1948
இலங்கையில் மலையகத் தமிழரை நாடற்றவர்களாக்கும் குடியுரிமைச் சட்டத்தை பிரதமர் டி. எஸ். சேனநாயக்கா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார்.
1977
அ. அமிர்தலிங்கம் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1987
விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் யாழ்ப்பாணம் சுதுமலையில் முதன் முதலில் மக்கள் முன் தோன்றி உரையாற்றினார்.
1998
இலங்கை முழுவதும் அவசரகாலச் சட்டத்தை ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிவித்தார்.
2006
திருகோணமலை நிவாரணப் பணியாளர்கள் படுகொலை: வறுமைக்கு எதிரான அமைப்பு என்ற பிரெஞ்சு அரச சார்பற்ற அமைப்பின் 17 தமிழ்ப் பணியாளர்கள் மூதூரில் இலங்கை இராணுவத்தினரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.
2006
ஈழத்துக் கலைஞர் பொன். கணேசமூர்த்தி யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1824
துருக்கிக்கும் கிரேக்கர்களுக்கும் இடையில் கோசு என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.
1889
வாசிங்டனில் ஸ்போக்கேன் என்ற இடத்தில் இடம்பெற்ற பெரும் தீயில் 32 குடியிருப்பு மனைகள் அழிந்தன.
1914
ஜேர்மனி பெல்ஜியத்தை முற்றுகையிட்டதை அடுத்து, பெல்ஜியமும் பிரித்தானியப் பேரரசு ஜெர்மனிக்கு எதிராகப் போரை அறிவித்தன. அமெரிக்கா நடுநிலை வகித்தது.
1915
முதலாம் உலகப் போர்: ஜேர்மனியின் 12ஆவது இராணுவம் போலந்தின் தலைநகர் வார்சாவாவைக் கைப்பற்றியது.
1924
மெக்சிக்கோவும் சோவியத் ஒன்றியமும் தூதரக உறவை ஏற்படுத்தின.
1936
கிரேக்கப் பிரதமர் இயோனிசு மெட்டாக்சசு நாடாளுமன்றத்தைக் கலைத்து தன்னை நாட்டின் தலைவராக அறிவித்தார்.
1944
பெரும் இன அழிப்பு: டச்சு உளவாளி ஒருவனால் காட்டிக் கொடுக்கப்பட்ட நிலையில், யூத நாட்காட்டிக் குறிப்பாளர் ஆன் பிராங்க்கும் அவரது குடும்பத்தினரும் கைது செய்யப்பட்டனர்.
1946
வடக்கு டொமினிக்கக் குடியரசில் 8.0 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 100 பேர் உயிரிழந்தனர், 20,000 பேர் வீடுகளை இழந்தனர்.
1964
குடிசார் உரிமைகள் இயக்கம்: ஜூன் 21 இல் காணாமல் போன குடிசார் உரிமைகளுக்கான ஊழியர் மூவரின் உடல்கள் மிசிசிப்பியில் கண்டெடுக்கப்பட்டன.
1965
நியூசிலாந்தினுள் குக் தீவுகள் சுயாட்சியுடன் கூடிய அதிகாரத்தைப் பெற்றது.
1969
வியட்நாம் போர்: பாரிசில் அமெரிக்கப் பிரதிநிதி என்றி கிசிஞ்சருக்கும் வடக்கு வியட்நாம் பிரதிநிதி உவான் தூயிக்கும் இடையில் இரகசிய அமைதிப் பேச்சுகள் ஆரம்பமாயின. பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.
1972
உகாண்டாவின் இராணுவத் தலைவர் இடி அமீன் அங்கு வாழும் ஆசிய நாட்டவர்கள் அனைவரையும் 90 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற ஆணையிட்டார்.
1972
சிம்லா ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.
1974
இத்தாலியில் விரைவுத் தொடருந்து ஒன்றில் குண்டு வெடித்ததில், 12 பேர் உயிரிழந்தனர், 22 பேர் காயமடைந்தனர்.
1975
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் சப்பானிய செம்படையினர் அமெரிக்கத் தூதர் உட்பட 50 பேரைப் பணயக் கைதிகளாகப் பிடித்தனர். பின்னர் இப் பணயக் கைதிகளை விடுவித்து சிறைக் கைதிகளாயிருந்த தமது 5 தோழர்களுடன் லிபியா பயணமாயினர்.
1984
மேல் வோல்ட்டா நாடு புர்கினா பாசோ எனப் பெயர் மாற்றம் பெற்றது.
2006
நியூசிலாந்தின் ஆளுநராக ஆனந்த் சத்தியானந்த் அறிவிக்கப்பட்டார். இவர் ஆகஸ்ட் 23 இல் பதவியேற்றார்.
2007
நாசாவின் பீனிக்சு விண்கலம் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.
2015
இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் இரண்டு விரைவு தொடருந்துகள் வெள்ளம் காரணமாக தடம் புரண்டதில் குறைந்தது 31 பேர் உயிரிழந்தனர், நூற்றிற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

















