• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, June 27, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

சத்துருக்கொண்டான் சௌபாக்கியா வீட்டுத்திட்ட பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு.!

Mathavi by Mathavi
July 8, 2025
in இலங்கை செய்திகள்., மட்டக்களப்பு செய்திகள்
0
சத்துருக்கொண்டான் சௌபாக்கியா வீட்டுத்திட்ட பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு.!
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட சத்துருக்கொண்டான் சௌபாக்கியா வீட்டுத்திட்ட பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு மற்றும் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் ஆகியோர் உறுதியளித்துள்ளனர்.

சத்துருக்கொண்டான் சௌபாக்கியா வீட்டுத்திட்ட பகுதி மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுவந்த நிலையில் இன்றையதினம் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு மற்றும் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன், பிரதி முதல்வர் டினேஸ், மாநகரசபை உறுப்பினர் ரகுநாதன் ஆகியோர் குறித்த பகுதிக்கு கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டனர்.

சத்துருக்கொண்டான் சௌபாக்கியா வீட்டுத்திட்டம் கடந்த நல்லாட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டாலும் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தினால் குறித்த பகுதியில் குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் தொடர்ச்சியான கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

நல்லாட்சிக் காலத்தில் முறையான தெரிவுகள் முன்னெடுக்கப்படாமல் குறித்த பகுதியில் 139க்கும் அதிகமான வீடுகள் அமைக்கப்பட்டுள்ளபோதிலும் 30 வீடுகளிலேயே மக்கள் குடியிருப்பதாகவும் ஏனைய வீடுகள் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் இதனால் குறித்த பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

வீட்டுத்திட்டம் அமைக்கப்பட்ட காலம் தொடக்கம் முறையான வீதிகள், குடிநீர் வசதிகள், வடிகான் வசதிகள், போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தினால் குறித்த பகுதி மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியில் பெருமளவான வீதிகள் மணல் வீதிகளாக காணப்படுவதனால் போக்குவரத்துச் செய்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் கடல் அருகில் காணப்படும் நிலையில் சுனாமி போன்ற எச்சரிக்கைகள் விடுக்கப்படும் போது கடல் பகுதியை நோக்கியே ஓடும் நிலை காணப்படுவதாகவும் மாற்றுவழி இல்லாத நிலையே உள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

புன்னைக்குடா – பாலமீன்மடு பிரதான வீதியை ஒட்டியதாக சத்துருக்கொண்டான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த வீட்டுத்திட்டத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தினாலேயே மக்கள் தமது வீடுகளுக்கு வந்து வதிவதற்கு தயங்குவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் நீண்டதூரம் செல்லவேண்டிய நிலையில் பொதுப்போக்குவரத்துகள் எதுவும் இல்லாத நிலையில் பிரதான வீதியில் செல்லுவோரை நிறுத்தி தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பும் நிலைமையே காணப்படுவதாகவும் பெண் பிள்ளைகளை பாடசாலைக்கு வேறு நபர்களுடன் அனுப்பிவிட்டு அச்சத்துடனேயே இருந்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அப்பகுதி மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முதல்வர் ஆகியோர் குறித்த பகுதியில் நிலவும் தற்காலிக பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுப்பதாக தெரிவித்தனர்.

தற்காலிக வீதிகளை புனரமைப்பதற்கும் குடிநீரைப் பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக இங்கு மட்டக்களப்பு மாநகரசபை முதல்வரினால் தெரிவிக்கப்பட்டது.

அதேபோன்று கைவிடப்பட்ட வீடுகளில் மீளகுடியமர்த்தவும் அப்பகுதியில் காணப்படும் குறைபாடுகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான பணிப்புரைகளை அதிகாரிகளுக்கு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு விடுத்தார்.

அத்துடன் எதிர்வரும் வரவு செலவுத் திட்டம் ஊடாக நிரந்தரமான வீதிகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் குறித்த பகுதியில் மக்கள் எதிர்நோக்கும் போக்குவரத்துப் பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Posts

வவுனியா மாநகரசபை முதல்வர் பதவி நீக்கம்; கண்டன போராட்டம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்.!

வவுனியா மாநகரசபை முதல்வர் பதவி நீக்கம்; கண்டன போராட்டம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்.!

by Mathavi
June 26, 2026
0

வடமாகாண ஆளுநர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வவுனியா மாநகரசபையின் முதல்வரை, முதல்வர் பதவியிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கியிருப்பது ஜனநாயக விழுமியங்களுக்கு முரணான நடவடிக்கை. மக்களால்...

தெல்தெனிய கொ*லை சம்பவம்; நால்வருக்கு விளக்கமறியல்.!

தெல்தெனிய கொ*லை சம்பவம்; நால்வருக்கு விளக்கமறியல்.!

by Mathavi
June 26, 2026
0

நுவரெலியாவில் உள்ள விடுதியில் தங்கியிருந்த பெண் வைத்தியர் தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் காணப்பட்ட காரொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், அவரது...

பனைநின்றான் கிராமத்திற்கான வீதி, பாலத்தின் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார் ரவிகரன் எம்.பி.!

பனைநின்றான் கிராமத்திற்கான வீதி, பாலத்தின் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார் ரவிகரன் எம்.பி.!

by Mathavi
June 26, 2026
0

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பனைநின்றான் கிராமத்திற்குச் செல்லும் பாலமும் அதனோடிணைந்த ஒருபகுதி வீதி என்பவற்றின் சீரமைப்புப் பணிகள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா...

போதைக்கு எதிராக ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற விழிப்புணர்வு பொதுக்கூட்டம்.!

போதைக்கு எதிராக ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற விழிப்புணர்வு பொதுக்கூட்டம்.!

by Mathavi
June 26, 2026
0

போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் எதிர்ப்பு தினத்தையொட்டி 'போதைக்கு எதிராக ஒன்றிணைவோம்' எனும் தொனிப்பொருளில் பிரஜா சக்தியின் ஏற்பாட்டில் மன்னார் மூர் வீதி கிராமத்தில் இன்று...

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு.!

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு.!

by Mathavi
June 26, 2026
0

பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் ஜூலை 31ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு...

வலி. வடக்கில் காணி விடுவிப்புக் கோரி தொடரும் போராட்டம்.!

வலி. வடக்கில் காணி விடுவிப்புக் கோரி தொடரும் போராட்டம்.!

by Mathavi
June 26, 2026
0

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக பத்தாவது நாளாக...

சரித் அபேசிங்கவை கட்சியிலிருந்து நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி.!

சரித் அபேசிங்கவை கட்சியிலிருந்து நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி.!

by Mathavi
June 26, 2026
0

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு ஒன்றின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, ஹொரனை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்பினர் விபரம் மற்றும் அவர் வகித்த...

வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்கள்; இருவர் உயிரிழப்பு.!

விபத்தில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு.!

by Mathavi
June 26, 2026
0

ஹங்வெல்ல, எம்புல்கம - பனாகொட வீதியில் எம்புல்கம தேவாலயத்திற்கு அருகில் நேற்று வியாழக்கிழமை (25) அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து...

வெவ்வேறு இடங்களில் கோடாவுடனும் மதுபானத்துடனும் மூவர் சிக்கினர்.!

கோடாவுடன் இருவர் கைது.!

by Mathavi
June 26, 2026
0

கஹவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலகமவத்த பகுதியில் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்கு வைக்கபட்டிருந்த கோடாவுடன் நேற்று வியாழக்கிழமை (25) இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கஹவத்தை பகுதியயை சேர்ந்த...

குளத்தில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு.!

குளத்தில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு.!

by Mathavi
June 26, 2026
0

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்விளான் கிராம அலுவலர் பிரிவின் கல்விளாற்குளத்திற்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை (25) பிற்பகல் 3.00 மணியளவில் தூண்டிலில் மீன்பிடிக்கச்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி