடாய் சுகாதாரத்தைச் சரியாக முகாமைத்துவம் செய்யாமையினால் பெண்கள் பல்வேறு தீவிர சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். மாதவிடாய் சுழற்சிக்கு உட்படும் 42 இலட்சம் பெண்களில் 70 சதவீதமானோர், அதாவது சுமார் 30 இலட்சம் பேர் முறையான சுகாதாரப் பொருட்களைப் பயன்படுத்துவதில்லை என்பதுடன், ஆபத்தான முறையற்ற வழிகளையே பின்பற்றுகின்றனர். இதனால் ஏற்படும் தீவிரப் பாதிப்புகளுக்கு உள்ளாகுபவர்களில் வெறும் 12.6 சதவீதமானோர் மாத்திரமே முறையான மருத்துவ உதவிகளைப் பெறுகின்றனர். இந்நிலையானது மாணவிகளின் பாடசாலை வரவைக் கணிசமாகக் குறைத்துள்ளது.

சக மாணவர்களால் கேலி செய்யப்படுவது, பாடசாலை சீருடைகளில் ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் மன உளைச்சல் காரணமாக நாட்டில் 50 முதல் 60 சதவீதமான மாணவிகள் மாதவிடாய் நாட்களில் பாடசாலைக்குச் செல்வதைத் தவிர்க்கின்றனர். இதே நிலைதான் பணிபுரியும் பெண்களுக்கும் ஏற்படுகின்றது. பெண்களின் பங்களிப்பு ஏற்கனவே குறைவாக உள்ள நமது நாட்டின் தொழிலாளர் சந்தையில், இப் பிரச்சினைக்குச் சரியான தீர்வு காணப்படாமல் இருப்பது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை நேரடியாகப் பாதிக்கின்றது.

தற்போது பாடசாலை மாணவிகள் 10 இலட்சம் பேருக்கு 1.4 பில்லியன் ரூபாய் செலவில் அரசால் சுகாதார ஆரோக்கிய துவாய்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இதற்கு 15 வீத பொதுத்தீர்வை, 18 வீத வற் வரி, 10 வீத துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி, 15 வீத செஸ் வரி மற்றும் 2.5 வீத சமூக பாதுகாப்பு ஈட்டு வரி என 5 வகையான வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. பெண்களின் அத்தியாவசியத் தேவை மீதான இந்த வரி விதிப்பு மிகவும் தவறான ஒரு நடவடிக்கையாகும்.

இந்தியா, வங்காளதேசம், கென்யா, தென்னாபிரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகள் இந்தச் சுகாதாரப் பொருட்கள் மீதான வரிகளை முற்றாக நீக்கியுள்ளன. ஸ்காட்லாந்து நாடாளுமன்றம் இவற்றை பெண்களுக்கு இலவசமாக வழங்க சட்டமியற்றியுள்ளது. எனவே, நாமும் நமது நாட்டுப் பெண் பிள்ளைகளின் நலன் கருதி இவ்வரிகளை உடனடியாக நீக்க வேண்டும்.

உயர்தரத்திலான, குறைந்த விலை ஆரோக்கிய துவாய்களை ஏன் நம்மால் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடியாது? இதற்கான வசதிகளை அரசு ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம், உள்நாட்டுத் தொழில்துறை வலுப்பெறுவதுடன், எமது இளைஞர், யுவதிகளுக்குப் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும்.

2019 ஜனாதிபதித் தேர்தல் முதல் ஐக்கிய மக்கள் சக்தி இதற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றது. எனவே, இது தொடர்பாக ஒரு முறையான தேசியக் கொள்கை வகுக்கப்பட்டு, பெண்களின் சுகாதாரப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.” – என்றார்.

Related Posts

மதுபானப் போத்தல்களுடன் நபர் ஒருவர் கைது!

மதுபானப் போத்தல்களுடன் நபர் ஒருவர் கைது!

by selvan
May 28, 2026
0

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் அரச மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹச் பெருநாளை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே கொள்வனவு செய்த...

பருத்தித்துறை கடற்ப்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்களைக் காணவில்லை!

