சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான பணியகத்தின் ஏற்பாட்டில் அமைதிக்கான சர்வமத ஒருங்கிணைந்த பிரார்த்தனைகள் முல்லைத்தீவில் இடம்பெற்றது.
முல்லை மாவட்டத்தின் சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான சர்வமத ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஈரான், ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் யுத்தம் காரணமாக சிறுவர்கள், பொதுமக்கள் கொல்லப்படுவதை கண்டித்தும் இதனால் உலக நாடுகளிலும் இலங்கையிலும் பொருளாதார நெருக்கடியில் சந்தித்திருக்கும் பொதுமக்களின் நலன் கருதி இப்பிரார்த்தனை முல்லைத்தீவு கிக்கிராப்புர ஒன்றுக்கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு அருட்தந்தை S. J. ஜீவரட்னம் அடிக்களார் (CPR- நிறுவனத்தின் இயக்குனர்) தலைமை தாங்கினார்.
ஆசி உரையினை இஸ்லாம் மதகுரு மௌலவி J. ஆதில் (கலாச்சார உத்தியோகத்தர் – மாவட்ட செயலகம்),
கிறிஸ்தவ மதகுரு – அருட்தந்தை வியயேந்திரன் அடிக்களார் வழங்கினர்.
மத வழிபாடுகளை இஸ்லாம் மதகுரு மௌலவி மன்சூர், இந்து மதகுரு சோம சுந்தரஸ்வர ஜெனார்த்தன குருக்கள் (தண்ணீரூற்று ஊற்றங்கரை பிள்ளையார் ஆலயம் ), கிறிஸ்தவ மதகுரு அருட்தந்தை ராஜ் கிலேயர் (CPR – நிறுவனத்தின் ஆலோசகர்) நிகழ்த்தியதுடன் அருதந்தை S. J. ஜீவரட்னம் அடிக்களார் பிரகடனம் வாசித்தலின் மூலம் இந் நிகழ்வு நிறைவு பெற்றுள்ளது.















