தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்களுக்கான பதவியேற்பு விழா இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகையில் தொடங்கியது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், 108 இடங்களில் வெற்றி பெற்ற விஜயின் தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயுஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
அதைத் தொடர்ந்து சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் கடந்த 10 ஆம் திகதி நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதலமைச்சராக விஜய் பதவியேற்றுக் கொண்டார்.
என்.ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், வெங்கடரமணன், அருண்ராஜ் உள்பட 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.
அவர்களுக்கான அமைச்சுக்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
எனினும், மீதமுள்ள பல துறைகளுக்கான அமைச்சர்கள் நியமிக்கப்படாமல் இருந்தனர்.
இந்நிலையில், தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுவதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.
இந்நிலையில் புதிய அமைச்சர்களுக்கான பதவியேற்பு விழா இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகையில் தொடங்கியது.
ஏற்கனவே விஜய் பதவியேற்பு விழாவிலும் தமிழ்த்தாய் வாழ்த்தை பின்தள்ளி தேசிய கீதம் முதலில் பாடியதமை சர்ச்சையானது.
சர்ச்சைக்கு பின்னர் இம்முறையும் வந்தே மாதரத்துடன் பதவியேற்பு விழா ஆரம்பமாகியுள்ளது.










