யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 2014 முதல் ஏறத்தாழ ஒவ்வொரு வருடமும் 1000 இற்கும் மேற்பட்ட பாரிய சத்திரசிகிச்சைகளும் , 2000 வரையிலான நடுத்தர மற்றும் சிறிய சத்திரசிகிச்சைகளும் மேற்கொண்டதாக யாழ் போதனா வைத்தியசாலையின் என்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணராக கடமையாற்றி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு பணி இடமாற்றம் பெற்றுச் செல்லும் வைத்தியக் கலாநிதி கோபி சங்கர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வருடத்திற்கு 4000 வரையிலான புது நோயாளர்களையும், 1300 இற்கும் மேற்பட்ட பழைய நோயாளர்களிற்குமான சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன
வளைபாதத்திற்கான சிறப்பு கிளினிக் மற்றும் வடமாகாணத்திற்கான வளைபாத சிகிச்சைக்கான பயிற்சிப் பட்டறைகளை வடமாகாண விளையாட்டு மருத்துத்துறையின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் யாழ் போதனா வைத்தியசாலையின் விளையாட்டு மருத்துவ அலகின் பொறுப்பு வைத்திய நிபுணராகவும் செயற்பட்டேன்.
2014 முதல் 2021 வரை ( நிரந்தர வைத்தியர் கடமையேற்கும் வரை) முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி வைத்தியசாலையில் மாதாந்த என்பு முறிவு சத்திரசிகிச்சை கிளினிக் மூலம் வருடந்தோறும் 4000 இற்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கான ஆலோசனைகளும், சிகிச்சைகளும் வழங்கப்பட்டது.
மேலும் இரத்ததான முகாங்கள் ஒழுங்கமைப்பு, விளையாட்டு வீரர்கள், போதனாசிரியர்கள், பயிற்சியாளர்களுக்கான விளையாட்டு, பயிற்சி, உபாதைகளை தடுத்தல், சத்துணவு , முதலுதவி சம்மந்தமான கருத்தரங்குகள், பயிற்சிகள் வழங்கப்பட்டன.
தேசிய , சர்வதேச அளவிலான என்பியல் கருத்தரங்குகள், சத்திரசிகிச்சை பயிற்றுவிப்புக்கள், மற்றும் கல்வியூட்டல் நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு போதனா வைத்தியசாலையின் புனருத்தாபண அலகின் அமைப்பை உருவாக்கி அதனை செயற்படுத்தினோம்.
வைத்தியர், தாதிகளிற்கான அவசர மற்றும் அனர்த்த முகாமைத்துவ பயிற்சிகளும் செயலமர்வுகளும் ஒழுங்குபடுத்தி நடாத்தி
விஞ்ஞான ஆராய்ச்சிக்கான ஆய்வுகளை வைத்தியசாலையில் மேற்கொள்வதற்கான அங்கிகரிக்கும் சபையை உருவாக்கி செயற்படுத்தினோம்.
சர்வதேச சத்திரசிகிச்சை இலங்கை அத்தியாயத்தின் தலைவர், இலங்கை விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் விளையாட்டு உபாதைகள் தவிர்த்தல் சம்மந்தமான குழுவின் தலைவர், இலங்கை சுகாதார அமைச்சின் புனருத்தாரண அமைப்பின் ஆலோசகர், விபத்து மற்றும் காயங்களின் தடுப்புக் குழு, மருத்துவ உபகரண , மருந்துகள் கட்டுப்பாட்டு அலகின் என்பு முறிவு தொடர்பான ஆலோசனைக் குழு உறுப்பினர் போன்ற பதவிகளில் என்னால் முடிந்த வரை பணியாற்றியுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.










