• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, July 2, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

திசைகாட்டி அரசு தனது கொள்கைப் பிரகடனத்தை முற்றாக மறந்துவிட்டது!

selvan by selvan
July 1, 2026
in இலங்கை செய்திகள்.
0
திசைகாட்டி அரசு தனது கொள்கைப் பிரகடனத்தை முற்றாக மறந்துவிட்டது!
Share on FacebookShare on Twitter


தேசிய மக்கள் சக்தி அரசானது ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்ற தனது கொள்கைப்பிரகடனத்தை முற்றாக மறந்து, தங்களுக்கு மாத்திரம் சொகுசான வாழ்க்கையையும் வளமான அரசையும் உருவாக்கிக்கொண்டுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன குற்றம் சாட்டியுள்ளார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“திசைகாட்டி அரசு ஆட்சிக்கு வந்து தற்போது இரண்டு வருடங்கள் நிறைவடையவுள்ள நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசும் தங்களது கொள்கைப்பிரகடனத்தை முற்றாக மறந்துவிட்டதாகவே தோன்றுகின்றது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது இந்நாட்டு மக்கள் அநுரகுமார திஸாநாயக்கவின் முகத்தைப் பார்த்து வாக்களிக்கவில்லை. மாறாக ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்ற கொள்கைத்திட்டத்தை நம்பியே வாக்களித்தனர். இருப்பினும், இந்த அரசு மக்களின் அபிலாஷைகளை மாத்திரமன்றி, தாங்களாகவே தயாரித்த கொள்கைப்பிரகடனத்தையும் புறந்தள்ளிவிட்டு தன்னிச்சையாகச் செயற்பட்டு வருகின்றது.” – என்று சாடினார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையானது நாட்டின் தேசிய பொருளாதாரத்தில் ‘பொருளாதார ஸ்திரத்தன்மை’ மற்றும் ‘கடன் நிலைத்தன்மை’ ஆகிய இரு பிரதான காரணிகளை உருவாக்கியுள்ளது என்று சுட்டிக்காட்டிய அவர், இதன் அடிப்படையில் பொருளாதாரத்தை விரிவுபடுத்தி, நாட்டை வளமான பாதையை நோக்கி கொண்டு சென்றிருக்க வேண்டும் என்றார். ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கொண்டு பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதற்கான எவ்வித திட்டங்களும் அரசிடம் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகின்ற போதிலும், அரசின் ஏற்றுமதி மேம்பாட்டுத் திட்டம் கடந்த மாத நடுப்பகுதியில்தான் வெளியிடப்பட்டது என்றும், வரலாற்றில் நாம் எப்போதும் அந்நியச் செலாவணி நெருக்கடியின் நிழலிலேயே பயணித்து வரும் நிலையில், இதிலிருந்து விடுபட வேண்டுமாயின் ஏற்றுமதித் துறையில் பாரிய மாற்றம் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தகுந்த அறிஞர்கள் தம்மிடம் இருப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசு, ஒரு திட்டத்தை வெளியிட இரண்டு வருடங்களை எடுத்துக்கொண்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த அரசு ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்பதற்குப் பதிலாக, வளமான ஓர் அரசையும், அமைச்சர்களுக்கு அழகான சொகுசு வாழ்க்கையையுமே அமைத்துள்ளது என்றும், வரலாற்றில் உருவான மிக மோசமான முதலாளித்துவ அரசு அநுரகுமார திஸாநாயக்கவின் இந்த திசைகாட்டி அரசே ஆகும் என்றும் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்தார்.

தற்போதைய சூழலில் விவசாயிகள் தங்களின் பிரச்சினைகளைத் தாங்களே தனித்துத் தீர்த்துக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும், உள்நாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் ஏழை மக்கள் அரசின் எவ்வித ஆதரவும் இன்றித் தங்களது பிரச்சினைகளைத் தாங்களாகவே எதிர்கொள்ள நிர்பந்திக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

அரசு தனது பொறுப்புகளிலிருந்தும், மக்களுக்குச் சேவை செய்யும் பாத்திரத்திலிருந்தும் முற்றாக விடுபட்டு, வெறுமனே வரிகளை வசூலிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றது என்றும் அவர் குற்றம் சுமத்தினார்.

