யாழ்ப்பாணம் வடமராட்,சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் சந்நிதியான் ஆச்சிரமத்தால் வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் நடாத்தப்படுகின்ற நிகழ்வு ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம் பெற்றது.
இதில் ஆன்மீக அருளுரையை சைவப்புலவர் எஸ்.ரி. குமரன் “திருப்பெரு வடிவம் ” என்ற தலைப்பில் நிகழ்த்தினார்கள்.
தொடர்ந்து யா/அளவெட்டி அருணாசலம் வித்தியாலயத்தின் கோரிக்கைக்கு அமைவாக, மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்காக எழுதுபொருட்கள் வழங்ககி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள் என எனப் பலரும் கபந்துகொண்டனர்
இதேவேளை சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து பாரம்பரியமாக கதிர்காம பாத யாத்திரையில் ஈடுபடுகின்ற பக்தர்களுக்கு பளை கரந்தாய் பிள்ளையார் ஆலயத்தில் வைத்து உலர் உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கடந்த கடந்த. 04//05/2025 ஞாயிற்றுக்கிழமை வழங்கிவைக்கப்பட்டதுடன் நேற்றைய தினம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள கந்தசாமி ஆலயத்தில் வைத்து அதே யாத்திரிகர்களுக்கு மருத்துவ பொருட்கள், மற்றும் பழ வகைகள், என்பவற்றை ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று கட்டமாக வழங்கி வைத்தார்.

