கடற்கொள்ளையர்களின் அட்டகாசங்களுக்கு முடிவு கட்டக்கோரி வாழைச்சேனையில் இன்று (13) கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் அல்ஸபா, அல் அமான் வியாபாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்புப்போராட்டம் இன்று (13) காலை வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் மீனவர்கள், பொது மக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் இடம்பெற்றது.
பின்னர் வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திரு லசந்த பண்டார அவர்களிடம் வாழைச்சேனை மீன்பிடி சங்கப் பிரதிநிதிகளால் மகஜரும் கையளிக்கப்பட்டது.
ADVERTISEMENT



