• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, May 30, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

இலங்கை தமிழரசுக்கட்சி இம்முறை தனித்தே உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றது.!

Mathavi by Mathavi
March 8, 2025
in இலங்கை செய்திகள், மட்டக்களப்பு செய்திகள்
0 0
2
இலங்கை தமிழரசுக்கட்சி இம்முறை தனித்தே உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றது.!
Share on FacebookShare on Twitter

இலங்கை தமிழரசுக்கட்சி இம்முறை தனித்தே உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பாக போட்டியிடும் பேச்சுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கூட்டம் இன்று(08) மாலை மட்டக்களப்பில் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் நாடாளுமன்ற குழு பேச்சாளருமான ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள், வட்டாரக்கிளை தலைவர்கள், மாவட்ட கிளை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சியானது இம்முறை உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் வேட்பாளர்கள் தெரிவு தொடர்பிலும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

இங்கு கருத்து தெரிவித்த கட்சியின் பொதுச்செயலாளர்,

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்பாளர்கள் தெரிவு தொடர்பாக இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளை கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பிரதானமாக ஒவ்வொரு பிரதேசமாக அலசி ஆராய்ந்து என்ன முறையிலான அணுகு முறையில் நாங்கள் இந்த தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பலருடைய கருத்துக்களும் கேட்கப்பட்டு சுமூகமான முடிவுகள் எட்டப்பட்டிருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரையில் நாங்கள் போட்டியிடுகின்ற சகல உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி வாகை சூடலாம் என்று நம்பிக்கையோடு எங்களுடைய உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். வருகின்ற வாரத்திற்குள் நாங்கள் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்து விடுவதாக தீர்மானித்திருக்கின்றோம்.

ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிடுவது வேண்டாம் என்று கூட்டத்தின் போது அனைவராலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. அந்த முயற்சி முடிவடைந்து விட்டது என்பது தான் என்னுடைய கருத்து. எங்களுடைய கட்சியின் தலைவர் அதற்கான ஒரு முயற்சியை முன்னெடுத்திருந்தார். ஆனால் எங்களுடன் பங்காளிகளாக இருந்த கட்சிகள் தாங்கள் வேறு ஒரு கூட்டணியாக இணைந்து இருக்கின்றோம் என்று எங்களுக்கு அறிவித்திருக்கின்றார்கள்.

ஆகையினால் ஒரு அணியாக ஒன்று சேர்ந்து போட்டியிடுவது என்பது இப்போது முடியாத விடயம். தமிழரசு கட்சி தனி அணியாக போட்டியிடும் தேர்தலுக்குப் பின்னர் நிர்வாகங்களை அமைக்கின்ற விடயத்தில் ஒவ்வொரு கட்சிகளுடன் இணைந்து தான் நிர்வாகத்தை அமைக்க வேண்டியதாக இருக்கும். அதுதான் உள்ளூராட்சி மன்ற தேர்தலின் முறைமை ஆகையினால் அதை குறித்து தொடர்ச்சியாக பல கட்சிகளோடும் பேசிக் கொண்டு இருக்கின்றோம்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டு ஊடகத்தின் நேர்காணல் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர்,

பல கருத்துக்களை கூறியிருக்கின்றார் என கூறுகின்றீர்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விளக்கங்கள் கூற முடியாது. சில கருத்துக்கள் அவர் ஏற்றுக் கொண்டிருக்கின்றார். சில அத்துமீறல்கள் இடம்பெற்று இருக்கின்றது என்று ஏற்றுக் கொண்டிருக்கின்றார். வேறு சில விடயங்களை மூடி மறைத்து இருக்கின்றார்.

ஆகையினால் ஒட்டுமொத்தமாக அதைக் குறித்து என்னால் கருத்து கூற முடியாது. ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்ற தேர்வு குழு விசாரணை செய்தபோது அதற்கு முன்பாக சாட்சியம் கொடுத்திருந்தார். அதிலும் அவர் அரசாங்கத்தின் தலைவராக அல்லது பிரதம மந்திரியாக நான் என்னுடைய பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றேன் என்று கூறியவர். அன்றும் அந்த நேர்காணலில் அது தொடர்பாக ஒரு இது வார்த்தைகளை அவரது வாயிலிருந்து வந்ததை நான் அவதானித்தேன்.