மேலும், அரசும் நாடும் வெவ்வேறானவை என்றும், அரசிடம் உள்ள நிதி ஆதாரங்களை முறையாக முதலீடு செய்து, மக்களுக்குச் சேவை வழங்குவதன் மூலமே ‘வளமான நாட்டை’ உருவாக்க முடியும் என்றும், அவ்வாறு செய்யாவிடில், அது அரசையும் அதன் அமைச்சர்களையும் மட்டுமே வளப்படுத்தும் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன சுட்டிக்காட்டினார்.

Related Posts

மட்டக்களப்பு மதுபானசாலைகளில் சோதனை – ஒருதொகை மதுப்போத்தல்கள் கைப்பற்றல்!

மட்டக்களப்பு மதுபானசாலைகளில் சோதனை – ஒருதொகை மதுப்போத்தல்கள் கைப்பற்றல்!

by selvan
July 1, 2026
0

கொழும்பிலிருந்து வருகை தந்த விசேட பொலிஸ் குழு ஒன்று இன்று மாலை மட்டக்களப்பில் உள்ள சில மதுபானசாலைகளை முற்றுகையிட்டு சட்டத்துக்கு முரணான வகையில் விற்கப்படும் ஒரு தொகை...

ஜூலை 6ஆம் திகதி முதல் பேருந்துக் கட்டணங்கள் அதிகரிப்பு!

ஜூலை 6ஆம் திகதி முதல் பேருந்துக் கட்டணங்கள் அதிகரிப்பு!

by selvan
July 1, 2026
0

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும், இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கமும் இணைந்து எதிர்வரும் 6ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்துக் கட்டணங்களை அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளன.இது...

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெப்பநிலை அபாய எச்சரிக்கை!

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெப்பநிலை அபாய எச்சரிக்கை!

by selvan
July 1, 2026
0

எதிர்வரும் ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வெப்பநிலை இயல்பை விட 2.8 பாகை செல்சியஸ் ஆல் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக...

காணி மீட்பு போராட்டம் தீவிரம்! – பலாலி மீள்குடியேற்ற அமைப்பு உதயம்

by selvan
July 1, 2026
0

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தங்களது பூர்வீகக் காணிகளை மீட்டெடுப்பதற்காக, அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து 'பலாலி மீள்குடியேற்ற அமைப்பு' என்ற பெயரில் புதியதொரு அமைப்பை...

அவசரகாலச் சட்டம் இம்மாதத்துடன் நிறைவு – அரசாங்கம் அறிவிப்பு!

by selvan
July 1, 2026
0

'டித்வா' பேரழிவைத் தொடர்ந்து நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகால நிலைமை, இம்மாதத்துக்கு மேல் நீடிக்கப்படமாட்டாது என்று அரசு இன்று அறிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் நடைமுறையிலிருந்த அவசரகாலக் கட்டுப்பாட்டு...

டெங்கு ஒழிப்பு அதிகாரிகள் போல் வேடமிட்டு போதைப்பொருள் கடத்தல்காரனை கைது செய்த பொலிஸார்!

டெங்கு ஒழிப்பு அதிகாரிகள் போல் வேடமிட்டு போதைப்பொருள் கடத்தல்காரனை கைது செய்த பொலிஸார்!

by selvan
July 1, 2026
0

உகண  மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் உள்ள இளைஞர்களை இலக்கு வைத்து நீண்டகாலமாக ஹெரோயின் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த பிரதான கடத்தல்காரர், அம்பாறை கோட்ட குற்றப்...

சுரேஷ் சலேயின் கோரிக்கைகள் நீதிமன்றத்தால் நிராகரிப்பு!

by selvan
July 1, 2026
0

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில் இருந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி...

அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால்   மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால்   மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

by selvan
July 1, 2026
0

அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ், சாதாரண தர மற்றும் உயர்தர...

கோர விபத்துக்களில் இருவர் பரிதாபப் பலி! 

குருநாகலில் விபத்து – இரு இளைஞர்கள் பலி!

by selvan
July 1, 2026
0

குருநாகல் மாவட்டம், பொத்துஹெர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு - குருநாகல் பிரதான வீதியின் ரஞ்சனகம சந்தியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இளைஞர்கள் இருவர்...

சுரேஷ் சலேவுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பில்லை – சரத் வீரசேகர தெரிவிப்பு.!

தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார் சுரேஷ் சாலே!

by selvan
July 1, 2026
0

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, தனது உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று கைவிட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி