பொங்குதமிழ் பிரகடனத்தின் 24 ஆவது ஆண்டு எழுச்சிநாள் நிகழ்வுகள் இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பொங்குதமிழ்ப் பிரகடனம் யாழ்.பல்கலைக்கழக பொதுநினைவுத் தூபி முன்பாக இடம்பெற்றது. பொங்குதமிழ் பிரகடன உரையினை தொடர்ந்து பொங்குதமிழ் தூபிக்கு மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
17-1-2001 அன்று தமிழ் மக்களின் அபிலாஷைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித்தாயகம், தமிழ்த்தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும் என பொங்குதமிழ் பிரகடனம் செய்யப்பட்டது.