பருத்தித்துறை கடற்ப்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்களைக் காணவில்லை!

by selvan
May 28, 2026
0

பருத்தித்துறை முனை, மற்றும் கற்கோவளம் பகுதிகளிலிருந்து நேற்று கடற்றொழிலிற்கு 2 படகுகளில் சென்ற 4 பேர் கரை திரும்பாத நிலையில் இன்று கலைமுதல் தேடும் பணிகள் இடம்பெற்று...

நூதனமுறையில் போதை மாத்திரைகளை கடத்திய குற்றச்சாட்டின் கீழ் நபர் ஒருவர் யாழில் கைது!

நூதனமுறையில் போதை மாத்திரைகளை கடத்திய குற்றச்சாட்டின் கீழ் நபர் ஒருவர் யாழில் கைது!

by selvan
May 28, 2026
0

யாழ்ப்பாணம் சிவன்கோயிலை அண்மித்த பகுதியில் மிக நூதனமான முறையில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டின் கீழ் நபர் ஒருவர் யாழ். போதை ஒழிப்பு பொலிசாரால் கைது...

நாடளாவிய ரீதியில் நேற்று மட்டும் 948 பேர் போதைப் பொருட்களுடன் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று மட்டும் 948 பேர் போதைப் பொருட்களுடன் கைது!

by selvan
May 28, 2026
0

நாடு தழுவிய ரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சோதனை நடவடிக்கைகளில் நேற்று மட்டும் 948 சந்தேகநபர்கள் போதைப்பொருள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....

டிக்கோயா இரட்டைக் கொ*லையுடன் சம்மந்தப்பட்ட சந்தேக நபர் மீண்டும் கைது செய்யப்படவில்லை!

டிக்கோயா இரட்டைக் கொ*லையுடன் சம்மந்தப்பட்ட சந்தேக நபர் மீண்டும் கைது செய்யப்படவில்லை!

by selvan
May 28, 2026
0

ஹட்டன் டிக்கோயா பகுதியில் வயோதிப தம்பதியினரை கொலை செய்ததாக கருதப்படும் சந்தேக நபர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

விகாரைகளையும் அவற்றின் சொத்துக்களையும் கையகப்படுத்தும் முயற்சியை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்!

விகாரைகளையும் அவற்றின் சொத்துக்களையும் கையகப்படுத்தும் முயற்சியை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்!

by selvan
May 28, 2026
0

நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க பௌத்த விகாரைகள் மற்றும் புனிதத் தலங்களின் நிர்வாகங்களில் தலையிடுவதையும், அவற்றின் சொத்துக்களைக் கையகப்படுத்த முற்படுவதையும் அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்" என ராஜாங்கனை...

வடக்கின் நல்லிணக்கத்துக்கும் அபிவிருத்திக்கும் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைவோம் –  மாகாண ஆளுநர் அழைப்பு

வடக்கின் நல்லிணக்கத்துக்கும் அபிவிருத்திக்கும் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைவோம் – மாகாண ஆளுநர் அழைப்பு

by selvan
May 28, 2026
0

வடக்கு மாகாணத்தின் நல் இணக்கத்துக்கும் அபிவிருத்திக்கும் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைவோம் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் அழைப்பு விடுத்தார். புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஆளுநர்...

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு – நபர் ஒருவர் பலி!

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு – நபர் ஒருவர் பலி!

by selvan
May 28, 2026
0

களுத்துறை, வெட்டுமகடை பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் மீது ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகக் களுத்துறை தெற்கு...

மஸ்கெலியாவில் மூன்று நாட்கள் வெசாக் வலயம்.!

மஸ்கெலியாவில் மூன்று நாட்கள் வெசாக் வலயம்.!

by Mathavi
May 28, 2026
0

வெசாக் பௌர்ணமி நாள் நாளை முதல் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந் நிகழ்வை மஸ்கெலியா பிரதேச சபை, மஸ்கெலியா வர்த்தக...

அப்போது மாகாண சபைகளுக்கு எதிராக நாட்டைத் தீக்கிரையாக்கியது ஜே.வி.பியே.!

அப்போது மாகாண சபைகளுக்கு எதிராக நாட்டைத் தீக்கிரையாக்கியது ஜே.வி.பியே.!

by Mathavi
May 28, 2026
0

"மாகாண சபைத் தேர்தல் முறைமைக்கு எதிராகக் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி, நாடு முழுவதும் தீவைக்கும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டது ஜே.வி.பி.தான்" என்று முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி