சென் பிலிப் நேரிஸ் சிறுவர் முன்பள்ளி கண்காட்சி மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
யாழ் வடமராட்சிக் கிழக்கு, செம்பியன் பற்று, வடக்கு சென் பிலிப் நேரிஸ் சிறுவர் முன்பள்ளி கண்காட்சி இன்று (30) காலை 9 மணியளவில் முன்பள்ளி வளாகத்தில் முன்பள்ளி ஆசிரியரின் தலைமையில் ஆரம்பமானது.
இக் கண்காட்சியில் முன்பள்ளி சிறுவர்கள் பல கைவினைப் பொருட்களை தமது கைகளாலும் செய்து காட்சிப்படுத்தி இருந்தனர்.
கண்காட்சியினை பார்வையிடுவதற்கு அயல் முன்பள்ளியான மாமுனை கலைமகள் முன்பள்ளியில் இருந்து சிறுவர்கள் வந்து பார்வையிட்டு சென்றனர்.
கண்காட்சியை பார்வையிட்ட செம்பியன் பற்று பங்குத் தந்தை ஜஸ்டின் ஆதர் அவர்கள் சிறுவர்களை வாழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.