ஆனால் ஜனாதிபதி ஆணைக்குழு அவர் ஓரம் கட்டப்பட்டிருந்தாலும் கூட அதனை அவர் நாடாளுமன்றத்திற்கு தெரிவித்திருக்க வேண்டும் என்கின்ற குறையினை அவர்கள் கண்டிருக்கின்றார்கள் அது நியாயமான ஒரு குறை.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நாங்கள் முற்றும் மாறுபட்ட நிலைமையினையே எதிர்பார்க்கின்றோம். தேசிய மக்கள் சக்திக்கு ஒரு அலையோடு மக்கள் வாக்களித்ததை நாங்கள் கண்டோம். ஆனால் இந்த ஒரு சில மாதங்களுக்குள் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களது அபிலாசைகள் தொடர்பான விடயங்களில் எந்தவித முன்னேற்றத்தையும் காட்டவில்லை ஒரு சறுக்கல் போக்கையே காட்டிக் கொண்டிருக்கின்றது என்பதை காணமுடிகின்றது. இதனை மக்களும் நன்றாக அறிந்திருக்கின்றார்கள் அதற்கு மேல் அதிகமாக மத்திய அரசாங்கம் அவர்களிடம் இருந்தாலும் இருக்கட்டும் ஆனால் எங்களுடைய ஊர் ஆட்சி உள்ளூர் ஆட்சி எங்களோடு இருக்க வேண்டும் என்பதை எங்களுடைய மக்கள் முனைப்பாக இருக்கின்றார்கள்.

தமிழரசு கட்சி தனித்துப் போட்டியிடுகின்றது. நான் ஏற்கனவே கூறியது போன்று ஒரு கட்சி தனியாக நிர்வாகத்தை ஆட்சி அமைப்பது என்பது சாத்தியப்பாடு குறைவு. இது தேர்தல் முறைமைலி இருக்கின்ற விடயம். ஆகையினால் தேர்தலில் பிற்பாடு நாங்கள் மற்றைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து தான் பல இடங்களில் நிர்வாகங்களை அமைக்க வேண்டிய தேவை கட்டாயமாக இருக்கின்றது.

Thinakaran
411 723.1K
  • Videos
  • Playlists
  • NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி
    NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி 1 day ago
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! 2 days ago
  • போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.!
    போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.! 2 days ago
  • 398 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Mathavi

      Mathavi

      Related Posts

      கொழும்பில் கனமழை காரணமாக ஐவர் காயம்..!

      கொழும்பில் கனமழை காரணமாக ஐவர் காயம்..!

      by Thamil
      May 30, 2025
      0

      கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (30) பிற்பகல் பெய்த கனமழையால் ஏற்பட்ட பேரழிவில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. காயமடைந்த ஐவரும் தற்போது...

      உங்களை நம்பி நாட்டுக்கு வந்தால் கைது செய்து சிறையில் அடைப்பதா? – அநுரவிடம் மனோ கேள்வி..!

      உங்களை நம்பி நாட்டுக்கு வந்தால் கைது செய்து சிறையில் அடைப்பதா? – அநுரவிடம் மனோ கேள்வி..!

      by Thamil
      May 30, 2025
      0

      "வெளிநாடு சென்ற தமிழர்களை நீங்கள்தானே திரும்பி வரச் சொல்கிறீர்கள்? உங்களை நம்பி நாட்டுக்கு வந்தால் அவர்களைக் கைது செய்வதா? அவர்களைப் பிணையில் வெளியே விடாமல் எதற்காகச் சிறையில்...

      தோட்ட அதிகாரிகள் தமிழ் இளைஞர் மீது தாக்குதல் ; நடவடிக்கை எடுக்குமாறு மனோ வலியுறுத்து..!

      தோட்ட அதிகாரிகள் தமிழ் இளைஞர் மீது தாக்குதல் ; நடவடிக்கை எடுக்குமாறு மனோ வலியுறுத்து..!

      by Thamil
      May 30, 2025
      0

      "ஆலயச் சிலை பீடத்தில் பாதணியுடன் காலைத் தூக்கி வைக்க வேண்டாம் என்று சொன்ன கமலநாதன் இமேஷ்நாதன் என்ற தமிழ் இளைஞரை, “நீ கும்பிடுவது, சிலையின் தலையா? காலையா?...

      தமிழ் அகதிகள் விடயத்தில் அநுர அரசு இரட்டை வேடம் – சுமந்திரன் தெரிவிப்பு..!

      தமிழ் அகதிகள் விடயத்தில் அநுர அரசு இரட்டை வேடம் – சுமந்திரன் தெரிவிப்பு..!

      by Thamil
      May 30, 2025
      0

      "தமிழ்நாட்டில் இருந்து முறைப்படி தாயகம் திரும்புபவர்களையும் சிறையில் தள்ளுவதன் மூலம் தமிழர்கள் நாட்டுக்குள் வரக்கூடாது என அநுர அரசு விரும்புகின்றதா?" என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில்...

      கொட்டித் தீர்க்கப் போகும் மழை ; வானிலை அவதான நிலையம் விடுத்த எச்சரிக்கை..!

      கொட்டித் தீர்க்கப் போகும் மழை ; வானிலை அவதான நிலையம் விடுத்த எச்சரிக்கை..!

      by Thamil
      May 30, 2025
      0

      அடுத்த 36 மணி நேரத்திற்கு மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை...

      தாயகம் திரும்பிய 75 வயது முதியவர் சிறையில் அடைப்பு..!

      தாயகம் திரும்பிய 75 வயது முதியவர் சிறையில் அடைப்பு..!

      by Thamil
      May 30, 2025
      0

      போர்க் காலத்தில் உயிரைக் காக்க இலங்கையில் இருந்து தமிழகத்துக்குத் தப்பிச் சென்ற முதியவர், சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறியமைக்காக ஜூன் மாதம் 5 ஆம் திகதி வரை...

      இறக்கும் முன் நீதியை வழங்குங்கள் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் கோரிக்கை..!

      இறக்கும் முன் நீதியை வழங்குங்கள் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் கோரிக்கை..!

      by Thamil
      May 30, 2025
      0

      காணாமல் போன உறவுகளுக்கு என்ன நடந்தது என்று அறியாமலே பலர் மரணித்துள்ளனர். எனவே எஞ்சியுள்ள நாங்களும் இறக்கும் முன்னர் எமக்கான நீதி கிடைக்கவேண்டும் என்று வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட...

      நுவரெலியாவில் தொடரும் மழை, பலத்த காற்று ; வீட்டுக்கூரைகள் சேதம்..!

      நுவரெலியாவில் தொடரும் மழை, பலத்த காற்று ; வீட்டுக்கூரைகள் சேதம்..!

      by Thamil
      May 30, 2025
      0

      நுவரெலியா பிரதேச செயலகத்தின் இயங்கும் பம்பரக்கலை தோட்டத்தில் இன்று (30) காலை தொடர் லயன் குடியிருப்பின் 4 வீடுகளின் கூரைகள் சேதமடைந்து உள்ளன. மேலும் பம்பரக்கலை இப்பகுதிக்கு...

      விசேட அதிரடிப் படையினரால் முற்றுகையிடப்பட்ட பிள்ளையானின் அலுவலகம்.!

      விசேட அதிரடிப் படையினரால் முற்றுகையிடப்பட்ட பிள்ளையானின் அலுவலகம்.!

      by Mathavi
      May 30, 2025
      0

      முன்னாள் பிரதி அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அலுவலகம் இன்று (30.05.2025) கொழும்பில் இருந்து வந்த குற்றத் தடுப்பு புலனாய்வு மற்றும் விசேட அதிரடிப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது,...

      Load More
      Next Post
      யாழ். வலையொளியாளரின் (YouTuber) செயலுக்கு ரஜீவன் எம்.பி கடும் எதிர்ப்பு.!

      யாழ். வலையொளியாளரின் (YouTuber) செயலுக்கு ரஜீவன் எம்.பி கடும் எதிர்ப்பு.!

      சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மருத்துவ முகாம்.! (சிறப்பு இணைப்பு)

      சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மருத்துவ முகாம்.! (சிறப்பு இணைப்பு)

      யாழில் கல்சியம் நீக்கி திரவத்தை அருந்தியவர் உயிரிழப்பு.!

      யாழில் கல்சியம் நீக்கி திரவத்தை அருந்தியவர் உயிரிழப்பு.!

      Comments 2

      1. Navaratnam Mukunthan says:
        3 months ago

        That’s good.Then only you can be defeated

        Reply
      2. Kopithan King says:
        3 months ago

        இவர் யார் இவரா தமிழர் பிரச்சினை தீர்க்கப்போகிறார். இவரின் கொள்கை என்ன ஒன்றும் புரியவில்லை

        Reply

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி