• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 9, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்கள்; மூவர் உயிரிழப்பு.!

Mathavi by Mathavi
May 9, 2026
in இலங்கை செய்திகள்.
0
உந்துருளி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.!
Share on FacebookShare on Twitter

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை (8) இடம்பெற்ற விபத்துக்களில் இளைஞன் ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுவெல்லேகம – அளுத்பொல வீதியில் இடம்பெற்ற விபத்தில் உந்துருளி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அளுத்பொலவிலிருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த பாரவூர்தி ஒன்று, எதிரே வந்த உந்துருளியுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த உந்துருளி ஓட்டுநர், பின்னால் அமர்ந்து வந்தவர் மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, உந்துருளி ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விபத்தில் உயிரிழந்தவர் துனகஹ பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் என தெரியவந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் விபத்துடன் தொடர்புடைய பாரவூர்தியின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கொடதெனியாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – குருணாகல் வீதியின் உடுகொடகெதர சந்தியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொடதெனியாவிலிருந்து திவுலப்பிட்டிய நோக்கி பயணித்த உந்துருளி ஒன்று, வீதியை கடக்க முயன்ற பாதசாரியான முதியவர் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் திவுலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய முதியவர் என தெரியவந்துள்ளது.

திவுலப்பிட்டிய வைத்தியசாலையிலிருந்து கம்பஹா வைத்தியசாலைக்கு மாற்றப்படும்போது செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்துடன் தொடர்புடைய மோட்டார் உந்துருளி ஓட்டுநர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேநேரம், மாவனெல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவனெல்லை – அளுத்நுவர வீதியின் அழுபத்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த முதியவர் தனது காரை ஓட்டிச் சென்று, வீட்டின் அருகே வந்ததும் அதிலிருந்த 15 வயது சிறுவனிடம் காரை ஓட்டக் கொடுத்துள்ளார். பின்னர் அவர் காரின் முன்பக்கமாக வீதியை கடக்க முயன்றபோது, கார் முன்னோக்கி நகர்ந்ததால் அவர் மீது கார் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் மாவனெல்லை பகுதியைச் சேர்ந்த 86 வயதுடைய முதியவர் என தெரியவந்துள்ளது.

விபத்தின்போது காரை செலுத்திய 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விபத்துக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Posts

இந்திர விழாவில் சுகாதார சீர்கேடு; 6 வியாபாரிகளுக்கு பிடியாணை.!

இந்திர விழாவில் சுகாதார சீர்கேடு; 6 வியாபாரிகளுக்கு பிடியாணை.!

by Mathavi
May 9, 2026
0

யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறை இந்திர விழாவின் போது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது செயற்பட்ட 6 உணவு நிலைய உரிமையாளர்களுக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் அறுவருக்கு ஒரு இலட்சத்து...

முல்லைத்தீவில் அமைதிக்கான சர்வமத ஒருங்கிணைந்த பிரார்த்தனைகள்.!

முல்லைத்தீவில் அமைதிக்கான சர்வமத ஒருங்கிணைந்த பிரார்த்தனைகள்.!

by Mathavi
May 9, 2026
0

சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான பணியகத்தின் ஏற்பாட்டில் அமைதிக்கான சர்வமத ஒருங்கிணைந்த பிரார்த்தனைகள் முல்லைத்தீவில் இடம்பெற்றது. முல்லை மாவட்டத்தின் சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான சர்வமத ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஈரான், ரஷ்யா, அமெரிக்கா...

மகளையும், பேரப்பிள்ளையையும் காணவில்லை என தாய் பொலிஸில் முறைப்பாடு.!

மகளையும், பேரப்பிள்ளையையும் காணவில்லை என தாய் பொலிஸில் முறைப்பாடு.!

by Mathavi
May 9, 2026
0

கணவருடன் சென்ற மகள் மற்றும் 10 மாதம் நிரம்பிய பேரப்பிள்ளை ஆகிய இருவரும் காணாமல் போயுள்ளதாக குறித்த பெண்ணின் தாய் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை...

கைதி ஒருவர் உயிரிழப்பு; சிறைக் காவலர்கள் மூவர் கைது.!

போதைப்பொருட்களுடன் மூவர் கைது.!

by Mathavi
May 9, 2026
0

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில், நேற்று வெள்ளிக்கிழமை (8) போதைப்பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தையில் பொலிஸார்...

மின்னல் தாக்கி இளம் பெண் உயிரிழப்பு.!

பெண் ஒருவரின் சடலம் மீட்பு.!

by Mathavi
May 9, 2026
0

மாத்தறை - கிரிந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருகொடெல்ல கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை (8) மாலை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின்...

நடுக்கடலில் பழுதடைந்த சிவகங்கை கப்பல்.!

நடுக்கடலில் பழுதடைந்த சிவகங்கை கப்பல்.!

by Mathavi
May 9, 2026
0

காங்கேசன்துறையில் இருந்து நேற்று நாகபட்டினம் நோக்கிப் பயணித்த கப்பல் நடுக் கடலில் பழுதடைந்தமையால் பயணிகள் 5 மணி நேரம் தாமதித்தே நாகபட்டினத்தைச் சென்றடைந்தனர். இலங்கை - இந்தியா...

ஜூனில் மீண்டும் ரணில்; அரசியல் களம் அதிரும்.!

ஜூனில் மீண்டும் ரணில்; அரசியல் களம் அதிரும்.!

by Mathavi
May 9, 2026
0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எதிர்வரும் ஜூன் மாதம் மீண்டும் தீவிர அரசியலுக்குக் கொண்டு வரவுள்ளதாகவும், அதன் பின்னர் நாட்டின் அரசியல் களத்தில் பாரிய திருப்பங்கள் ஏற்படும்...

கிணறு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
May 9, 2026
0

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (08) மதியம் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பலபிட்டிய பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர்...

வெளிநாட்டு ஊழியர்களுக்காக தனிச் சட்ட அலகு வேண்டும்.!

வெளிநாட்டு ஊழியர்களுக்காக தனிச் சட்ட அலகு வேண்டும்.!

by Mathavi
May 9, 2026
0

"இந்த நாட்டில் போதுமான பொருளாதார வசதி இல்லாத காரணத்தால் தான் எமது இளைஞர்கள், யுவதிகள் கட்டார், டுபாய் போன்ற நாடுகளில் தொழில் புரிகின்றார்கள். அவர்கள் இந்த நாட்டில்...

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; ஒருவர் கைது.!

போதைப்பொருளுடன் ஒருவர் கைது.!

by Mathavi
May 9, 2026
0

தாய்லாந்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் குஷ் ரக போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி