உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதான அலுவலகம் இரண்டு நாட்கள் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், எதிர்வரும் 05 ஆம், 06 ஆம் திகதிகளில் மூடப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தினத்தன்று, கொழும்பு மாநகர சபையின் இலக்கம் 06 மற்றும் 07 ஆகிய பிரிவுகளின் வாக்களிப்பு நிலையமாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அலுவலகம் செயற்படவுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
ADVERTISEMENT