பிள்ளையான் எனப்படுபவன் இலங்கை இராணவத்தினரதும் தென்னிலங்கை அரசியல் வாதிகளின் ஏவல் நாய் என்பது சற்று அநாகரிகமான வார்த்தையாக தோன்றலாம், ஆனாலும் அதைவிட கனமான/கேவலமான வார்த்தைகளால் அடைமொழி கொடுக்கப்படவேண்டிய கொடூரனே சிவனேசதுரை பெற்றெடுத்த இவன்.
இலங்கையில் இன்னுமொரு சிறிய தேர்தலிற்கான வாக்கு பதிவு இடம்பெறுவதற்கான நாட்கள் அண்மித்து கொண்டிருக்கும் இந்த வேளையில் “ கைவிலங்கை உடைக்க வாக்களியுங்கள்” என்னும் வாசகங்களுடன் பிள்ளையான் எனும் கொலைகாரனின் கைவிலங்குடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அவனது ஒட்டுகுழு துணைக் கொலைகாரர்களினால் பகிரப்படுவதை அவதானிக்கமுடிகிறது.
இதில் வேடிக்கை என்னவென்றால் பிள்ளையான் குழுவின் அத்தனை குற்றச்செயல்களையும், கொடூரங்களையும் கண்டும், கேட்டும், அனுபவித்தவர்கள் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் அதுவும் அவனுக்கெதிரான குற்றச்சாட்டுக்கள் உறுதிபடுத்தப்பட்டுகொண்டிருக்கும் இந்த வேளையில் இப்படியான பதிவுகள் மூலம் அவன் கிழக்கு மீட்க போராடி சிறைசென்ற செம்மலாகவும், அரசியல் பழிவாங்கலாகவும் சிறையில் அடைக்கப்பட்டதாக காட்டி அவனது விடுதலைக்காக வாக்கு கேட்பது.
அவன் சிறை சென்றது ஒன்றல்ல இரண்டல்ல பல ஆட்கடத்தல், கொலை, கப்பம் போன்ற பல கொடூரச் குற்றசெயல்களுக்காக மாறாக மக்களுக்காக அல்ல என்பதை இந்த ஒட்டுகுழு அடிவருடிகள் புரிந்தகொள்ள வேண்டும்.
அவனது கொலை ஏவலாளிகள் 12 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு அவனுக்கெதிரான குற்றச்செயல்களிற்கான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்ட வண்ணம் இருப்பதுடன் அந்த ஒட்டுக்குழுவினரால் கொன்று புதைக்கப்பட்ட உடல்கள் இருக்கும் இடங்களை தோண்டி ஆராய்வதற்கு நீதிமன்ற அனுமதிக்காக காத்திருக்கும் இந்த வேளையில் அவனிடமிருந்து அற்ப சலுகைகளை பெற்ற அடிவருடிகள் அவனை கிழக்கின் மீட்பராக காட்டி வாக்கு கேட்பது அவனை பின்தொடரும் அல்லது அவனுடன் ஒட்டு குழுக்களாக இருந்து கொ லைக்கு உடந்தையாக இருந்தவர்களுக்கு அது பொருந்தலாம்.
ஆனால் மட்டக்களப்பு மக்கள் அதை ஏற்று கொள்ளமாட்டார்கள். ஏனெனில் கருணாவின் துரோகத்தை ஓரிரு நாட்களிலே பகுத்தறிந்து மீண்டும் தலைமையினை பலப்படுத்த கருணா எனும் இனத்துரோகியை கருவறுக்க துணிந்து வெளியேறிய வீரமிகு பிள்ளைகளை பெற்றெடுத்த நெஞ்சுரம் மிக்க மானத் தமிழர்கள் இன்னும் வாழும் மண் அது. ஆகையினால் இந்தத் துரோக கும்பலை நிரந்த வீட்டிற்கு புகுத்த மக்கள் முன்நின்று செயற்படவேண்டும்.
பிள்ளையான் எனப்படுபவன் செய்ததாக காட்டப்படும் அபிவிருத்தி என்பது உங்கள் உறவுகளின் இரத்தத்தை விற்று பெறப்பட்டது என்பதை மறந்துவிடாதீர்கள்.
எத்தனை கடத்தல்கள், துஷ்பிரயோகங்கள், கொலைகள், கொள்ளைகள் இன்று வாழும் சில இளைஞர்களுக்கு இது புரியாமல் இருக்கலாம் அது அவர்களின் அறியாமை. அதை அவர்கள் அனுவித்து உணராமல் இருக்கலாம் வரலாற்றை தேடிப்படியுங்கள். அபிவிருத்தி மாயையில் சிக்காமல் மாயமான உறவுகளை எண்ணுங்கள். உயிருடன் புதைக்கப்பட்ட அந்த அப்பாவிகளின் அவலகுரல்களை கற்பனை செய்து பாருங்கள்.
நீதியின்றி மண்மறைந்து போன அந்த பாவப்பட்ட அப்பாவிகளை நினைத்து பாருங்கள் அப்போது புரியும் இந்த கொலைகாரனின் கோர கொடூரம் எத்தனை வர்ஷாக்கள், எத்தனை தினூசியாக்கள், எத்தனை பிறேமினிகள், எத்தனை குணரெட்ணம்கள், எத்தனை கிருஷ்ணாக்கள், எத்தனை சிவந்தினிகள்,எத்தனை அர்ஷாத்கள், எத்தனை வண்டாராக்கள் இவனது கொலைப் பசிக்கு இரையானவர்கள். வாழவேண்டிய வயதில் தாம் எதற்காக கொல்லப்படுகிறோம் என்பதை அறியாமலே மாண்டுபோன அந்த மனித உறவுகளை கண்முன் நிறுத்துங்கள்.