• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 25, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

காற்றாலை மின் உற்பத்தி, கனிய மணல் அகழ்வுக்கு எதிராக ஒன்றுதிரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்.! (2ம் இணைப்பு)

Mathavi by Mathavi
June 11, 2025
in இலங்கை செய்திகள்., மன்னார் செய்திகள், முக்கிய செய்திகள்
0
காற்றாலை மின் உற்பத்தி, கனிய மணல் அகழ்வுக்கு எதிராக ஒன்றுதிரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்.! (2ம் இணைப்பு)
Share on FacebookShare on Twitter

மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மன்னார் பிரஜைகள் குழு மற்றும் சிவில், பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.

மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தலைமையில் ஆரம்பமான குறித்த கவனயீர்ப்பு பேரணியில் மன்னார் மாவட்டத்தில் உள்ள சிவில் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சர்வமத தலைவர்கள், வர்த்தகர்கள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளடங்களாக ஆயிரக்கணக்கான மக்களும் பங்கு கொண்டனர்.

இன்று புதன்கிழமை(11) காலை 9.30 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து குறித்த கவனயீர்ப்பு பேரணி ஆரம்பமாகி பிரதான வீதியூடாக சென்று மன்னார் பஜார் பகுதியை சென்றடைந்தது.

பின்னர் பேரணியில் கலந்து கொண்டவர்கள் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் ஒன்று கூடி பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.

மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வை உடனடியாக நிறுத்து, எங்கள் மண்ணை சுடுகாடாக்காதே, அடிக்காதே அடிக்காதே எங்கள் வயிற்றில் அடிக்காதே, உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு பேரணியில் பங்கேற்றனர்.

இந்த நிலையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு ஞானப்பிரகாசம் அடிகளாரும் வருகை தந்தனர்.

இந்த நிலையில் மன்னார் மக்கள் எதிர்நோக்கும் குறித்த இரு பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கு மகஜர் கையளிக்கும் வகையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனிடம் மன்னார் ஆயர் மற்றும் சர்வமத தலைவர்கள் இணைந்து மகஜரை கையளித்தனர்.

மகஜரை பெற்றுக் கொண்ட அரசாங்க அதிபர் மன்னார் மாவட்ட மக்கள் நீண்ட காலமாக காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறித்து நான் நன்கு அறிவேன்.

மக்களின் கோரிக்கை அடங்கிய மகஜர் சர்வமத தலைவர்கள் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கும் வகையில் என்னிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், நான் உடனடியாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பேன். என அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போதே குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“எங்களையும், எங்கள் வாழ்விடங்களையும், எங்கள் வளங்களையும் பாரிய அழிவிலிருந்து பாதுகாக்க உங்களை வேண்டுகின்றோம்.”

கடந்த ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகளை நாம் சாத்வீக முறையில் தொடர்பாடல்கள் வழியாகவும், போராட்டங்கள் மூலமாகவும், பல துறை சார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் உட்பட பல அரச நிறுவனங்களுடன் மாவட்ட, மாகாண மத்திய அரசின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் மூலமாகவும் எமது நாட்டையும், எமது மாவட்டத்தையும், எமது வாழ்விடங்களையும், எமது வளங்களையும், எமது வாழ்வாதாரங்களையும் பெரும் அழிவிலிருந்து பாதுகாக்கவும், அபிவிருத்தி செய்யவும், மகிழ்வுடன் வாழவும் முயற்சிகள் பலவற்றை முன்னெடுத்து வருகிறோம்.

ஆனால் இதுவரைக்கும் இலங்கை நாட்டு மக்களாகிய நாம் பல்வேறு தளங்களிலும், பல்வேறு விடயங்களிலும், திட்டமிட்ட முறையில் நடைபெறும் பல பயங்கரமான அழிவுகளை சந்தித்து வந்து கொண்டு இருக்கின்றோம். எங்களுக்குரிய மனித உரிமைகள் அனைத்தும் இழந்த நிலையில், நம்பிக்கைகள் அனைத்தும் அழிக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட நிலையில் உங்கள் ஆட்சியில் வாழ நேரிட்டிருப்பது வேதனைக்குரிய, ஏற்றுக்கொள்ளப்பட முடியாத நிலையாக உள்ளது.

எமது மாவட்டத்தில் நடைபெறும் சரியான முறையில் திட்டமிடப்படாத திட்டங்களும், மக்களுடன் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்காத திட்டங்களும், நாட்டிலுள்ள பல்வேறு சட்டதிட்டங்களை மீறி முன்னெடுக்கப்படும் திட்டங்களும், எமது மனித உரிமைகளை மீறும் திட்டங்களையும், எமது வாழ் விடங்களையும், வளங்களையும், வாழ்வாதாரங்களையும் அழிக்கும் திட்டங்கள் அனைத்தையும் உடன் நிறுத்தி, மக்களுடன் கலந்தாலோசித்து மக்களின் நீண்ட வாழ்வினை பாதிக்காத, வளங்களை பாதுகாக்கின்ற, வதிவிடங்களை அழிக்காத, சுற்றுச்சூழலை பாதிக்காத திட்டங்களை மட்டும் முன்னெடுக்குமாறு இலங்கை நாட்டு மக்களாகிய நாம் அன்புடன் கேட்டு நிற்கின்றோம்.

இப்போது எமது மாவட்டத்தில் எமது வாழ்வினை அழித்துக் கொண்டிருக்கும் திட்டங்கள், மனித உரிமை மீறல்கள் சில

  1. மன்னார் தீவில் மேற்கொள்ளப்படும் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்கள் (பல நிறுவனங்கள், இலங்கை மின்சார சபையின் அனுமதியுடன் ஆதரவுடன் செய்து வருகிறது. உதாரணம் தாழ்வுபாடு, கீரி, தரவன் கோட்டை, சாந்திபுரம், சவுத்பார், சிலாவத்துறை, காயாக் குழி போன்ற சில இடங்களில்.
  2. வெளிநாட்டு தனியார் கொம்பனிகளினால் எமது இலங்கை நாட்டையும், மன்னாரையும் முற்றாக அழித்து எங்கள் வளங்கள் முழுவதையும் வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்ல மன்னார் தீவிலும், மன்னார் பெரும் நிலப்பரப்பிலும் மேற்கொள்ளப்படும், மேற்கொள்ளப்படவுள்ள பாரிய வளங்களை அழிக்கும், மனிதன் வாழும் உரிமைகளை அழிக்கும் பல கனிய மணல் அகழ்வு திட்டங்கள். இரண்டு நிறுவனங்களால் கனிய மண் அகழ்வு திட்டங்களை முன்னெடுப்பதற்கான திரைமறைவில் பல முயற்சிகள் செய்யப்படுகிறது.
  3. பல ஆண்டுகளாக அழிக்கப்பட்டு வரும் கடல் வளங்கள், அத்துமீறிய இந்திய மீனவர்கள் வருகை, சட்டங்களுக்கு எதிரான மீன்பிடி முறைகளை பயன்படுத்துதல், திட்டமிடாத அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படுதல், போன்ற செயல்களால் கடல் வளங்கள் பாரிய அளவில் அழிக்கப்பட்டு வருகின்றது.
  4. மக்களின் வாழ்விடங்களும், காணிகளும் அபகரிக்கப்படுதல். மக்களின் தேவை கருதியும், அவர்களின் மனித உரிமைகள் மதிக்கப்படும் வகையில் காணிகள் இன்னும் பங்கிட்டு கொடுக்கப்படாமல் காலங்கள் பிற் போடப்பட்டு பல ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். (இதுவரை 4000 ற்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வதற்கு காணிகள் கேட்டும், 800 க்கு மேற்பட்ட இளையோர் சுய தொழில்கள் தொடங்க காணிகள் கேட்டும், மன்னார் மாவட்ட செயலகத்தில் விண்ணப்பித்துள்ளார்கள்.)

இவை போன்ற பல பாரிய அழிவுகளை இலங்கைக்கும், எமது மாவட்டத்திற்கும், மக்களுக்கும் ஏற்படுத்தும், பல சட்டவிரோத அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரான அனைத்து திடங்களையும் உடன் நிறுத்தி, மக்களுடன் நல்ல முறையில் கலந்துரையாடி, பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் திட்டங்களை கைவிட்டு, மக்களுக்கு நலன்கள் கொண்டு வரும், மக்களை பாதிக்காத திட்டங்கள் நல்ல முறையில் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும் என்று, இந்த கண்டன, எதிர்ப்பு ஊர்வலத்தில் நீங்கள் ஆட்சி செய்யும் இலங்கை நாட்டின், மன்னார் மாவட்டத்தின் மக்களாகிய நாங்கள் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். என ஜனாதிபதிக்கு வழங்கும் வகையில் அரச அதிபரிடம் கையளித்த மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts

ஆசிரியர் சேவை வெள்ளிவிழா: சிகரம் நிறுவன ஆலோசகர் திருமதி வில்வராசா உதயஸ்ரீ பாராட்டி கௌரவிப்பு.!

ஆசிரியர் சேவை வெள்ளிவிழா: சிகரம் நிறுவன ஆலோசகர் திருமதி வில்வராசா உதயஸ்ரீ பாராட்டி கௌரவிப்பு.!

by Mathavi
May 24, 2026
0

சிகரம் நிறுவனத்தின் சிரேஷ்ட ஆலோசகரும், கைவேலி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆசிரியையுமான திருமதி வில்வராசா உதயஸ்ரீ அவர்களின் 25 வருட ஆசிரியர் சேவை வெள்ளிவிழா பாராட்டு...

வடக்கில் தமிழ்த் தேசிய அரசியல் எனும் போர்வையில் சுயநலம் பேணும் தலைவர்களிடம் ஏமாறாதீர்கள்.!

வடக்கில் தமிழ்த் தேசிய அரசியல் எனும் போர்வையில் சுயநலம் பேணும் தலைவர்களிடம் ஏமாறாதீர்கள்.!

by Mathavi
May 24, 2026
0

கடந்த காலங்களில் தமிழ்த் தேசிய அரசியல் என்ற போர்வையில் மக்களை உணர்ச்சிவசப்பட வைத்து, வாக்குகளைப் பெற்றுத் தங்களது சுயநல அரசியல் தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்ட ஏமாற்று அரசியல்வாதிகளின்...

யாழில் நான்கு மாத ஆண் குழந்தை உயிரிழப்பு.!

யாழில் நான்கு மாத ஆண் குழந்தை உயிரிழப்பு.!

by Mathavi
May 24, 2026
0

யாழில் பிறந்து 4 மாதங்களேயான ஆண் குழந்தை ஒன்று இன்றையதினம் உயிரிழந்துள்ளது. வரணி - இயற்றாலை பகுதியைச் சேர்ந்த தவகுமார் பஸ்மிலன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது....

முல்லைத்தீவில் விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் வழி அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம்.!

முல்லைத்தீவில் விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் வழி அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம்.!

by Mathavi
May 24, 2026
0

அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய வெளி மாகாணத்தைச் சேர்ந்த தனியார் பேருந்தின் வழி அனுமதிப்பத்திரம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வடக்கு...

வட்டிக்குப் பணம் வழங்கும் வர்த்தகர் சுட்டுக் கொ*லை; இருவர் கைது.!

துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரைக் கொ*லை செய்ய உதவிய இருவர் கைது.!

by Mathavi
May 24, 2026
0

துப்பாக்கிச் சூடு நடத்தி நபர் ஒருவரைக் கொலை செய்வதற்கு உதவி ஒத்தாசைகளை வழங்கிய குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்களை வலான ஊழல் ஒழிப்பு பிரிவினர் நேற்று (23) கைது...

சரத் பொன்சேகா கூறியுள்ள விசித்திரமான கருத்துக்கள் தொடர்பில் எங்களுக்கு எதுவும் தெரியாது.!

சரத் பொன்சேகா கூறியுள்ள விசித்திரமான கருத்துக்கள் தொடர்பில் எங்களுக்கு எதுவும் தெரியாது.!

by Mathavi
May 24, 2026
0

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலம் மற்றும் அது புதைக்கப்பட்ட இடம் தொடர்பாக முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள...

நாட்டின் உண்மையான பொருளாதார நிலவரத்தை 220 இலட்சம் மக்களும் விளங்கிக்கொள்ள வேண்டும்.!

நாட்டின் உண்மையான பொருளாதார நிலவரத்தை 220 இலட்சம் மக்களும் விளங்கிக்கொள்ள வேண்டும்.!

by Mathavi
May 24, 2026
0

நாட்டில் தற்சமயம் நிலவி வரும் உண்மையான பொருளாதார நிலவரங்கள், டொலர் கையிருப்பின் எதார்த்தம் மற்றும் வருங்காலக் கடன் சவால்கள் குறித்து நாட்டின் 220 இலட்சம் குடிமக்களும் விழிப்போடு...

கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை; பெண் ஒருவர் கைது.!

கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை; பெண் ஒருவர் கைது.!

by Mathavi
May 24, 2026
0

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள முதலைக்குடா பகுதியிலுள்ள வீடு மற்றும் அந்த பகுதியில் உள்ள களப்பு பகுதியில் (வாவியில்) சூட்சுமமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையங்களை...

அனுமதிப்பத்திரம் இன்றி கால்நடைகளை கொண்டு சென்ற ஒருவர் கைது.!

அனுமதிப்பத்திரம் இன்றி கால்நடைகளை கொண்டு சென்ற ஒருவர் கைது.!

by Mathavi
May 24, 2026
0

கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முட்கொம்பன் பகுதியில் இருந்து பாரவூர்தி ஒன்றின் மூலம் அனுமதிப்பத்திரம் எதுவும் இன்றி 22 கால்நடைகளை நேற்று இரவு கொண்டு சென்ற போது...

மஸ்கெலியா புனித சூசையப்பர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா திருப்பலி.!

மஸ்கெலியா புனித சூசையப்பர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா திருப்பலி.!

by Mathavi
May 24, 2026
0

மஸ்கெலியா புனித சூசையப்பர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா திருப்பலி இன்று 24 ஆம் திகதி காலை அருட்தந்தை டொமினிக் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இன்றைய தினம் திருவிழா...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி