நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலை முன்னிட்டு, கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட பெரியபரந்தன் வட்டாரத்தில் நேற்றையதினம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
கட்சியின், பெரியபரந்தன் வட்டார வேட்பாளர் சுப்பிரமணியம் யதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், பெரியபரந்தன் வட்டார வேட்பாளர் கெளசலா வைத்தீஸ்வரமூர்த்தி, உருத்திரபுரம் வடக்கு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் தேவராசா சிறீதேவன், கட்சியின் செயற்பாட்டாளர் ஜெயபாலா ஜெயரஜன் ஆகியோர் உரையாற்றியிருந்தனர்.
இதன்போது, உருத்திரபுரம் வடக்கு மற்றும் பெரியபரந்தன் கிராமங்களைச் சேர்ந்த சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், கட்சியின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.







