அனுமதிப்பத்திரம் இன்றி மாடுகளை கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் வட்டுக்கோட்டை பொலிஸால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த குறித்த சந்தேகநபர் சுழிபுரத்தில் இருந்தே லொறியில் 3 மாடுகளை கடத்திச் செல்ல முற்பட்டவேளை இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சந்தேகநபரை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. விசாரணைகளின் பின்னர் அவர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.