• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, May 13, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

அத்துமீறி நுழைந்த பசு; நுழைவாயிலில் அமர்ந்து உரிமையாளர் போராட்டம்.!

Mathavi by Mathavi
April 9, 2025
in இலங்கை செய்திகள்., யாழ் செய்திகள்
0
அத்துமீறி நுழைந்த பசு; நுழைவாயிலில் அமர்ந்து உரிமையாளர் போராட்டம்.!
Share on FacebookShare on Twitter

உரிமையாளரால் மேச்சலுக்காக கட்டவிழ்த்து விடப்பட்ட பசு மாடு ஒன்று வேலணை பிரதேச சபை வளாகத்துக்குள் நுழைந்து தாவரங்களை தின்று சேதமாக்கியதால் குறித்த பசுமாட்டடை பிரதேச சபையினர் சட்டத்தின்படி பிடித்து கட்டிவைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலணை நகர்ப்பகுதியில் கால்நடை பண்ணை நடத்திவரும் பெண் உரிமையாளர் ஒருவர் பிரதேச செயலக நுழைபாதையை வழிமறித்து போராட்டம் ஒன்றை இன்றையதினம் (09.04.2025) முன்னெடுத்ததால் குறித்த பகுதியில் சிலமணி நேரம் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வேலணை நகர்ப் பகுதியில் பால் உற்பத்தியை மையமாக கொண்டு சுயதொழிலாக பசு மாடு வளர்ப்பில் ஈடுபட்டுவரும் பெண் ஒருவரது பசுமாடு ஒன்று கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில், வேலணை நகர் பகுதியில் அமைந்துள்ள பிரதேச சபை வளாகத்துக்குள் நுழைந்து அங்கிருந்த சிறு தாவரங்களை சேதப்படுத்தியதாக கூறி பிரதேச சபையின் ஊழியர்களால் குறித்த பசுமாடு பிடிக்கப்பட்டு முதற்கட்ட நடவடிக்கையான உரிமையாளர் தேடிவரும் வரையான சட்ட விதிமுறைகளுக்கேற்ப தமது பராமரிப்பில் வைத்திருந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த பசுமாட்டின் உரிமையாளர் இரண்டாவது நாளான இன்று பிரதேச சபையின் பொறுப்பில் குறித்த பசுமாடு இருப்பதை அறிந்துகொண்டு அதை பிரதேச சபை சட்டமுரணாக பிடித்து கட்டிவைத்துள்ளதாக தெரிவித்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாட்டை விடுவிக்குமாறு கோரி தான் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்

மேலும் தான் மாடு வளர்ப்பு தொழிலை பல இலட்சங்கள் முதலீடு செய்து மேற்கொண்டுவரும் நிலையில், தற்போது நிலவும் வெப்பமான காலநிலையை கருத்தில் கொண்டு மாடுகளின் நலன்கருதி அவற்றை அவிழ்த்து விட்டதாகவும் அவ்வாறான நிலையில், ஒரு பசு மாடு குறித்த பிரதேச சபையின் வளாகத்துக்குள் சென்றதாக கூறி பிடித்து கட்டிவைக்கப்பட்டுள்ளது.
இது சட்டமுரணானது. இவ்வாறான நிலை எமது தொழிலை பாதிக்கின்றது. எனவே சட்டத்துக்கு முரணாக பிரதேச சபையால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பசு மாட்டை தண்டங்கள் இன்றி விடுவிக்க வேண்டும் எனவும், இனிமேல் இவ்வாறு மாடுககள் பிடிக்கப்படக்கூடாது எனவும் கோரியே போராட்டத்தை முன்னெடுத்துள்ளேன் என தெரிவித்தார்.

