கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டமானது இன்றைய தினம் (09) நாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியிலும் இந்தக் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டமானது கல்லூரியின் பதில் அதிபர் திருமதி. வதனி தில்லைச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வானது தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டு ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து டெங்கு ஒழிப்பு, சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு வீதி நாடகம், சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கவனயீர்ப்பு நடவடிக்கை, சிரமதானம், கண்காட்சி என்பன இடம்பெற்றன.
இடைவேளைக்குப் பின்னர் மேடை நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. இதன்போது டெங்கு, சிக்குன்குனியா, யானைக்கால் நோய்கள் தொடர்பான விழிப்புணர்வு குழுப் பாடல், கவிதைகள், நடனங்கள், பட்டிமன்றம் போன்ற கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதில் கல்லூரியின் பதில் அதிபர் திருமதி. வதனி தில்லைச்செல்வன், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர் மோகனரூபன், பெற்றோர், பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.




















