சராசரியாக 20 சதவீதத்தால் மின்கட்டணத்தை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த கட்டண திருத்தம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாக அதன் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் ஜயனாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.
வீட்டுப் பிரிவின் கீழ் 0-30 வரையிலான அலகுகளுக்கான கட்டணம் ரூ.6 ஆக இருந்ததை ரூ.4 ஆகவும், 31-60 வரையிலான அலகுகளுக்கான கட்டணம் ரூ.9 இல் இருந்து ரூ.10 ஆகவும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, முதல் ஆறு மாதங்களுக்கு புதிய கட்டண திருத்ததின் கீழ், கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.