பாணந்துறை பகுதியில் இருந்து சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய சென்ற பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் நேற்று 16 ம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது.
பாணந்துறை பகுதியில் இருந்து சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த 53 வயதுடைய தீபாணி ஹேமமாலி என்ற பெண்ணிற்கு நல்லதண்ணி வாகனம் நிறுத்தும் பகுதியில் வைத்து கடும் சுகயீனம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த பெண் நோயாளர் காவு வண்டி மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்ததுள்ளார் என மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் உள்ள வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவரது சடலம் வைத்தியசாலையில் உள்ள பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் உடற் கூற்று பரிசோதனையின் பின்னர் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது என நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.