இது தொடர்பில் வேலணை பிரதேச சபையின் செயலரிடம் கேட்டபோது,
எமது பிரதேசத்தில் கால்நடைகளால் வருடாவருடம் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுவருகின்றன. கட்டாக்காலி மாடுகள் ஒருபுறமிருக்க வளர்ப்பு மாடுகள் கட்டவிழ்த்து விடப்படுவதால் ஏற்படும் பிரச்சினைகளும் நாளாந்தம் காணப்படுகின்றது.
இதேநேரம் வளர்ப்பு பிராணிகளை கட்டி வளர்க்க வேண்டியது உரிமையாளர்கள் ஒவ்வொருவரதும் பொறுப்பாகும்.

குறிப்பாக வங்களாவடி சந்தி பகுதியை அண்டிய சூழலில் மாலை 6 மணிக்கு பின்னர் நாளாந்தம் 50 க்கு மேற்பட்ட மாடுகள் வீதிகளில் தமது இரவு நேரத்தை கழிக்கின்றன. இதனால் நாளாந்தம் விபத்துக்களும் ஏற்படுகின்றன. ஒருசில பாரிய விபத்துக்களும் ஏற்பட்டுள்ளன.

இதேநேரம் வீட்டுப் பயிர்களை அழிப்பதாகவும் எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துவருகின்றன. குறித்த வீதியில் உறங்கும் மாடுகளில் அதிகமானவை வளர்ப்பு மாடுகளாகவே இருக்கின்றன. இதை கட்டுப்படுத்துமாறும் தொடர்ச்சியாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன. நாம் மக்களின் நலன்களை கருத்திற்கொண்டே செயற்பட்டு வருகின்றோம். எமது சபைக்கு கட்டாக்காலி மாடுகளானாலும் சரி வளர்ப்பு மாடுகளானாலும் சரி ஆபத்துக்கள் மற்றும் சேதங்களை ஏற்படுத்தும் வகையில் இருந்தால் அல்லது நுழைந்தால் பிடிப்பதற்கும் அதற்கு சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் அதிகாரம் உண்டு.

கடந்த மாதம் நடைபெற்ற வேலணை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் உலாவுகின்ற மாடுகள் மற்றும் கட்டாக்காலிகள் தொடர்பில் ஏன் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை? அல்லது அது தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் கேள்வி எழுப்பப்பட்டது.

அதன்பின்னர் இவ்வாறான அசௌகரியங்களை உண்டுபண்ணும் கால்நடைகளை கட்டப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது.
குறித்த கூட்டத்தில் எவரும் மாடுகளை பிடிக்க வேண்டாம், தண்டப்பணம் அறவிட வேண்டாம் என கூறவில்லை. நடவடிக்கை எடுக்குமாறே வலியுறுத்தியிருந்தனர்.

இதேவேளை குறித்த பெண் இவ்வாறான சம்பவம் தொடர்பில் பலமுறை பிரதேச சபைக்கு தண்டம் செலுத்தியும் ஒரு தடவை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தண்டிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டு தண்டமும் செலுத்திய ஒருவர்.

அவ்வாறான சம்பவம் ஒன்றே இன்றும் நடந்துள்ளது. நாம் சட்டத்தை தான் செய்தோம். எவரது கால்நடைகளும் இன்னொருவரது வீடுகளுக்கோ அல்லது பொது நிறுவனங்களின் வளாகத்துக்குள்ளோ சென்றால் அல்லது நாசங்களை ஏற்படுத்தினால் அதை பிடித்து அதற்கான நடவடிக்கை எடுக்க முடியும்.

எனவே வளர்ப்பு மாடுகளை ஒவ்வொருவரும் தத்தமது வளர்ப்பிடங்களில் பாதுகாப்பாக பராமரிக்க வேண்டுமே தவிர அவற்றை கட்டவிழ்து விடுவது இவ்வாறான பிரச்சினைகளையே ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துடன் குறித்த பசு மாட்டின் உரிமையாளர் பிரதேச சபையின் சட்டங்களின் பிரகாரம் அதற்கான தண்டப்பணமாக 5600 ரூபாவினை செலுத்தியே இன்றும் தனது பசுமாட்டை மீட்டுச் சென்றுள்ளார் என்றும் தெரிவித்திருந்த குறிப்பிடத்தக்கது.

Related Posts

வடக்கு மாகாண பெண் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ள  பாடசாலை மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் கையளிப்

வடக்கு மாகாண பெண் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ள பாடசாலை மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் கையளிப்

by Bharathy
May 12, 2026
0

மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட மன்/வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவிகளான ஆர்.மேரி தயானா மற்றும் எஸ். தமிழினி ஆகிய இரு மாணவிகளும்...

வறுமை நிலையிலுள்ள விவசாயிகளின் நலனை உறுதிப்படுத்தும் வகையில் காணி பங்கீடுகள் அமைய வேண்டும்.!

வறுமை நிலையிலுள்ள விவசாயிகளின் நலனை உறுதிப்படுத்தும் வகையில் காணி பங்கீடுகள் அமைய வேண்டும்.!

by Mathavi
May 12, 2026
0

சிறுபோக நெற்செய்கைக்காக அரச காணிகளை பங்கீடு செய்யும் போது, வறுமை நிலையில் உள்ள விவசாயிகளும் பயன்பெறும் வகையில் அப்பங்கீடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்திப் பவனி ஆரம்பம்.!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்திப் பவனி ஆரம்பம்.!

by Mathavi
May 12, 2026
0

இறுதிப் போரில் முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான உறவுகளின் நினைவுகளைச் சுமந்த 'முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்திப் பவனி' இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் இருந்து உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது. தமிழ்த்...

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு; தலையில் கை வைத்த சுமந்திரன்.!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு; தலையில் கை வைத்த சுமந்திரன்.!

by Mathavi
May 12, 2026
0

தவறான ஆட்சேபனையை தாக்கல் செய்தமைக்காக தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் வழக்குச் செலவாக தலா பத்தாயிரம் ரூபாவை வழக்காளியான பொன்னம்பலம் இராசேந்திரத்துக்கு செலுத்த...

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.!

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.!

by Mathavi
May 12, 2026
0

மன்னார் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மற்றும் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை மீண்டும் ஒப்படைக்க கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும், பிரதி...

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பிக்குகளுக்கு மீண்டும் விளக்கமறியல்.!

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பிக்குகளுக்கு மீண்டும் விளக்கமறியல்.!

by Mathavi
May 12, 2026
0

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகளும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை...

எயார்பஸ் மோசடி விவகாரம்; இரண்டரை மணிநேரம் மஹிந்தவிடம் தீவிர விசாரணை.!

எயார்பஸ் மோசடி விவகாரம்; இரண்டரை மணிநேரம் மஹிந்தவிடம் தீவிர விசாரணை.!

by Mathavi
May 12, 2026
0

சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல், வாங்கல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று வாக்குமூலத்தைப் பதிவு செய்தது. சுமார் இண்டரை மணிநேர...

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கல்.!

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கல்.!

by Mathavi
May 12, 2026
0

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று (12) மன்னாரில் அனுஷ்டிக்கப்பட்டது. மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார்...

ஹட்டனில் சிறப்பாக நடைபெற்ற சர்வதேச செவிலியர் தினம்.!

ஹட்டனில் சிறப்பாக நடைபெற்ற சர்வதேச செவிலியர் தினம்.!

by Mathavi
May 12, 2026
0

இன்று 12 ஆம் திகதி காலை ஹட்டனில் சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. உலக செவிலியர் சேவையின் நிறுவனரான புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்தநாளுடன் ஒத்துப்போகும் சர்வதேச செவிலியர்...

மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பசளையினை பெற்றுத்தர ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.!

மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பசளையினை பெற்றுத்தர ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.!

by Mathavi
May 12, 2026
0

மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பசளையினை உடனடியாக பெற்றுத்தர ஜனாதிபதி அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிலைமை மறுக்கப்பட்டால் விவசாயிகளுடன் நாங்களும் இணைந்து வீதியில் இறங்க வேண்டிய நிலையைத்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி